தமிழ்த் தேசியர்களும் முஸ்லிம்களும்

(எழும்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய உரையிலிருந்து..)

தமிழ் தேசியம் பேசுகிற சிலர் அல்ல, அத்தனை பேரிடமே எச்சரிக்கியாக இருக்க வேண்டும் என்றேன். குறிப்பாக முஸ்லிம்களின் பிரச்சினைகளிலும், பா.ஜக எதிர்ப்பிலும் அவர்களை நம்ப முடியாது என்றேன். சுமார் 80.000 யாழ்ப்பாண முஸ்லிம்களை இரவோடிரவாக நாடுகடத்தி, இன்று வரை அவர்கள் புத்தளத்தில் அகதிகளாக சீரழிகிறார்களே, காத்தான் குடி பள்ளி வாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை 100 க்கும் மேற்பட்டோரைச் சுட்டுக் கொன்றார்களே விடுதலைப் புலிகள் அதற்காக அவர்கள் தலைவர் பிரபாகரன் இறுதி வரை உளமார்ந்த வருத்தம் தெரிவிக்காததோடு மட்டுமல்ல, அவர்கள் மீண்டும் அவர்களிடத்திற்குத் திரும்பி வரலாம் என வாயாறச் சொன்னதும் இல்லை. அவரது தமிழக ஆதரவாளர்களும் இதுவரை அதற்கெல்லாம் வருத்தம் தெரிவிப்பதில்லை என்பதையும் நினைவுபடுத்தினேன்.

பா.ஜ.க, வலது, இடது கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் எல்லாமும் ஒன்றுதான் என ஒருமுறை அல்ல பலமுறை அ்ன்று அந்த மேடையில் பேசப்பட்டதை ஆணித்தரமாக மறுத்தேன். இன்றைய இந்துத்துவ பாசிச கருத்தியலை எல்லாம் ஆணித்தரமாக மறுப்பதற்கான ஆயுதங்களை நமக்கு வழங்கி இருப்பவர்கள் அத்தனை பேரும் கம்யூனிஸ்ட் இன்டெலெக்சுவல்கள். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும் இந்துத்துவ சக்திகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்துச் செயல்படுபவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுந்தான். ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவை ஈழத்தின் பெயரால் மேடை ஏற்றி தமிழக அரசியலில் இடம் அமைத்துக் கொடுத்தவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியவாதிகள்தான் என்றேன். இன்றளவும் அவர்களுக்கு அது குறித்து வருத்தமில்லை எனவும் சொன்னேன்.

காங்கிரஸின் மீது எனக்கும் வெறுப்பு உண்டு ஆனால் காங்கிரசும் பாஜகவும் ஒன்றா? காங்கிரசுக்கு இந்த அரசியல் சட்டத்தை கவிழ்க்க வேண்டும் என்கிற மறைமுக அஜென்டா கிடையாது, ஆனால் பாஜகவிற்கு உண்டு; காங்கிரசுக்குப் பின்னால் அதை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் என்கிற ஒரு அப்பட்டமான பாசிச அமைப்பு கிடையாது, ஆனால் பா.ஜ.கவுக்கு உண்டு; காங்கிரசின் வன்முறை அரச வன்முறை மட்டுந்தான். ஆனால் பாஜகவின் வன்முறை அரச வன்முறை மட்டுமல்ல, எண்ணற்ற பல வன்முறை அமைப்புகளின் மூலம் அவர்களைப்போல காங்கிரஸ் வன்முறையை ‘அவுட் சோர்ஸ்’ பண்ணுவதில்லை; பன்சாரேயையும், கல்புர்கியையும், தபோல்கரையும் கொன்றது யார்? காங்கிரசின் போலீசா இல்லை பாஜக கும்பலின் அடியாட்களா? என்று கேட்டேன்.

இன்று ஆட்சியில் அமர்ந்து மிகக் கடுமையான முறையில் மாணவர்கள் உள்ளிட்டு கருத்துமாறுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டு கொண்டு, உலகமே கண்டிக்கும் வகையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவைப்பற்றி, ஒரு முஸ்லிம் மேடையில் நின்று கொண்டு பாஜகவும், காங்கிரசும் ,கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றுதான் எனச் சொல்வது அந்த மூன்று கட்சிகளையும் இழிவு செய்வது மட்டுமல்ல, அது பா.ஜகவிற்கு சூத்து கழுவும் வேலை எனவும் சொன்னேன்.

அதுமட்டுமல்ல ஏழு தமிழர்கள் விடுதலை பற்ரி நாமும் பேசினோம்; பேசுகிறோம்; மாநாடுகளும் போட்டோம். ஆனால் நாம் அத்தோடு நிறுத்தவில்லை. கூடுதலாக இதோ இன்றும் தண்டனைக்காலம் முடிந்தும் சிறையில் வாடும் 49 முஸ்லிம் தமி்ழர்களின் விடுதலைக்காகவும் போராடுகிறோம். நீங்கள் மேடை போட்டால் வந்து முழங்கும் இவர்கள் என்றைக்காவது 49 + 7= 56 தமிழர்கள் என முஸ்லிம்களையும் சேர்த்து வாயாற தமிழர்கள என அழைத்து அவர்களின் விடுதலையை இவர்கள் பேசியுள்ளார்களா? யோசித்துப் பாருங்கள் என்றேன். அது மட்டுமல்ல இன்று அவர்கள் தமிழனின் பெருமை என ராஜராஜனையும், பெரிய கோவிலையும் மட்டுமல்ல தேவதாசி முறை உட்பட எல்லாவற்றையும் ஆதரித்து இந்துத்துவக் கருத்தியலுக்குத்துணை போகிறவர்களாகவும் ஆகிக் கொண்டு உள்ளார்கள் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

இன்று அவர்கள் தமிழனின் பெருமை என ராஜராஜனையும், பெரிய கோவிலையும் மட்டுமல்ல தேவதாசி முறை உட்பட எல்லாவற்றையும் ஆதரித்து இந்துத்துவக் கருத்தியலுக்குத்துணை போகிறவர்களாகவும் ஆகிக் கொண்டு உள்ளார்கள் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். கன்னையா குமார் பிணையில் விடுதலையாகி வெளியே வந்தபோது “இந்தியாவிலிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்” எனச் சொல்லிவிட்டானாம் அந்த 20களைத் தாண்டாத சிறுவன். நம் அனைவராலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்ய முடியாததைச் செய்தவன் அவன். இன்று உலகமே பாஜக அரசைக் கண்டிக்க வைத்தவன் அவன்.

அகில் பில்கிராமி போன்ற தத்துவவியலாளர்கள் எல்லாம், சிறுபான்மையர், தