ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக சிரியாவில் ருஷ்யத் தலையீட்டின் பின்னணி

(இது 1915 இறுதியில் எழுதப்பட்ட கட்டுரை. இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘சமகாலம்’ இதழில் வெளிவந்தது )

சிரியாவில் நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 2,20,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4,00,000 பேர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா அவை கூறுகிறது. வரலாறு காணாத பெரிய அகதிகளின் பிரசினையை இன்று உலகம் எதிர்கொண்டுள்ளது. மிகக் கொடூரமான அவல நிலையில் இன்று சிரிய அகதிகள் அலையும் கொடுமை நேர்ந்துள்ளது. சிரியாவுக்குள் அனைத்து அகக் கட்டுமானங்களும் அழிந்துள்ளன. சமீப காலத்தில் எந்தத் தீர்வும் கிட்டும் என்கிற நம்பிக்கை யாருக்கும் இல்லை.

இந்தப் பின்னணியில்தான் இந்த மாதத் தொடக்கத்தில் சிரியாவில் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திக் கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எல் (ISIL) படைத் தளங்களின் மீது ருஷ்யா விமானத் தாக்குதலைத் தொடங்கியது.  துருக்கி உட்பட ஆறு அமெரிக்க ஆதரவுநாடுகள் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. சிரியாவில் அசாத் ஆட்சியை வீழ்த்தி அங்கு தனக்குச் சாதகமான ஒரு பொம்மை ஆட்சியை நிறுவ விரும்பும் இன்னொரு அமெரிக்க ஆதரவு நாடான சவூதி அரேபியாவும் கடாரும் கூட இந்தக் கண்டன அறிக்கையுடன் உடன்படும் நாடுகள்தான்.

சிரியாவில் தற்போதைய குடியரசுத் தலைவராக உள்ள பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கெதிரான உளாட்டுப்போர் அரபு வசந்தத்தின் தொடர்ச்சியாக 2011ல் தொடங்கியதுதான் எனினும் துனிசியா, எகிப்து முதலான நாடுகளில் முளைத்த அரபு வசந்த எழுச்சிக்கும் இதற்கும் சில வேறுபாடுகள் உண்டு. அரபு வசந்த எழுச்சிகள் தன்னெழுச்சியாக அந்தத நாட்டு மக்கள் நீண்ட நாள் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக எழுந்தவை. அவை அமைதி வழியில் நடந்தவை. பெரும்பாலான மக்களின் ஆதரவு இவற்றிற்கு இருந்தது.

ஆனால் ஊழலும் அடக்குமுறையும் நிறைந்த அசாத்தின் ஆட்சிக்கு எதிராக சிரியாவில் உருவான ஆயுதப் போராட்டத்திற்கு முழுமையான மக்கள் ஆதரவு இருந்தது எனச் சொல்ல இயலாது. இங்கு அது ஒரு உள்நாட்டுப் போராக வடிவெடுத்தது. அசாத் ஆட்சி அதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியதன் விளைவே இன்றைய சிரிய அகதிகள் பிரச்சினை.. அசாத் ஆட்சிக்கு எதிரான இன்றைய இந்த உள்நாட்டுப் போருக்கு சவூதி, கடார், துருக்கி முதலான நாடுகள் வெளிப்படையாக ஆதரவாக உள்ளன. வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமிய முடியரசுகள் அசாத்துக்கு எதிரான இந்த அமைப்புகளுக்கு பெரிய அளவில் நிதி உதவி அளிக்கின்றன.

“ஒரளவு மென்மையான” (moderate) இந்த அமைப்புகளுக்குத் தாங்கள் உதவுவதாக அமெரிக்கா வெளிப்படையாகவே கூறுகிறது. யார் அந்த மென்மையான அமைப்புகள்?

ஒருபக்கம் தலைகளை வெட்டி வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் ISIS அமைப்பு; இன்னொரு பக்கம் சிரியாவின் அல் கொய்தாவான அல் நுஸ்ரா முன்னணி, அப்புறம் சலாஃபிஸ்டுகளான சில அல்ஷாம்ஸ் இயக்கங்கள் ஆகியவைதான் இந்த “மென்மையான பயங்கரவாத” அமைப்புகள். இவை கைப்பற்றும் பகுதிகளில் உடனடியாக ஷரியா சட்டத்திண் ஆட்சி என்கிற பெயரில் கடும் அடக்குமுறைகள், சிறுபான்மையினர் மற்ரும் அல்லாவைட் முஸ்லிம்கள் கொல்லப்படுதல், அகதிகளாக்கப்படுதல் நிகழ்கின்றன.

அமெரிக்கா சவூதி முதலியன இப்படி ISIS இயக்கத்திற்கு உதவுவதன் பின்னணி என்ன?

உண்மையில் இன்று சிரியாவுக்குள் மூன்று போர்கள் நடந்து கொண்டுள்ளன. 1. அசாத் அரசிற்கும் உள் நாட்டு ஆயுதக் குழுக்களுக்குமான போர். 2. ஈரான் மீது சவூதி நடத்தும் மறைமுக யுத்தம். 3.உக்ரேன் போருக்கு அடுத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நடக்கும் போர்.

பஷார் அசாத் அரசுக்கு இன்று பக்க பலமாக இருப்பது லெபனானின் ஹிஸ்புல்லா, மற்றும் குர்திஷ் இயக்கங்கள், ஈரான்  மற்றும்ருஷ்ய நாடுகள் ஆகியன. ஈரானைத் தன் ஜென்மப் பகையாக நினைக்கும் அமெரிக்க ஆதரவு அரசான சவூதி, அசாத்தை வீழ்த்தி சிரியாவில் தனக்கும் அமெரிக்காவுக்கும் ஆதரவான ஒரு பொம்மை அரசை அமைத்துவிட்டால் ஈரானை புவீயல் ரீதியாகத் துண்டித்து விடலாம் என நினைக்கிறது.

அமெரிக்கா அசாத் அரசுக்கு அளிக்கும் ஆதரவுக்குப் பின்னணியாக இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று, பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் உள்ள லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் அரசு ஆகியவற்றை ஒடுக்குவது. மற்றது சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரை முகாந்திரமாக வைத்து ருஷ்யாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் தற்போது எண்ணை ஏற்றுமதி மூலம் உருவாகியுள்ள நட்பை அழிப்பது. பெரிய அளவில் இன்று ஐரோப்பாவிற்கு ருஷ்யாவிலிருந்து எண்ணை ஏற்றுமதி ஆவது குறிப்பிடத் தக்கது.

இந்த வல்லாதிக்க வல்லூறுகளுக்கு இடையிலான வஞ்சகப் போரின் அனைத்துத் துயரங்களும் இன்று பரிதாபத்திற்குரிய சிரியா நாட்டு மக்கள் மீது விடிந்துள்ளது.

ருஷ்யா இன்று அசாத் அரசுக்கு ஆதரவாக விமானத் தாக்குதலை மட்டுமே நடத்துகிறது. ISIS அமைப்பின் தளங்களைக் குறி வைத்தே தாக்குதல் நடக்கிறது. முதற் கட்டத் தாக்குதலிலேயே ISIS பயங்கரவாத அமைப்பின் ஆயுத பலம் பெரிய அளவில் குறைந்துள்ளது எனத் தெரிகிறது.


இந்த ISIS அமைப்பு என்பதென்ன?

நான்குநாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேய்ர் 2003 ல் அமெரிக்கத் தலைமையில் தாங்கள் ஈராக் மீது படை எடுத்து அதை அழித்து, சதாமைத் தூக்கிலிட்டு அந்த நாட்டச் சின்னாபின்னமாக்கிய நிகழ்வு தவறுதான் எனவும் தான் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். பின் விளைவுகளைப் பற்றித் தாங்கள் யோசிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் புஷ் அந்தக் காலத்திலேயே சதாம் ஹுசேனிடம் பேரழிவு ஆட்ய்தங்கள் இருந்ததாகத் தாங்கள் நம்பியது தவறுதான் எனவும் உளவுத் தகவல்கள் தவறாகிவிட்டன எனவும் கூறியது நினைவிருக்கலாம். பேரழிவு ஆயுதங்களை சதாம் பதுக்கி வைத்துள்ளார் என்கிற காரணம் சொல்லித்தான் ஈராக் மீதான படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது என்பது நினைவிற்குரியது.

டோனி பிளேய்ர் இன்னொன்றையும் கூறியுள்ளார். இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் பயங்கரவாத அமைப்பு உருவாகியுள்ளது தங்களின் இந்த அநீதியான தாக்குதலின் விளைவுதான் என்கிற ஒப்புதல் வாக்குமூலம்தான் அது.

ISIS அல்லது ISIL அல்லது IS என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் சந்தேகமில்லை. தேசங்களைக் கடந்த ஒரு இஸ்லாமிய ஆட்சி என்கிற பெயரில் ஒரு புதிய கலீபா ஆட்சியை (caliphate) உருவாக்குவதாகப் பீற்றிக் கொண்டு அது அமெரிக்க மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் பின்புலத்துடன் மேற்கொள்ளும் வன்முறைகளை யாரும் ஏற்க இயலாது.

ஆனால் அதை மதிப்பிடும்போதும் விமர்சிக்கும்போதும் அதைச் சமகால வரலாற்றிலிருந்து பிரித்து விமர்சித்துவிடவும் இயலாது.ISIS பற்றிப் பேசும்போது நாம் மூன்று விடயங்களை மறந்து விடக் கூடாது. அவை:

1, இது 2003 க்குப் பின் 2007 வாக்கில், அதாவது அமெரிக்காவின் இரண்டாம் ஈராக் யுத்தத்திற்குப் பின் உருவானது 2. பிரிட்டிஷ் அரசளவு பரப்புள்ள புவிப்பரப்பின் மீது அதிகாரம் செலுத்தக் கூடியதாகவும், நாளொன்றுக்கு சுமார் 9,000 பீப்பாய் எண்ணை ஏற்றுமதி செய்யும் அளவிற்குப் பொருளாதாரப் பலம் உள்ளதாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள ISIS இன்று பல நாடுகளில் கிளை பரப்பியுள்ள போதும் அது முளைவிட்ட நாடு சதாமுக்குப் பிந்திய ஈராக். 3. அது ஒரு சன்னி முஸ்லிம்களின் அமைப்பாகவே உள்ளது என்பது.

ஈராக் மீது அமெரிக்கா இரண்டாம் முறையும் படை எடுத்து (2003) சதாமைக் கொன்று, அந்த நாட்டைச் சின்னா பின்னமாக்கி, தனது பொம்மை அரசு ஒன்றை நிறுவி, ஈராக் இராணுவத்தைக் கலைத்து, ஏராளமானோரைக் கொன்று, ஏராளமான முன்னாள் இராணுவத்தினரையும் மக்களையும் சிறைகளில் அடைத்து, சதாம் ஆட்சியின்போது அதிகாரத்தில் இருந்த சன்னி முஸ்லிம்களை கடுமையாக  ஒடுக்கியிருந்த பின்னணியில் அங்கு முதலில் அமைதி வழியில்தான் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தைத் தொடங்கினர்,

அவர்களின் கோரிக்கைகள் மூன்றுதான். அவை: 1. சன்னி முஸ்லிம்கள் மீதான ஒடுக்கு முறைகளைக் கைவிட்டு அவர்களது உரிமைகளை அனுமதித்தல் 2. பிரகடனப்படுத்தப்பட்டிருந்த கொடிய அடக்குமுறைச் சட்டத்தைக் கைவிடல். 3. யாரை வேண்டுமானாலும் மரணதண்டனக்கு உள்ளாக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து மரணதண்டனைக்கு முடிவு கட்டுதல்.

ஆனால் அமெரிக்க எடுபிடிப் பிரதமர் நூருல் மாலிக்கி அந்தப் போராட்டத்தை எள்ளி நகையாடினார். கொடும் அடக்குமுறைகளின் ஊடாக அதை முடிவுக்குக் கொண்டு வந்தார், அதில் பலர் கொல்லப்பட்டனர். அமைதி வழியில் போராடிய தங்களின் மீது இராணுவம் ஏவப்பட்ட போதும் கூட போராடியவர்கள் தம் அமைதி வழியைக் கைவிடவில்லை. அந்தப் போராட்டங்களை “ஈராக் வசந்தம்” எனக் குறித்தவர்களும் உண்டு.

ஃபலூஜா மற்றும் ரமாடியை மையமாகக் கொண்டு இனக்குழு மக்கள் தங்கள் உரிமைகளை வேண்டி பல்வேறு இராணுவக் குழுக்களாகத் திரண்ட போதும் கூட அவை எல்லாம் ISIS போன்ற பயங்கரவாத அமைப்பாக இல்லை. அவர்கள் எல்லாம் ஆயுதம் எடுத்ததையும் கூட நாம் சரியான கோணத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும். அங்கு அன்று, ஏன் இன்றும் கூட ஆயுதங்கள் மூலமாகத்தான் அரசுடன் உரையாட இயலும்.

ஆனால் இந்த அமைப்புகளைத் தரம் பிரித்து அணுகாமல் இவை எல்லாவற்றையும் பயங்கரவாத அமைப்பாகவே அறிவித்து இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இப்படியான பின்னணியில் உருவானதுதான் ISIS என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முன்னாள் ஈராக் இராணுவத்தினர், அதிகாரம் இழந்து ஒடுக்கப்பட்ட சன்னி முஸ்லிம்கள், சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைகளுக்கு ஆளானோர் இவர்கள் எல்லோரும் திரள் திரளாக ISIS பக்கம் சென்றனர். தற்போதைய ISIS தலைவர் அபு பக்ர் அல் பாக்தாதி அப்படி ஈராக் சிறையில் அடைப்பட்டுக் கிடந்தவர்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

ஐ.எஸ் பயங்கரவாதத்தை அமெரிக்காதான் உருவாக்கியது என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஈராக்கின் மீது அது மேற்கொண்ட நீதியற்ற போரின் விளைபொருளாக உருவான இந்த அமைப்பை இன்று அதே அமெரிக்கா தன் எதிரிகளை ஒட்டுக்குவதற்குப் பயன்படுத்துகிறது.

சுற்றிலும் நேட்டோ படைகளால் முற்றுகை இடப்பட்ட நிலையில் உள்ள ருஷ்யா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அமெரிக்காவில் இந்த முயற்சிக்கு எதிரானதுதான் சிரியா மீதான இன்றைய அதன் விமானத் தாக்குதல். உலக அரசியல் சதுரங்க ஆட்டத்தின் இன்றைய பலி சிரிய மக்கள்.

ஹார்ட் மற்றும் நெக்ரியின் பேரரசும் பெருந்திரளும்

     கார்ல் மார்க்ஸ் 9           மக்கள் களம், பிப்ரவரி, 2017                             

இன்றைய முதலாளிய உலகு வெற்றிக் களிப்புடன் வலம் வருகிறது. சாமுவேல் ஹட்டிங்டன், ஃப்ரான்சிஸ் ஃபுகுயாமா, மில்டன் ஃப்ரைட்மன் முதலான சுதந்திரச் சந்தை மற்றும் உலகமய ஆதரவுக் கோட்பாட்டாளர்கள் இனி முதலாளியத்தை எதுவும் சாய்த்துவிட முடியாது என்கிற எள்ளலோடு எழுதிக் குவிக்கின்றனர். ‘அமெரிக்க நூற்றாண்டு’ தொடங்கிவிட்டது என்கின்றனர். புவி அரசியல், உலக மயம், உலகளாவிய வெகுமக்கள் பண்பாடு ஆகியவற்றுக்குத்தான் இனி காலம் எனக் கண் சிமிட்டுகின்றனர். இன்னொரு பக்கம் பாரம்பரிய இடதுசாரிகள் வெளியில் சற்று வீறாப்போடு காட்டிக் கொண்டபோதும் உள்ளுக்குள் பெரிதும் நம்பிக்கை இழந்து நிற்கின்றனர். மிகச் சில உற்சாகக் குரல்கள், அவையும் மிகப் பலவீனமாகவே இடது வெளியிலிருந்து மேலெழும்புகின்றன. அப்படி ஒலிப்பவையும் மாறியுள்ள நிலையை ஏற்றுக் கொள்ளவோ, அந்த அடிப்படையில் 1990 களுக்குப் பிந்திய உலகைப் புரிந்துகொள்ளவோ இயலாமல் சற்றே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. உள்ளார்ந்த நம்பிக்கை இன்மையை மறைத்துக் கொண்டு பழைய பார்வைகளை மிகவும் அடங்கிய குரலில் ஒலிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் மிஷேல் ஹார்ட் என்கிற  ஃப்ரென்ச் இலக்கியக் கோட்பாட்டாளரும், அன்டோனியோ நெக்ரி என்கிற இத்தாலியத் தத்துவ இயலாளரும் இணைந்து எழுதிய “பேரரசு – EMPIRE” எனும் நூல் இன்றைய உலகைச் சற்றே மாறுபட்ட கோணத்தில் அணுகிப் புதிய நம்பிக்கை ஒன்றை முன் வைக்கிறது. கடந்த இருபதாண்டு கால தொழிலாளர்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் தோல்வி அடைந்துவிட்டன என்கிற எண்ணம், அந்த அடிப்படையிலான வெற்றிக் களிப்பு அல்லது அந்த அடிப்படையிலான நம்பிக்கை இழப்பு இரண்டுமே அபத்தம் என்கின்றனர் ஹார்ட்டும் நெக்ரியும்.

டெல்யூஸ், கட்டாரி எனும் இரண்டு ஃப்ரென்ச் தத்துவ இயலாளர்களின் முக்கிய நூலாகிய ‘ஆயிரம் மேடைகள்’ அல்லது ‘ஆயிரம் மேற்தளங்கள்’ எனும் பொருள்படும் Thousand Platues  எனும் நூலின் வழியில் நின்று இன்றைய உலகை அவர்கள் அணுகுகின்றனர். வழக்கமான ‘பொருளாதாரம்’, ‘அரசியல்,’ ‘வரலாறு’ என்கிற வகைப்பாட்டுக்குள் இன்றைய உலகைப் புரிந்துகொள்வது என்பதற்குள் முடக்கிக் கொள்ளாமல் சட்டம், தத்துவம், உளவியல், அரசியல், பொருளாதாரம், புனைவு முதலான கல்வியியல் ஒழுங்குகளை (disciplinary boundaries) எல்லாம் கடந்து திமிறி இயங்கும் ஒரு எழுத்து முறையை ஹார்ட்டும் நெக்ரியும் கையாள்கின்றனர்.

அன்டோனியோ நெக்ரி 1970 களில் இத்தாலியில் எழுச்சியுற்றிருந்த “நகர்ப்புற கெரில்லா இயக்கம்” “செம்படை” (urban guerilla movement / Red Brigade) ஆகியவற்றில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இரண்டு கொலைகள், ஜனநாயக அரசைக் கவிழ்க்கச் சதி செய்தது ஆகிய குற்றங்களுக்காகத் தேடப்பட்டபோது ஃப்ரான்சுக்குத் தப்பியோடி வந்தவர் அவர். மித்தரென்ட் கொள்கையின் அடிப்படையில் ஃப்ரான்ஸ் அவருக்கு அடைக்கலம் அளித்தது. ஃபூக்கோ, தெரிதா, கடாரி முதலான உலகப் புகழ் பெற்ற தத்துவ இயலாளர்களுடன் பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய நெக்ரி 1997 ல் இத்தாலிய அரசுடன் பேச்சு வர்த்தை நடத்தித் தனக்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டுகள் தண்டனையைப் 13 ஆண்டுகளாகக் குறைத்துக் கொண்டார். பின் நாடு திரும்பி 13 ஆண்டுகள் கிராம்சி இருந்த அதே சிறையில் கழித்துப் பின் விடுதலையாகித் தற்போது இன்னொரு தத்துவ இயலாளரான ஜூடித் ரிவெல்லுடன் ஃப்ரான்சில் வாழ்கிறார். ஹார்ட்டும் பேராசிரியராக மட்டுமின்றி அரசியற் களத்திலும் செயல்படுபவர்.

ஹார்ட்டும் நெக்ரியும் முன்வைக்கும் இன்றைய உலகு குறித்த பார்வையை நாம் இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்:

உலக முதலாளிய வீச்சின் ஊடாக தேசிய அரசுகளின் (Nation States) அதிகார அமைப்புகள் சிதைந்து கொண்டிருப்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம். உலகமயம் என்பதை வெறுமனே சந்தைகளை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் ஒரு செயற்பாடாக மட்டும் சுருக்கிப் பார்க்க இயலாது. உண்மையில் அரசுக் கட்டுப்பாடுகள் என்பன உதிர்ந்து அழிவதற்குப் பதிலாக அவை இன்னும் பெரிய அளவில் பெருகி ஒன்றோடொன்று பிணைந்து, தேசங்களைக் கடந்த ஒன்றாக இப்போது ஒழுங்கமைக்கப் படுகிறது. இதைத்தான் அவர்கள் பேரரசு (Empire) என்கின்றனர். இந்த ஒழுங்கமைப்பின் வடிவத்தை ஒரு “தலையற்ற முண்டம்” (acephalous)  என்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். ‘பேரரசு’ என்கிற கருத்தாக்கம் இங்கே விளிம்புகளிலிருந்து மையத்தை நோக்கி கப்பம் குவிவது என்கிற வழக்கமான பொருளில் முன்வைக்கப்படவில்லை. மாறாக இது ஒரு ஃபூக்கோவியக் கருத்தாக்கத்தில் இங்கு பயன்படுத்தப்படுகிறது. பேரரசு என்பது இங்கு இறுக்கமான வடிவம் கொண்டிராமல் பரவலாக அமைந்துள்ள. அடையாளமற்ற ஒரு உலகு தழுவிய வலைப்பின்னல் என்பதைக் குறிக்கிறது. முந்தைய காலங்களைப் போல எந்த ஏகாதிபத்தியத்தின் காலனி இது என எந்த இரு தேச அரசுகளையும் அடையாளம் காட்ட முடியாத சுரண்டல் இது.

இறையாண்மை என்பது இப்போது தேச அரசுகளிலிருந்து நீக்கப்பட்டு உலகமயமாக்கப் படுகிறது. தேச அரசுகளின் காலத்தில் அதிகாரம் குவிந்திருந்த புள்ளியை அடையாளம் காட்டுவது போல இப்போது  அப்படி ஒரு ஒற்றை அதிகார மையத்தை அடையாளம் காட்ட இயலாது என்பது இதன் பொருள். இதைத்தான் தலையற்ற முண்டமாக இன்றைய அதிகார அமைப்பு உள்ளது என்கிறோம். சதாமுக்குப் பிந்திய ஈராக்கில் சட்ட ஒழுங்கு அதிகாரம் பன்னாட்டுப் படைகளிடம் தரப்பட்டது நினைவிருக்கலாம். எனவே இன்றைய உலகில் யார் நம்மை ஆட்சி செய்கிறார், யாரால் நாம் கண்காணிக்கப்படுகிறோம், யாருடைய காவல்துறையும் உளவுத்துறையும் நம்மைக் கண்காணிக்கின்றன என்பதெல்லாம் அறுதியிட்டுச் சொல்ல முடியாத ஒன்றறாக அமைகின்றன.

இந்தப் புதிய ஒழுங்கைத்தான் ஹார்ட்டும் நெக்ரியும் “பேரரசு” என்கின்றனர். “ரோமப் பேரரசு’ உருவாக்கத்திலிருந்து அவர்கள் இந்தக் கருத்தாக்கத்தைத் தருவிக்கின்றனர். பல்வேறு நகரமைய ஆளுகைளை (polis) இணைத்து ரோமப் பேரரசு உருவானதோடு இன்றைய உலகமயச் சூழலை அவர்கள் பொருத்திப் பார்க்கின்றனர். சென்ற அத்தியாயத்தில் விளிம்புகளிலிருந்து மையங்களை நோக்கி தேச வளங்கள் உறிஞ்சப்படுகின்றன எனிம் இம்மானுவேல் வாலர்ஸ்டைனின் கோட்பாட்டைப் பார்த்தோம். அந்தப் பொருளிலும் ‘பேரரசு’ என்கிற கருத்தாக்கம் இங்கே முன்வைக்கப்படவில்லை. மாறாக இந்தத் தலையற்ற முண்டமாக உள்ள அதிகார அமைவின் உறுப்புகள்- அவற்றின் மக்கள் திரள்கள், தகவல்கள், சொத்துக்கள் முதலானவற்றின் தொடர்ச்சியான ஓட்டங்கள் அல்லது பாய்ச்சல்கள் என்பன அத்தனை எளிதாக எந்த ஒரு பெரு நகர ஒற்றைக் கட்டுப்பாட்டு மையங்களிலிருந்தும் கட்டுப்படுத்தப்பட இயலாதவை. ஆம், தகவல்களும் சொத்துக்களும் மட்டுமின்றி மனிதர்களும், ஊழியர்களும் இன்று தேசங் கடந்து பாய்ந்தோடில் கொண்டே இருக்கக் கூடிய நிலையில் உள்ளனர். இந்தப் ‘பாய்ச்சல்’ (flow) என்பது physical ஆக நிகழ்வதாகவும் இருக்கலாம். இல்லை நீங்கள் உங்கள் இடத்தில் இருக்கும்போதே ஒரு அடையாளமற்ற அதிகாரத்தால் நீங்கல் எங்கிருந்தோ கட்டுப்படுத்தப்படலாம், சுரண்டப்படலாம்.

பழைய தேச அரசுகளை (nation States) மையமாகக் கொண்ட உலகில் ஒரு ஆதிக்கம் செலுத்தும் மையமாக ஆளும் வர்க்கமும், ஆளுகைக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் திரளும் என்பதான எளிய வடிவில் இந்த ஆளுகை இப்போது இருப்பதில்லை; மாறாக இந்த அசமத்துவம் இப்போது உடைந்து, சிதைந்து மிகவும் சிக்கலான வடிவில் நிகழ்கிறது. ஒரு ஒட்டுமொத்தத்திற்குள் அடக்கிக் கணிக்க இயலாத தன்னிச்சையான கிரக சஞ்சாரங்களைப் போல, பேரரசுக்குள்  இந்த ஏற்றத்தாழ்வுகளும் இயக்க நிலையில் உள்ளன. முழுமை என்பது இன்று இவ்வாறு கையகப்படுத்த இயலாத ஒன்றாகக் கரைந்து ஆவியாகியுள்ளது. நாம் இதுகாறும் அரசியல் அறிவியலில் விரித்துரைத்து வந்த, அரசு / சமூகம் ; போர் / அமைதி ; கட்டுப்பாடு /  சுதந்திரம் ; மையம் / விளிம்பு – முதலான எதிர்வுகள் அனைத்தும் இன்று ஏற்பட்டுள்ள முழுமையின் சிதைவில் பொருளற்றதாகி விட்டன. இன்றைய இந்த அமைப்பை இதற்கு முந்திய தேசிய அரசுகளின் அடிப்படையிலான காலனியம் மற்றும் “விளிம்பு – மையம்” முதலான வடிவங்களில் புரிந்து கொள்ள முடியாது என்றால் பின் எப்படி இதை எளிமையாகப் புரிந்து கொள்வது?

பண்டைய நகர அரசுகளில் இருந்து ரோமப் பேரரசு உருவானது குறித்த வரலாற்றை விளக்க அன்றைய வரலாற்றை அப்போது எழுதிய பாலிபியஸ் எத்தகைய முறையியலைக் கையாண்டாரோ அது இப்போது நமக்குத் தேவைப்படுகிறது என்கின்றனர் ஹார்ட்டும் நெக்ரியும்.

1990 களுக்குப் பின் உருவாகியுள்ள இன்றையப் புதிய உலக ஒழுங்கை அவர்கள் வரைந்து காட்டும் முறையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். பண்டைய ரோமப் பேரரசுடன் இன்றைய நிலையை ஒப்பிட்டால் அமெரிக்காவின் அணு வல்லமை என்பது  அரசின் ஆற்றலாகவும். G7 மற்றும் பன்னாட்டு கார்ப்பொரேட்கள் என்பன அதிகார வர்க்கமாகவும், இணையம் (internet) என்பது ரோம அரசில் அமைந்திருந்த ஜனநாயக நெறியாகவும் அமைகின்றன (Bomb / Money / Ether) என ஒரு மேலோட்டமான பார்வையில் இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த ரோமப் பேரரசு எனும் அமைப்பு  என்றென்றைக்குமாக நிலைத்திருக்கவில்லை. இன்றைய பேரரசும் ரோமப் பேரரசைப் போலவே அதன் அழிவைத் தனக்குள்ளேயே வைத்துள்ளது. பாலிபியஸ் ரோமப் பேரரசின் உருவாக்கத்தைச் சொன்னார் என்றால் கிப்பனும், மான்டேஸ்குவும் ரோமப் பேரரசின் வீழ்ச்சியைச் சொன்னார்கள். கிறிஸ்துவத்தின் எழுச்சி அன்றைய வரலாற்றில் ரோமப் பேரரசை வீழ்த்தியது.  தொடர்ந்த பழங்குடி மக்களின் இடப்பெயர்வுகள் என்பன மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.

அன்று மதம் இந்த மாற்றத்திற்கான முகமையாக (agency) இருந்திருக்கலாம். முதலாளியமாக வரையறுக்கப்பட்ட காலத்தில் மாற்றத்திற்கான அந்த முகமை தொழிலாளி வர்க்கமாக இருந்தது. இன்று அப்படியான மாற்றம் ஒன்றை நிகழ்த்த வல்லதாகப் “பெருந்திரள் மக்கள்” (multitude) என்கிற கருத்தக்கத்தை ஹார்ட்டும் நெக்ரியும் முன்வைக்கின்றனர்.

இதைப் புரிந்து கொள்ள இன்றைய பேரரசை ஒரு பிரமிட் வடிவத்தில் கற்பனை செய்து கொள்வோம். அதன் உச்சத்தில் இப்போதைய ‘சூப்பர் பவர்’ ஆக உள்ள அமெரிக்கா, G8 நாடுகள், உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் NATO, IMF ஆகியன உள்ளன என்போம். அடுத்த படிநிலையில் பன்னாட்டு கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் இதர தேசிய அரசுகள் உள்ளன என்போம். இந்தப் பிரமிடின் அடித்தளமாக உலக நாடுகளின் பொது அவை (UN General Assembly), மத அமைப்புகள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள் முதலானவை அமைகின்றன. இன்றைய அமைப்பில் “மக்களை” பிரதிநிதித்துவப் படுத்துவதாக இந்த கடைசிப் படிநிலை கொள்ளப்படுகிறது. இந்தப் பின்னணியிலிருந்துதான் இன்றைய புரட்சிகர சக்தியான ‘பெருந்திரள்’ உருவாகும் என்கின்றனர் ஹார்ட்ட்டும் நெக்ரியும்.

“சுதந்திரமான உற்பத்திச் செயற்பாடுகளின் உலகலாவிய வெளிப்பாடுதான்” இன்றைய மாற்றத்தை ஏற்படுத்தும் பெருந்திரளாக உருப்பெறுகிறது. இதை “பெருந்திரளாக” உருப்பெறவைக்கும் வேலையை ‘பேரரசே’ அதன் செயல்பாடுகளின் ஊடாக நிறைவேற்றி விடுகிறது. தன்னை அழிப்பதற்கான கருவியை அது தனக்குள்ளேயே வளர்த்து உருவாக்கிவிடுகிறது என்பது இதுதான்.

இன்றைய முதலாளிய உலகம் சேவைகள் (services) உடபட எல்லாவற்றையும் உலகமயமாக்கியுள்ளது,. தன் சேவைகளுக்குத் தொடர்ந்து எல்லை கடந்து இயங்கும் தொழிலாளிகளை அது உருவாக்குகிறது. தேச எல்லைகளற்ற உலகம் என்கிறபோது அவ்வாறே தேச எல்லைகளற்ற ஜனநாயகமும் தேவையாகிறது. வேறு சொற்களில் சொல்வதானால் சுரண்டலும் தேச எல்லைகளற்றதாக ஆகிறது. சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களும் அப்படி ஆகின்றன.

கார்ல் மார்க்ஸ் எதிர் கொண்டது 19ம் நூற்றாண்டு முதலாளியம். கரியாலும், பெட்ரோலாலும் இயங்கும் எந்திரங்களில் வேலை செய்கிற, மையப்படுத்தப்பட்ட, மேலிருந்து கீழாக படி நிலை வரிசையில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம் அது. இன்று material labour என்பது இல்லாமல் போய்விட்டது. எல்லை கடந்து இருந்து கொண்டு சுரண்டும் முதலாளி. எல்லை கடந்து சென்று சுரண்டலுக்கு உள்ளாகும் தொழிலாளி என்றெல்லாம் சூழல் மாறியுள்ளது. தொழில்முறையிலும், தொழிலாளிகள் மத்தியிலும் ஒரு ‘நாடோடித் தன்மை’ (nomadism) உருவாகியுள்ளது.  இந்த மாற்றங்கள் எல்லாம் தொழிலாளி வர்க்கம் என்பது உலகளாவிய ‘பெருந்திரளாக’ உருப் பெறும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னைவிட அகன்ற உலகளாவிய ஒன்றிணைவு இப்போது சாத்தியமாகி உள்ளது.

சுரண்டல் இன்று குறையவில்லை. அதிகமாகியுள்ளது. அதே நேரத்தில் நாடுகளிடையே ஒரு வகையில் முதலாளித்துவ அதிகாரம் பரவி இருக்கிறது. சுரண்டலில் வடக்கு / தெற்கு, முதல் உலகம் / மூன்றாம் உலகம் என்றெல்லாம் இப்போது பிரித்துப் பார்ப்பது சிரமம். முதல் உலகிற்குள் மூன்றாம் உலகும், மூன்றாம் உலகிற்குள் முதல் உலகையும் அடையாளம் காண முடிகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் முதலாளியச் சுரண்டல், உபரி மதிப்பு உருவாக்கம் என்கிற வடிவங்கள் எதுவும் மாறவில்லை. மார்க்ஸ் இவை குறித்துச் சொன்னவை அனைத்தும் அதே போலவும், சொல்லப்போனால் இன்னும் கொடிய முறையிலும் தொடர்கின்றன. ஆனால் தொழில்முறை, தொழிலாளி தனது தன்னிலையை அமைத்துக் கொள்ளும் சூழல் முதலியன பெரிய அளவில் மாறியுள்ளன. இந்த மாற்றங்கள் என்பன, முதலாளி வர்க்கமும், முதலாளியச் சிந்தனையாளர்களும் எண்ணுவதையும் சொல்லுவதையும் போல, இனி போராட்டங்களுக்கும் புரட்சிகர மாற்றங்களுக்கும் சாத்தியங்கள் இல்லை என்பதைச் சுட்டவில்லை. அப்படிக் கருதுவது. பெருந்திரளை வெறும் நுகர்வோர்களாக (consumers) அணுகும் மூடத்தனம். இது அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வது.

மார்க்சியர்களும் ‘பெருந்திரளை’ அடையாளம் கண்டு, அதன் வல்லமையையும், அதன் இன்றைய பண்புகளையும், வடிவ மாற்றங்களையும் உரிய புரிதல்களுடன் அணுகுதல் அவசியம்.

 

 

 

 

 

 

ஹார்ட் மற்றும் நெக்ரியின் பேரரசும் பெருந்திரளும்

     கார்ல் மார்க்ஸ் 9                                       

இன்றைய முதலாளிய உலகு வெற்றிக் களிப்புடன் வலம் வருகிறது. சாமுவேல் ஹட்டிங்டன், ஃப்ரான்சிஸ் ஃபுகுயாமா, மில்டன் ஃப்ரைட்மன் முதலான சுதந்திரச் சந்தை மற்றும் உலகமய ஆதரவுக் கோட்பாட்டாளர்கள் இனி முதலாளியத்தை எதுவும் சாய்த்துவிட முடியாது என்கிற எள்ளலோடு எழுதிக் குவிக்கின்றனர். ‘அமெரிக்க நூற்றாண்டு’ தொடங்கிவிட்டது என்கின்றனர். புவி அரசியல், உலக மயம், உலகளாவிய வெகுமக்கள் பண்பாடு ஆகியவற்றுக்குத்தான் இனி காலம் எனக் கண் சிமிட்டுகின்றனர். இன்னொரு பக்கம் பாரம்பரிய இடதுசாரிகள் வெளியில் சற்று வீறாப்போடு காட்டிக் கொண்டபோதும் உள்ளுக்குள் பெரிதும் நம்பிக்கை இழந்து நிற்கின்றனர். மிகச் சில உற்சாகக் குரல்கள், அவையும் மிகப் பலவீனமாகவே இடது வெளியிலிருந்து மேலெழும்புகின்றன. அப்படி ஒலிப்பவையும் மாறியுள்ள நிலையை ஏற்றுக் கொள்ளவோ, அந்த அடிப்படையில் 1990 களுக்குப் பிந்திய உலகைப் புரிந்துகொள்ளவோ இயலாமல் சற்றே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. உள்ளார்ந்த நம்பிக்கை இன்மையை மறைத்துக் கொண்டு பழைய பார்வைகளை மிகவும் அடங்கிய குரலில் ஒலிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் மிஷேல் ஹார்ட் என்கிற  ஃப்ரென்ச் இலக்கியக் கோட்பாட்டாளரும், அன்டோனியோ நெக்ரி என்கிற இத்தாலியத் தத்துவ இயலாளரும் இணைந்து எழுதிய “பேரரசு – EMPIRE” எனும் நூல் இன்றைய உலகைச் சற்றே மாறுபட்ட கோணத்தில் அணுகிப் புதிய நம்பிக்கை ஒன்றை முன் வைக்கிறது. கடந்த இருபதான்டு கால தொழிலாளர்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் தோல்வி அடைந்துவிட்டன என்கிற எண்ணம், அந்த அடிப்படையிலான வெற்றிக் களிப்பு அல்லது அந்த அடிப்படையிலான நம்பிக்கை இழப்பு இரண்டுமே அபத்தம் என்கின்றனர் ஹார்ட்டும் நெக்ரியும்.

டெல்யூஸ், கட்டாரி எனும் இரண்டு ஃப்ரென்ச் தத்துவ இயலாளர்களின் முக்கிய நூலாகிய ‘ஆயிரம் மேடைகள்’ அல்லது ‘ஆயிரம் மேற்தளங்கள்’ எனும் பொருள்படும் Thousand Platues  எனும் நூலின் வழியில் நின்று இன்றைய உலகை அவர்கள் அணுகுகின்றனர். வழக்கமான ‘பொருளாதாரம்’, ‘அரசியல்,’ ‘வரலாறு’ என்கிற வகைப்பாட்டுக்குள் இன்றைய உலகைப் புரிந்துகொள்வது என்பதற்குள் முடக்கிக் கொள்ளாமல் சட்டம், தத்துவம், உளவியல், அரசியல், பொருளாதாரம், புனைவு முதலான கல்வியியல் ஒழுங்குகளை (disciplinary boundaries) எல்லாம் கடந்து திமிறி இயங்கும் ஒரு எழுத்து முறையை ஹார்ட்டும் நெக்ரியும் கையாள்கின்றனர்.

அன்டோனியோ நெக்ரி 1970 களில் இத்தாலியில் எழுச்சியுற்றிருந்த “நகர்ப்புற கெரில்லா இயக்கம்” “செம்படை” (urban guerilla movement / Red Brigade) ஆகியவற்றில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இரண்டு கொலைகள், ஜனநாயக அரசைக் கவிழ்க்கச் சதி செய்தது ஆகிய குற்றங்களுக்காகத் தேடப்பட்டபோது ஃப்ரான்சுக்குத் தப்பியோடி வந்தவர் அவர். மித்தரென்ட் கொள்கையின் அடிப்படையில் ஃப்ரான்ஸ் அவருக்கு அடைக்கலம் அளித்தது. ஃபூக்கோ, தெரிதா, கடாரி முதலான உலகப் புகழ் பெற்ற தத்துவ இயலாளர்களுடன் பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய நெக்ரி 1997 ல் இத்தாலிய அரசுடன் பேச்சு வர்த்தை நடத்தித் தனக்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டுகள் தண்டனையைப் 13 ஆண்டுகளாகக் குறைத்துக் கொண்டார். பின் நாடு திரும்பி 13 ஆண்டுகள் கிராம்சி இருந்த அதே சிறையில் கழித்துப் பின் விடுதலையாகித் தற்போது இன்னொரு தத்துவ இயலாளரான ஜூடித் ரிவெல்லுடன் ஃப்ரான்சில் வாழ்கிறார். ஹார்ட்டும் பேராசிரியராக மட்டுமின்றி அரசியற் களத்திலும் செயல்படுபவர்.

ஹார்ட்டும் நெக்ரியும் முன்வைக்கும் இன்றைய உலகு குறித்த பார்வையை நாம் இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்:

உலக முதலாளிய வீச்சின் ஊடாக தேசிய அரசுகளின் (Nation States) அதிகார அமைப்புகள் சிதைந்து கொண்டிருப்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம். உலகமயம் என்பதை வெறுமனே சந்தைகளை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் ஒரு செயற்பாடாக மட்டும் சுருக்கிப் பார்க்க இயலாது. உண்மையில் அரசுக் கட்டுப்பாடுகள் என்பன உதிர்ந்து அழிவதற்குப் பதிலாக அவை இன்னும் பெரிய அளவில் பெருகி ஒன்றோடொன்று பிணைந்து, தேசங்களைக் கடந்த ஒன்றாக இப்போது ஒழுங்கமைக்கப் படுகிறது. இதைத்தான் அவர்கள் பேரரசு (Empire) என்கின்றனர். இந்த ஒழுங்கமைப்பின் வடிவத்தை ஒரு “தலையற்ற முண்டம்” (acephalous)  என்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். ‘பேரரசு’ என்கிற கருத்தாக்கம் இங்கே விளிம்புகளிலிருந்து மையத்தை நோக்கி கப்பம் குவிவது என்கிற வழக்கமான பொருளில் முன்வைக்கப்படவில்லை. மாறாக இது ஒரு ஃபூக்கோவியக் கருத்தாக்கத்தில் இங்கு பயன்படுத்தப்படுகிறது. பேரரசு என்பது இங்கு இறுக்கமான வடிவம் கொண்டிராமல் பரவலாக அமைந்துள்ள. அடையாளமற்ற ஒரு உலகு தழுவிய வலைப்பின்னல் என்பதைக் குறிக்கிறது. முந்தைய காலங்களைப் போல எந்த ஏகாதிபத்தியத்தின் காலனி இது என எந்த இரு தேச அரசுகளையும் அடையாளம் காட்ட முடியாத சுரண்டல் இது.

இறையாண்மை என்பது இப்போது தேச அரசுகளிலிருந்து நீக்கப்பட்டு உலகமயமாக்கப் படுகிறது. தேச அரசுகளின் காலத்தில் அதிகாரம் குவிந்திருந்த புள்ளியை அடையாளம் காட்டுவது போல இப்போது  அப்படி ஒரு ஒற்றை அதிகார மையத்தை அடையாளம் காட்ட இயலாது என்பது இதன் பொருள். இதைத்தான் தலையற்ற முண்டமாக இன்றைய அதிகார அமைப்பு உள்ளது என்கிறோம். சதாமுக்குப் பிந்திய ஈராக்கில் சட்ட ஒழுங்கு அதிகாரம் பன்னாட்டுப் படைகளிடம் தரப்பட்டது நினைவிருக்கலாம். எனவே இன்றைய உலகில் யார் நம்மை ஆட்சி செய்கிறார், யாரால் நாம் கண்காணிக்கப்படுகிறோம், யாருடைய காவல்துறையும் உளவுத்துறையும் நம்மைக் கண்காணிக்கின்றன என்பதெல்லாம் அறுதியிட்டுச் சொல்ல முடியாத ஒன்றறாக அமைகின்றன.

இந்தப் புதிய ஒழுங்கைத்தான் ஹார்ட்டும் நெக்ரியும் “பேரரசு” என்கின்றனர். “ரோமப் பேரரசு’ உருவாக்கத்திலிருந்து அவர்கள் இந்தக் கருத்தாக்கத்தைத் தருவிக்கின்றனர். பல்வேறு நகரமைய ஆளுகைளை (polis) இணைத்து ரோமப் பேரரசு உருவானதோடு இன்றைய உலகமயச் சூழலை அவர்கள் பொருத்திப் பார்க்கின்றனர். சென்ற அத்தியாயத்தில் விளிம்புகளிலிருந்து மையங்களை நோக்கி தேச வளங்கள் உறிஞ்சப்படுகின்றன எனிம் இம்மானுவேல் வாலர்ஸ்டைனின் கோட்பாட்டைப் பார்த்தோம். அந்தப் பொருளிலும் ‘பேரரசு’ என்கிற கருத்தாக்கம் இங்கே முன்வைக்கப்படவில்லை. மாறாக இந்தத் தலையற்ற முண்டமாக உள்ள அதிகார அமைவின் உறுப்புகள்- அவற்றின் மக்கள் திரள்கள், தகவல்கள், சொத்துக்கள் முதலானவற்றின் தொடர்ச்சியான ஓட்டங்கள் அல்லது பாய்ச்சல்கள் என்பன அத்தனை எளிதாக எந்த ஒரு பெரு நகர ஒற்றைக் கட்டுப்பாட்டு மையங்களிலிருந்தும் கட்டுப்படுத்தப்பட இயலாதவை. ஆம், தகவல்களும் சொத்துக்களும் மட்டுமின்றி மனிதர்களும், ஊழியர்களும் இன்று தேசங் கடந்து பாய்ந்தோடில் கொண்டே இருக்கக் கூடிய நிலையில் உள்ளனர். இந்தப் ‘பாய்ச்சல்’ (flow) என்பது physical ஆக நிகழ்வதாகவும் இருக்கலாம். இல்லை நீங்கள் உங்கள் இடத்தில் இருக்கும்போதே ஒரு அடையாளமற்ற அதிகாரத்தால் நீங்கல் எங்கிருந்தோ கட்டுப்படுத்தப்படலாம், சுரண்டப்படலாம்.

பழைய தேச அரசுகளை (nation States) மையமாகக் கொண்ட உலகில் ஒரு ஆதிக்கம் செலுத்தும் மையமாக ஆளும் வர்க்கமும், ஆளுகைக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் திரளும் என்பதான எளிய வடிவில் இந்த ஆளுகை இப்போது இருப்பதில்லை; மாறாக இந்த அசமத்துவம் இப்போது உடைந்து, சிதைந்து மிகவும் சிக்கலான வடிவில் நிகழ்கிறது. ஒரு ஒட்டுமொத்தத்திற்குள் அடக்கிக் கணிக்க இயலாத தன்னிச்சையான கிரக சஞ்சாரங்களைப் போல, பேரரசுக்குள்  இந்த ஏற்றத்தாழ்வுகளும் இயக்க நிலையில் உள்ளன. முழுமை என்பது இன்று இவ்வாறு கையகப்படுத்த இயலாத ஒன்றாகக் கரைந்து ஆவியாகியுள்ளது. நாம் இதுகாறும் அரசியல் அறிவியலில் விரித்துரைத்து வந்த, அரசு / சமூகம் ; போர் / அமைதி ; கட்டுப்பாடு /  சுதந்திரம் ; மையம் / விளிம்பு – முதலான எதிர்வுகள் அனைத்தும் இன்று ஏற்பட்டுள்ள முழுமையின் சிதைவில் பொருளற்றதாகி விட்டன. இன்றைய இந்த அமைப்பை இதற்கு முந்திய தேசிய அரசுகளின் அடிப்படையிலான காலனியம் மற்றும் “விளிம்பு – மையம்” முதலான வடிவங்களில் புரிந்து கொள்ள முடியாது என்றால் பின் எப்படி இதை எளிமையாகப் புரிந்து கொள்வது?

பண்டைய நகர அரசுகளில் இருந்து ரோமப் பேரரசு உருவானது குறித்த வரலாற்றை விளக்க அன்றைய வரலாற்றை அப்போது எழுதிய பாலிபியஸ் எத்தகைய முறையியலைக் கையாண்டாரோ அது இப்போது நமக்குத் தேவைப்படுகிறது என்கின்றனர் ஹார்ட்டும் நெக்ரியும்.

1990 களுக்குப் பின் உருவாகியுள்ள இன்றையப் புதிய உலக ஒழுங்கை அவர்கள் வரைந்து காட்டும் முறையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். பண்டைய ரோமப் பேரரசுடன் இன்றைய நிலையை ஒப்பிட்டால் அமெரிக்காவின் அணு வல்லமை என்பது  அரசின் ஆற்றலாகவும். G7 மற்றும் பன்னாட்டு கார்ப்பொரேட்கள் என்பன அதிகார வர்க்கமாகவும், இணையம் (internet) என்பது ரோம அரசில் அமைந்திருந்த ஜனநாயக நெறியாகவும் அமைகின்றன (Bomb / Money / Ether) என ஒரு மேலோட்டமான பார்வையில் இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த ரோமப் பேரரசு எனும் அமைப்பு  என்றென்றைக்குமாக நிலைத்திருக்கவில்லை. இன்றைய பேரரசும் ரோமப் பேரரசைப் போலவே அதன் அழிவைத் தனக்குள்ளேயே வைத்துள்ளது. பாலிபியஸ் ரோமப் பேரரசின் உருவாக்கத்தைச் சொன்னார் என்றால் கிப்பனும், மான்டேஸ்குவும் ரோமப் பேரரசின் வீழ்ச்சியைச் சொன்னார்கள். கிறிஸ்துவத்தின் எழுச்சி அன்றைய வரலாற்றில் ரோமப் பேரரசை வீழ்த்தியது.  தொடர்ந்த பழங்குடி மக்களின் இடப்பெயர்வுகள் என்பன மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.

அன்று மதம் இந்த மாற்றத்திற்கான முகமையாக (agency) இருந்திருக்கலாம். முதலாளியமாக வரையறுக்கப்பட்ட காலத்தில் மாற்றத்திற்கான அந்த முகமை தொழிலாளி வர்க்கமாக இருந்தது. இன்று அப்படியான மாற்றம் ஒன்றை நிகழ்த்த வல்லதாகப் “பெருந்திரள் மக்கள்” (multitude) என்கிற கருத்தக்கத்தை ஹார்ட்டும் நெக்ரியும் முன்வைக்கின்றனர்.

இதைப் புரிந்து கொள்ள இன்றைய பேரரசை ஒரு பிரமிட் வடிவத்தில் கற்பனை செய்து கொள்வோம். அதன் உச்சத்தில் இப்போதைய ‘சூப்பர் பவர்’ ஆக உள்ள அமெரிக்கா, G8 நாடுகள், உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் NATO, IMF ஆகியன உள்ளன என்போம். அடுத்த படிநிலையில் பன்னாட்டு கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் இதர தேசிய அரசுகள் உள்ளன என்போம். இந்தப் பிரமிடின் அடித்தளமாக உலக நாடுகளின் பொது அவை (UN General Assembly), மத அமைப்புகள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள் முதலானவை அமைகின்றன. இன்றைய அமைப்பில் “மக்களை” பிரதிநிதித்துவப் படுத்துவதாக இந்த கடைசிப் படிநிலை கொள்ளப்படுகிறது. இந்தப் பின்னணியிலிருந்துதான் இன்றைய புரட்சிகர சக்தியான ‘பெருந்திரள்’ உருவாகும் என்கின்றனர் ஹார்ட்ட்டும் நெக்ரியும்.

“சுதந்திரமான உற்பத்திச் செயற்பாடுகளின் உலகலாவிய வெளிப்பாடுதான்” இன்றைய மாற்றத்தை ஏற்படுத்தும் பெருந்திரளாக உருப்பெறுகிறது. இதை “பெருந்திரளாக” உருப்பெறவைக்கும் வேலையை ‘பேரரசே’ அதன் செயல்பாடுகளின் ஊடாக நிறைவேற்றி விடுகிறது. தன்னை அழிப்பதற்கான கருவியை அது தனக்குள்ளேயே வளர்த்து உருவாக்கிவிடுகிறது என்பது இதுதான்.

இன்றைய முதலாளிய உலகம் சேவைகள் (services) உடபட எல்லாவற்றையும் உலகமயமாக்கியுள்ளது,. தன் சேவைகளுக்குத் தொடர்ந்து எல்லை கடந்து இயங்கும் தொழிலாளிகளை அது உருவாக்குகிறது. தேச எல்லைகளற்ற உலகம் என்கிறபோது அவ்வாறே தேச எல்லைகளற்ற ஜனநாயகமும் தேவையாகிறது. வேறு சொற்களில் சொல்வதானால் சுரண்டலும் தேச எல்லைகளற்றதாக ஆகிறது. சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களும் அப்படி ஆகின்றன.

கார்ல் மார்க்ஸ் எதிர் கொண்டது 19ம் நூற்றாண்டு முதலாளியம். கரியாலும், பெட்ரோலாலும் இயங்கும் எந்திரங்களில் வேலை செய்கிற, மையப்படுத்தப்பட்ட, மேலிருந்து கீழாக படி நிலை வரிசையில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம் அது. இன்று material labour என்பது இல்லாமல் போய்விட்டது. எல்லை கடந்து இருந்து கொண்டு சுரண்டும் முதலாளி. எல்லை கடந்து சென்று சுரண்டலுக்கு உள்ளாகும் தொழிலாளி என்றெல்லாம் சூழல் மாறியுள்ளது. தொழில்முறையிலும், தொழிலாளிகள் மத்தியிலும் ஒரு ‘நாடோடித் தன்மை’ (nomadism) உருவாகியுள்ளது.  இந்த மாற்றங்கள் எல்லாம் தொழிலாளி வர்க்கம் என்பது உலகளாவிய ‘பெருந்திரளாக’ உருப் பெறும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னைவிட அகன்ற உலகளாவிய ஒன்றிணைவு இப்போது சாத்தியமாகி உள்ளது.

சுரண்டல் இன்று குறையவில்லை. அதிகமாகியுள்ளது. அதே நேரத்தில் நாடுகளிடையே ஒரு வகையில் முதலாளித்துவ அதிகாரம் பரவி இருக்கிறது. சுரண்டலில் வடக்கு / தெற்கு, முதல் உலகம் / மூன்றாம் உலகம் என்றெல்லாம் இப்போது பிரித்துப் பார்ப்பது சிரமம். முதல் உலகிற்குள் மூன்றாம் உலகும், மூன்றாம் உலகிற்குள் முதல் உலகையும் அடையாளம் காண முடிகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் முதலாளியச் சுரண்டல், உபரி மதிப்பு உருவாக்கம் என்கிற வடிவங்கள் எதுவும் மாறவில்லை. மார்க்ஸ் இவை குறித்துச் சொன்னவை அனைத்தும் அதே போலவும், சொல்லப்போனால் இன்னும் கொடிய முறையிலும் தொடர்கின்றன. ஆனால் தொழில்முறை, தொழிலாளி தனது தன்னிலையை அமைத்துக் கொள்ளும் சூழல் முதலியன பெரிய அளவில் மாறியுள்ளன. இந்த மாற்றங்கள் என்பன, முதலாளி வர்க்கமும், முதலாளியச் சிந்தனையாளர்களும் எண்ணுவதையும் சொல்லுவதையும் போல, இனி போராட்டங்களுக்கும் புரட்சிகர மாற்றங்களுக்கும் சாத்தியங்கள் இல்லை என்பதைச் சுட்டவில்லை. அப்படிக் கருதுவது. பெருந்திரளை வெறும் நுகர்வோர்களாக (consumers) அணுகும் மூடத்தனம். இது அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வது.

மார்க்சியர்களும் ‘பெருந்திரளை’ அடையாளம் கண்டு, அதன் வல்லமையையும், அதன் இன்றைய பண்புகளையும், வடிவ மாற்றங்களையும் உரிய புரிதல்களுடன் அணுகுதல் அவசியம்.

 

 

 

 

 

 

ஹார்ட் மற்றும் நெக்ரியின் பேரரசும் பெருந்திரளும்

     கார்ல் மார்க்ஸ் 9       மக்கள் களம், பிப்ரவரி 2018                                 

இன்றைய முதலாளிய உலகு வெற்றிக் களிப்புடன் வலம் வருகிறது. சாமுவேல் ஹட்டிங்டன், ஃப்ரான்சிஸ் ஃபுகுயாமா, மில்டன் ஃப்ரைட்மன் முதலான சுதந்திரச் சந்தை மற்றும் உலகமய ஆதரவுக் கோட்பாட்டாளர்கள் இனி முதலாளியத்தை எதுவும் சாய்த்துவிட முடியாது என்கிற எள்ளலோடு எழுதிக் குவிக்கின்றனர். ‘அமெரிக்க நூற்றாண்டு’ தொடங்கிவிட்டது என்கின்றனர். புவி அரசியல், உலக மயம், உலகளாவிய வெகுமக்கள் பண்பாடு ஆகியவற்றுக்குத்தான் இனி காலம் எனக் கண் சிமிட்டுகின்றனர். இன்னொரு பக்கம் பாரம்பரிய இடதுசாரிகள் வெளியில் சற்று வீறாப்போடு காட்டிக் கொண்டபோதும் உள்ளுக்குள் பெரிதும் நம்பிக்கை இழந்து நிற்கின்றனர். மிகச் சில உற்சாகக் குரல்கள், அவையும் மிகப் பலவீனமாகவே இடது வெளியிலிருந்து மேலெழும்புகின்றன. அப்படி ஒலிப்பவையும் மாறியுள்ள நிலையை ஏற்றுக் கொள்ளவோ, அந்த அடிப்படையில் 1990 களுக்குப் பிந்திய உலகைப் புரிந்துகொள்ளவோ இயலாமல் சற்றே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. உள்ளார்ந்த நம்பிக்கை இன்மையை மறைத்துக் கொண்டு பழைய பார்வைகளை மிகவும் அடங்கிய குரலில் ஒலிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் மிஷேல் ஹார்ட் என்கிற  ஃப்ரென்ச் இலக்கியக் கோட்பாட்டாளரும், அன்டோனியோ நெக்ரி என்கிற இத்தாலியத் தத்துவ இயலாளரும் இணைந்து எழுதிய “பேரரசு – EMPIRE” எனும் நூல் இன்றைய உலகைச் சற்றே மாறுபட்ட கோணத்தில் அணுகிப் புதிய நம்பிக்கை ஒன்றை முன் வைக்கிறது. கடந்த இருபதான்டு கால தொழிலாளர்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் தோல்வி அடைந்துவிட்டன என்கிற எண்ணம், அந்த அடிப்படையிலான வெற்றிக் களிப்பு அல்லது அந்த அடிப்படையிலான நம்பிக்கை இழப்பு இரண்டுமே அபத்தம் என்கின்றனர் ஹார்ட்டும் நெக்ரியும்.

டெல்யூஸ், கட்டாரி எனும் இரண்டு ஃப்ரென்ச் தத்துவ இயலாளர்களின் முக்கிய நூலாகிய ‘ஆயிரம் மேடைகள்’ அல்லது ‘ஆயிரம் மேற்தளங்கள்’ எனும் பொருள்படும் Thousand Platues  எனும் நூலின் வழியில் நின்று இன்றைய உலகை அவர்கள் அணுகுகின்றனர். வழக்கமான ‘பொருளாதாரம்’, ‘அரசியல்,’ ‘வரலாறு’ என்கிற வகைப்பாட்டுக்குள் இன்றைய உலகைப் புரிந்துகொள்வது என்பதற்குள் முடக்கிக் கொள்ளாமல் சட்டம், தத்துவம், உளவியல், அரசியல், பொருளாதாரம், புனைவு முதலான கல்வியியல் ஒழுங்குகளை (disciplinary boundaries) எல்லாம் கடந்து திமிறி இயங்கும் ஒரு எழுத்து முறையை ஹார்ட்டும் நெக்ரியும் கையாள்கின்றனர்.

அன்டோனியோ நெக்ரி 1970 களில் இத்தாலியில் எழுச்சியுற்றிருந்த “நகர்ப்புற கெரில்லா இயக்கம்” “செம்படை” (urban guerilla movement / Red Brigade) ஆகியவற்றில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இரண்டு கொலைகள், ஜனநாயக அரசைக் கவிழ்க்கச் சதி செய்தது ஆகிய குற்றங்களுக்காகத் தேடப்பட்டபோது ஃப்ரான்சுக்குத் தப்பியோடி வந்தவர் அவர். மித்தரென்ட் கொள்கையின் அடிப்படையில் ஃப்ரான்ஸ் அவருக்கு அடைக்கலம் அளித்தது. ஃபூக்கோ, தெரிதா, கடாரி முதலான உலகப் புகழ் பெற்ற தத்துவ இயலாளர்களுடன் பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய நெக்ரி 1997 ல் இத்தாலிய அரசுடன் பேச்சு வர்த்தை நடத்தித் தனக்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டுகள் தண்டனையைப் 13 ஆண்டுகளாகக் குறைத்துக் கொண்டார். பின் நாடு திரும்பி 13 ஆண்டுகள் கிராம்சி இருந்த அதே சிறையில் கழித்துப் பின் விடுதலையாகித் தற்போது இன்னொரு தத்துவ இயலாளரான ஜூடித் ரிவெல்லுடன் ஃப்ரான்சில் வாழ்கிறார். ஹார்ட்டும் பேராசிரியராக மட்டுமின்றி அரசியற் களத்திலும் செயல்படுபவர்.

ஹார்ட்டும் நெக்ரியும் முன்வைக்கும் இன்றைய உலகு குறித்த பார்வையை நாம் இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்:

உலக முதலாளிய வீச்சின் ஊடாக தேசிய அரசுகளின் (Nation States) அதிகார அமைப்புகள் சிதைந்து கொண்டிருப்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம். உலகமயம் என்பதை வெறுமனே சந்தைகளை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் ஒரு செயற்பாடாக மட்டும் சுருக்கிப் பார்க்க இயலாது. உண்மையில் அரசுக் கட்டுப்பாடுகள் என்பன உதிர்ந்து அழிவதற்குப் பதிலாக அவை இன்னும் பெரிய அளவில் பெருகி ஒன்றோடொன்று பிணைந்து, தேசங்களைக் கடந்த ஒன்றாக இப்போது ஒழுங்கமைக்கப் படுகிறது. இதைத்தான் அவர்கள் பேரரசு (Empire) என்கின்றனர். இந்த ஒழுங்கமைப்பின் வடிவத்தை ஒரு “தலையற்ற முண்டம்” (acephalous)  என்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். ‘பேரரசு’ என்கிற கருத்தாக்கம் இங்கே விளிம்புகளிலிருந்து மையத்தை நோக்கி கப்பம் குவிவது என்கிற வழக்கமான பொருளில் முன்வைக்கப்படவில்லை. மாறாக இது ஒரு ஃபூக்கோவியக் கருத்தாக்கத்தில் இங்கு பயன்படுத்தப்படுகிறது. பேரரசு என்பது இங்கு இறுக்கமான வடிவம் கொண்டிராமல் பரவலாக அமைந்துள்ள. அடையாளமற்ற ஒரு உலகு தழுவிய வலைப்பின்னல் என்பதைக் குறிக்கிறது. முந்தைய காலங்களைப் போல எந்த ஏகாதிபத்தியத்தின் காலனி இது என எந்த இரு தேச அரசுகளையும் அடையாளம் காட்ட முடியாத சுரண்டல் இது.

இறையாண்மை என்பது இப்போது தேச அரசுகளிலிருந்து நீக்கப்பட்டு உலகமயமாக்கப் படுகிறது. தேச அரசுகளின் காலத்தில் அதிகாரம் குவிந்திருந்த புள்ளியை அடையாளம் காட்டுவது போல இப்போது  அப்படி ஒரு ஒற்றை அதிகார மையத்தை அடையாளம் காட்ட இயலாது என்பது இதன் பொருள். இதைத்தான் தலையற்ற முண்டமாக இன்றைய அதிகார அமைப்பு உள்ளது என்கிறோம். சதாமுக்குப் பிந்திய ஈராக்கில் சட்ட ஒழுங்கு அதிகாரம் பன்னாட்டுப் படைகளிடம் தரப்பட்டது நினைவிருக்கலாம். எனவே இன்றைய உலகில் யார் நம்மை ஆட்சி செய்கிறார், யாரால் நாம் கண்காணிக்கப்படுகிறோம், யாருடைய காவல்துறையும் உளவுத்துறையும் நம்மைக் கண்காணிக்கின்றன என்பதெல்லாம் அறுதியிட்டுச் சொல்ல முடியாத ஒன்றறாக அமைகின்றன.

இந்தப் புதிய ஒழுங்கைத்தான் ஹார்ட்டும் நெக்ரியும் “பேரரசு” என்கின்றனர். “ரோமப் பேரரசு’ உருவாக்கத்திலிருந்து அவர்கள் இந்தக் கருத்தாக்கத்தைத் தருவிக்கின்றனர். பல்வேறு நகரமைய ஆளுகைளை (polis) இணைத்து ரோமப் பேரரசு உருவானதோடு இன்றைய உலகமயச் சூழலை அவர்கள் பொருத்திப் பார்க்கின்றனர். சென்ற அத்தியாயத்தில் விளிம்புகளிலிருந்து மையங்களை நோக்கி தேச வளங்கள் உறிஞ்சப்படுகின்றன எனிம் இம்மானுவேல் வாலர்ஸ்டைனின் கோட்பாட்டைப் பார்த்தோம். அந்தப் பொருளிலும் ‘பேரரசு’ என்கிற கருத்தாக்கம் இங்கே முன்வைக்கப்படவில்லை. மாறாக இந்தத் தலையற்ற முண்டமாக உள்ள அதிகார அமைவின் உறுப்புகள்- அவற்றின் மக்கள் திரள்கள், தகவல்கள், சொத்துக்கள் முதலானவற்றின் தொடர்ச்சியான ஓட்டங்கள் அல்லது பாய்ச்சல்கள் என்பன அத்தனை எளிதாக எந்த ஒரு பெரு நகர ஒற்றைக் கட்டுப்பாட்டு மையங்களிலிருந்தும் கட்டுப்படுத்தப்பட இயலாதவை. ஆம், தகவல்களும் சொத்துக்களும் மட்டுமின்றி மனிதர்களும், ஊழியர்களும் இன்று தேசங் கடந்து பாய்ந்தோடில் கொண்டே இருக்கக் கூடிய நிலையில் உள்ளனர். இந்தப் ‘பாய்ச்சல்’ (flow) என்பது physical ஆக நிகழ்வதாகவும் இருக்கலாம். இல்லை நீங்கள் உங்கள் இடத்தில் இருக்கும்போதே ஒரு அடையாளமற்ற அதிகாரத்தால் நீங்கல் எங்கிருந்தோ கட்டுப்படுத்தப்படலாம், சுரண்டப்படலாம்.

பழைய தேச அரசுகளை (nation States) மையமாகக் கொண்ட உலகில் ஒரு ஆதிக்கம் செலுத்தும் மையமாக ஆளும் வர்க்கமும், ஆளுகைக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் திரளும் என்பதான எளிய வடிவில் இந்த ஆளுகை இப்போது இருப்பதில்லை; மாறாக இந்த அசமத்துவம் இப்போது உடைந்து, சிதைந்து மிகவும் சிக்கலான வடிவில் நிகழ்கிறது. ஒரு ஒட்டுமொத்தத்திற்குள் அடக்கிக் கணிக்க இயலாத தன்னிச்சையான கிரக சஞ்சாரங்களைப் போல, பேரரசுக்குள்  இந்த ஏற்றத்தாழ்வுகளும் இயக்க நிலையில் உள்ளன. முழுமை என்பது இன்று இவ்வாறு கையகப்படுத்த இயலாத ஒன்றாகக் கரைந்து ஆவியாகியுள்ளது. நாம் இதுகாறும் அரசியல் அறிவியலில் விரித்துரைத்து வந்த, அரசு / சமூகம் ; போர் / அமைதி ; கட்டுப்பாடு /  சுதந்திரம் ; மையம் / விளிம்பு – முதலான எதிர்வுகள் அனைத்தும் இன்று ஏற்பட்டுள்ள முழுமையின் சிதைவில் பொருளற்றதாகி விட்டன. இன்றைய இந்த அமைப்பை இதற்கு முந்திய தேசிய அரசுகளின் அடிப்படையிலான காலனியம் மற்றும் “விளிம்பு – மையம்” முதலான வடிவங்களில் புரிந்து கொள்ள முடியாது என்றால் பின் எப்படி இதை எளிமையாகப் புரிந்து கொள்வது?

பண்டைய நகர அரசுகளில் இருந்து ரோமப் பேரரசு உருவானது குறித்த வரலாற்றை விளக்க அன்றைய வரலாற்றை அப்போது எழுதிய பாலிபியஸ் எத்தகைய முறையியலைக் கையாண்டாரோ அது இப்போது நமக்குத் தேவைப்படுகிறது என்கின்றனர் ஹார்ட்டும் நெக்ரியும்.

1990 களுக்குப் பின் உருவாகியுள்ள இன்றையப் புதிய உலக ஒழுங்கை அவர்கள் வரைந்து காட்டும் முறையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். பண்டைய ரோமப் பேரரசுடன் இன்றைய நிலையை ஒப்பிட்டால் அமெரிக்காவின் அணு வல்லமை என்பது  அரசின் ஆற்றலாகவும். G7 மற்றும் பன்னாட்டு கார்ப்பொரேட்கள் என்பன அதிகார வர்க்கமாகவும், இணையம் (internet) என்பது ரோம அரசில் அமைந்திருந்த ஜனநாயக நெறியாகவும் அமைகின்றன (Bomb / Money / Ether) என ஒரு மேலோட்டமான பார்வையில் இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த ரோமப் பேரரசு எனும் அமைப்பு  என்றென்றைக்குமாக நிலைத்திருக்கவில்லை. இன்றைய பேரரசும் ரோமப் பேரரசைப் போலவே அதன் அழிவைத் தனக்குள்ளேயே வைத்துள்ளது. பாலிபியஸ் ரோமப் பேரரசின் உருவாக்கத்தைச் சொன்னார் என்றால் கிப்பனும், மான்டேஸ்குவும் ரோமப் பேரரசின் வீழ்ச்சியைச் சொன்னார்கள். கிறிஸ்துவத்தின் எழுச்சி அன்றைய வரலாற்றில் ரோமப் பேரரசை வீழ்த்தியது.  தொடர்ந்த பழங்குடி மக்களின் இடப்பெயர்வுகள் என்பன மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.

அன்று மதம் இந்த மாற்றத்திற்கான முகமையாக (agency) இருந்திருக்கலாம். முதலாளியமாக வரையறுக்கப்பட்ட காலத்தில் மாற்றத்திற்கான அந்த முகமை தொழிலாளி வர்க்கமாக இருந்தது. இன்று அப்படியான மாற்றம் ஒன்றை நிகழ்த்த வல்லதாகப் “பெருந்திரள் மக்கள்” (multitude) என்கிற கருத்தக்கத்தை ஹார்ட்டும் நெக்ரியும் முன்வைக்கின்றனர்.

இதைப் புரிந்து கொள்ள இன்றைய பேரரசை ஒரு பிரமிட் வடிவத்தில் கற்பனை செய்து கொள்வோம். அதன் உச்சத்தில் இப்போதைய ‘சூப்பர் பவர்’ ஆக உள்ள அமெரிக்கா, G8 நாடுகள், உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் NATO, IMF ஆகியன உள்ளன என்போம். அடுத்த படிநிலையில் பன்னாட்டு கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் இதர தேசிய அரசுகள் உள்ளன என்போம். இந்தப் பிரமிடின் அடித்தளமாக உலக நாடுகளின் பொது அவை (UN General Assembly), மத அமைப்புகள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள் முதலானவை அமைகின்றன. இன்றைய அமைப்பில் “மக்களை” பிரதிநிதித்துவப் படுத்துவதாக இந்த கடைசிப் படிநிலை கொள்ளப்படுகிறது. இந்தப் பின்னணியிலிருந்துதான் இன்றைய புரட்சிகர சக்தியான ‘பெருந்திரள்’ உருவாகும் என்கின்றனர் ஹார்ட்ட்டும் நெக்ரியும்.

“சுதந்திரமான உற்பத்திச் செயற்பாடுகளின் உலகலாவிய வெளிப்பாடுதான்” இன்றைய மாற்றத்தை ஏற்படுத்தும் பெருந்திரளாக உருப்பெறுகிறது. இதை “பெருந்திரளாக” உருப்பெறவைக்கும் வேலையை ‘பேரரசே’ அதன் செயல்பாடுகளின் ஊடாக நிறைவேற்றி விடுகிறது. தன்னை அழிப்பதற்கான கருவியை அது தனக்குள்ளேயே வளர்த்து உருவாக்கிவிடுகிறது என்பது இதுதான்.

இன்றைய முதலாளிய உலகம் சேவைகள் (services) உடபட எல்லாவற்றையும் உலகமயமாக்கியுள்ளது,. தன் சேவைகளுக்குத் தொடர்ந்து எல்லை கடந்து இயங்கும் தொழிலாளிகளை அது உருவாக்குகிறது. தேச எல்லைகளற்ற உலகம் என்கிறபோது அவ்வாறே தேச எல்லைகளற்ற ஜனநாயகமும் தேவையாகிறது. வேறு சொற்களில் சொல்வதானால் சுரண்டலும் தேச எல்லைகளற்றதாக ஆகிறது. சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களும் அப்படி ஆகின்றன.

கார்ல் மார்க்ஸ் எதிர் கொண்டது 19ம் நூற்றாண்டு முதலாளியம். கரியாலும், பெட்ரோலாலும் இயங்கும் எந்திரங்களில் வேலை செய்கிற, மையப்படுத்தப்பட்ட, மேலிருந்து கீழாக படி நிலை வரிசையில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம் அது. இன்று material labour என்பது இல்லாமல் போய்விட்டது. எல்லை கடந்து இருந்து கொண்டு சுரண்டும் முதலாளி. எல்லை கடந்து சென்று சுரண்டலுக்கு உள்ளாகும் தொழிலாளி என்றெல்லாம் சூழல் மாறியுள்ளது. தொழில்முறையிலும், தொழிலாளிகள் மத்தியிலும் ஒரு ‘நாடோடித் தன்மை’ (nomadism) உருவாகியுள்ளது.  இந்த மாற்றங்கள் எல்லாம் தொழிலாளி வர்க்கம் என்பது உலகளாவிய ‘பெருந்திரளாக’ உருப் பெறும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னைவிட அகன்ற உலகளாவிய ஒன்றிணைவு இப்போது சாத்தியமாகி உள்ளது.

சுரண்டல் இன்று குறையவில்லை. அதிகமாகியுள்ளது. அதே நேரத்தில் நாடுகளிடையே ஒரு வகையில் முதலாளித்துவ அதிகாரம் பரவி இருக்கிறது. சுரண்டலில் வடக்கு / தெற்கு, முதல் உலகம் / மூன்றாம் உலகம் என்றெல்லாம் இப்போது பிரித்துப் பார்ப்பது சிரமம். முதல் உலகிற்குள் மூன்றாம் உலகும், மூன்றாம் உலகிற்குள் முதல் உலகையும் அடையாளம் காண முடிகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் முதலாளியச் சுரண்டல், உபரி மதிப்பு உருவாக்கம் என்கிற வடிவங்கள் எதுவும் மாறவில்லை. மார்க்ஸ் இவை குறித்துச் சொன்னவை அனைத்தும் அதே போலவும், சொல்லப்போனால் இன்னும் கொடிய முறையிலும் தொடர்கின்றன. ஆனால் தொழில்முறை, தொழிலாளி தனது தன்னிலையை அமைத்துக் கொள்ளும் சூழல் முதலியன பெரிய அளவில் மாறியுள்ளன. இந்த மாற்றங்கள் என்பன, முதலாளி வர்க்கமும், முதலாளியச் சிந்தனையாளர்களும் எண்ணுவதையும் சொல்லுவதையும் போல, இனி போராட்டங்களுக்கும் புரட்சிகர மாற்றங்களுக்கும் சாத்தியங்கள் இல்லை என்பதைச் சுட்டவில்லை. அப்படிக் கருதுவது. பெருந்திரளை வெறும் நுகர்வோர்களாக (consumers) அணுகும் மூடத்தனம். இது அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வது.

மார்க்சியர்களும் ‘பெருந்திரளை’ அடையாளம் கண்டு, அதன் வல்லமையையும், அதன் இன்றைய பண்புகளையும், வடிவ மாற்றங்களையும் உரிய புரிதல்களுடன் அணுகுதல் அவசியம்.

 

 

 

 

 

 

இந்திரன் தோற்றான் புத்திரன் வென்றான்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 13  

(மணிமேகலைக் காப்பியத் தொடர் – பிப்ரவரி, ‘தீராநதி’)

          

பிராமண மதத்தைச் சிரமண மதங்கள் எதிர்கொண்ட விதம் தனித்துவமானது. ஆன்மா, இறை, வேள்வி முதலானவை குறித்த பிராமண மதக்  கருத்தாக்கங்களைச் சிரமண மதங்கள் முற்றிலுமாக மறுத்தாலும் இந்திய மதங்களுக்கென உருவாகி இருந்த சில பொது நம்பிக்கைகள், கதைகள், கடவுளர்கள் ஆகியவற்றை அவை ஏற்றுக் கொண்டன. ஆனால் அவற்றை பிராமண மதம் எவ்வாறு முன்வைத்ததோ அப்படியாக அல்லாமல் முறிலும் எதிராகவும் பல நேரங்களில் தலைகீழாகவும் அவற்றை அவை ஆக்கிய விதம் நுணுக்கமானது மட்டுமல்ல சுவையானதும் கூட. அப்படி ஏற்றுக் கொண்ட கடவுளர்களில் ஒருவந்தான் இந்திரன்.

இந்திரனோ தேவர் தலைவன். ஒரு எளிய, யாருமற்ற, பெற்றோர் யாரென அறியாத ஆபுத்திரனை, “மாயிரு ஞாலத்து மன்னுயிர் ஓம்பும் ஆருயிர் முதல்வன்” என அவனுக்குச் சமமாக நிறுத்துகிறார் சாத்தனார். இந்த மாபெரும் உலகில் வசிக்கும் உயிர்கள் அனைத்தின் பசியையும் போக்கும் பெரும் பேறு பெற்றவம் ஆபுத்திரன். அந்தப் பெருமை தேவர் தலைவனுக்குச் சற்றும் குறைந்ததல்ல என்பது கருத்து. “பேராற்றல் மிக்க தேவர்களின் வேந்தனே! மண்ணுலகில் உள்ள எம் போன்றோரில் நல்வினை, தீவினைகளை அங்கிருந்து கொண்டு மதிப்பிடுகிறவர்கள் நீங்கள். தருமம் செய்யும் மக்கள், எளியோரைப் பாதுகாத்திருப்போர், நற்றவம் செய்வோர், பற்றறுக்க முயல்வோர் முதலானோர் வாழும் உலகு வாய்க்கப் பெறாதவர் நீங்கள்”- எனத் தேவருலகைக் காட்டிலும் இம் மண்ணுலகம் சிறந்தது எனத் தனக்கு வரம் அளிக்க வந்த இந்திரனுக்குச் சொல்வான் அந்த எளியவன்.

“பசித் துயருடன் வந்தோரின் கொடும்பசியைத் தீர்த்து அவர்கள் முகத்தை இனிதாக்கும் பணியே தெய்வம் எனக்குக் காட்டிய வழி. இந்தப் பணிக்குரிய எனக்குத் தேவர் கோமான் நீ என்ன தந்துவிட இயலும்? உண்டியா, உடுப்புக்களா, பெண்களா இல்லை என்னைப் பாதுகாக்க யாருமா?” என்றந்தப் பெற்றோர் பெயரறியா இளைஞன் எள்ளி நகையாடியபோது தேவருலகத் தலைவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

புராண தெய்வங்களுக்கே உரித்தான குயுக்தியும் தந்திரமும் மிக்க இந்திரன் குறுக்கு வழியில் யோசித்தான். இவ்வுலகில்; பசி இருந்தால்தானே அதை ஆற்றுவாய்.. பசியே இல்லாமல் செய்தால்? “இந்த நீணிலம் முழுமையும் நீர் பெருகி வளம் சுரக்க” என ஆணையிட்டு அகன்றான் தேவர் தலைவன். பன்னிரண்டு ஆண்டுகளாக மழையின்றிக் காய்ந்து கிடந்த பாண்டி நாட்டில் பெருமழை பெய்ய அங்கு எல்லா வளமும் சுரந்தது. பசித்தோர் இல்லாத அந்த நாட்டில் அவன் தன் தெய்வ ஆணையை எப்படி நிறைவேற்றுவான்? என்னேரமும் பசித்தோர் நிறைந்திருந்த அவனது அம்பலப் பீடிகை இப்போது சோம்பேறிகள், காமுகர்கள், தூர்த்தர்கள், வம்பு பேசுவோர், சூதாடுவோர் முதலானோரால் நிறைவதாயிற்று.

தன் அம்பலத்தை விட்டு நீங்கிப் பசித்தோரைத் தேடித் திரிந்த அவன் கேலிக்குரியவன் ஆனான். தன் எல்லாச் செல்வங்களையும் கடலில் பறிகொடுத்தவன் போல அலைந்து திரிந்து கொண்டிருந்த அவனை அப்போதுதான் கப்பலிலிருந்து இறங்கிய சிலர் கண்டு சாவக நாட்டில் (Jawa) பெரும் பஞ்சம் நிலவி உயிர்கள் செத்தழிவதைக் கூறினர்.

சாவகம் செல்லும் அக்கப்பலில் ஏறினான் ஆபுத்திரன். வழியில் கடல் சீற்றம் காரணமாக அம்மரக்கலம் மணிபல்லவத்தீவில் நின்றது. இறங்கியவன் ஏறினான் என எண்ணி நள்ளிறவில் அம்மரக்கலம் அகன்றது.

தன்னை விட்டு விட்டு மரக்கலம் அகன்றதை அறிந்த ஆபுத்திரன் துயரம் கொண்டலைந்தான். அள்ள அள்ளக் குறையாத அந்த அரிய பாத்திரம் பயனற்றுத் தன் கரங்களில் இருப்பதை வெறுத்தான். அங்கிருந்த கோமுகிப் பொய்கையில் அதனை விட்டு, “ஆண்டுக்கு ஒருமுறை இப்பாத்திரம் வெளிப்படட்டும்.  அருளரம் பூண்டு ஆருயிர் ஓம்பும் யாரும் இங்கு தோன்றும் நாளில் அவர் கைப் புகுவாய்” என அதை வேண்டி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தான்.

கீழ்த் திசையில் தோன்றி மேற்திசையில் மறையும் ஞாயிறுபோல மணிபல்லவத்தீவில் உடலைத் துறந்த ஆபுத்திரன் சாவகத்தில் வாழ்ந்திருந்த மண்முக முனிவன் வளர்த்த பசுவயிற்றில் மீண்டும் பிறப்பெடுத்தான் என்று ஆபுத்திரன் வரலாற்றையும் அந்த தெய்வப் பாத்திரம் மணிமேகலையை வந்தடைந்ததையும் விளக்குவார் அறவணர். இப்போது ஆபுத்திரனை வயிற்றில் ஏந்திய பசுதான் தன் முற்பிறப்பில் அவனுக்குப் பாலூட்டிய பசுவும் கூட. பசு ஈன்ற அம்மகவைப் பிள்ளைப் பேறற்ற சாவக மன்னன் ஏந்தி வளர்த்து அரசன் ஆக்குவான். ஆபுத்திரன் இப்பிறவியில் சாவக நாட்டின் அரசனான கதை இது.

அப்போது சோழ நாட்டில் பெரும் பஞ்சம். இந்நிலையில் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியை வீணே வைத்திருக்கல் ஆகாது என அரும்பசி ஆற்ற மணிமேகலையை ஆயத்தப்படுத்தி அகல்வார் அறவணர்.

மதுமலர்க் குழலி என இக் காவியத் தொடக்கத்தில் நமக்கு அறிமுகம் செய்யப்பட்ட அச்சிறுமி துறவுக் கோலத்துடனும் கையில் அமுதசுரபியுடனும் வீதியில் இறங்கினாள். அது அம்மக்களுக்குப் பேராச்சரியத்தை அளித்தது. கூடிய மக்களில் சிறியோர், அவளது அழகில் ஈர்ப்புற்றோர், காமுகர் எனப் பல திறத்தாரும் இருந்தனர் என்கிறார் சாத்தனார்.

அப்படி நின்றவருள் என்ன உண்டாலும், எத்தனை உண்டாலும் தீராப்பசி எனும் நோயுடைய காயசண்டிகையும் ஒருத்தி. வடதிசைப் பிறந்து தென் திசை அடைந்து பொதியமலையில் தவமிருந்த ஒரு முனிவனின் சாபத்தால் இந்தக் கொடிய நோயை அடைந்தவள் அவள். அப்படியான சாபம் பெற்றதற்கும் அவளது பழ வினையே காரணம்.

மணிமேகலை ஒரு பவுத்த காவியமாயினும் இந்தியத் துணைக் கண்டத்தில் புத்தர் வரலாற்றுடன் இணைந்த புனிதத் தலங்களான லும்பினி, புத்த கயா முதலானவை காப்பியத்தில் இடம் பெறுவதில்லை. முற்றிலும் இன்னொரு புதிய புத்த வெளி ஒன்று இங்கு கட்டமைக்கப்படுகிறது. தென்னிந்தியா, இலங்கை, சாவகம் முதலான தென் கிழக்காசியா என்றொரு புதிய புத்த பிரபஞ்சம் ஒன்று அறிமுகப் படுத்தப் படுகிறது. தென்கிழக்காசிய என்பது பவுத்தத்தை ஏற்றுக் கொண்ட நிலப்பகுதியாக உருப்பெற்ற காலம் அது. இன்றும் அங்கு பவுத்தம் என்பது அதற்கே உரிய வடிவில் முக்கிய மதமாக உள்ளதை அறிவோம்.

‘பொதியில்’ எனும் பொதியமலை அகத்தியருடன் இணைத்துப் பேசப்படும் ஒன்று. அகத்தியர் முதன் முதலில் தமிழ் இலக்கியத்தில் தோன்றுவதும் மணிமேகலையில்தான். பரிபாடலிலும் அகத்தியர் உண்டெனினும், அதுவும் சங்க இலக்கியங்களிலேயே மிகவும் பின்னுக்கு வந்த ஒன்று. ‘பொதியில்’ எனும் சொல்லாக்கம் போதி + இல் என்பதிலிருந்து உருவாகி இருக்கலாம் எனவும் புத்தரின் அடுத்த அவதாரமாகக் கருதப்படும் அவலோகீதீஸ்வரர் ஆலயம்தான் இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர் என்னுமிடத்தில் உள்ள சிவன் கோவில் என்றும் சொல்கிறார் பவுத்த அறிஞர் ஹிகாசோகா. தேரன் + ஊர் என்பதுதான் தேரூர் என ஆகியது என்பது அவர் கருத்து. அகத்தியருக்குச் சிலைகள் தென்கிழக்காசிய நாடுகளில் உண்டு. மணிமேகலையைப் போல இன்றும் அழியாமல் நமக்குக் கிடைத்துள்ள இன்னொரு பவுத்த நூலான வீரசோழியம் அகத்தியரை அவலோகிதீஸ்வரருடன் இணைத்துப் பேசுவதும் குறிப்பிடத் தக்கது. மணிமேகலை மற்றும் அதற்குப் பிந்திய காலத்தில் நிலைபெற்றிருந்த தெற்கத்திய பவுத்தத்தில் அகத்தியருக்கு ஒரு முக்கிய இடமிருந்தது என்பார் ஆனே மோனியஸ்.

(அடுத்த இதழில் பணிமேகலையும் பத்தினி வழிபாடும்)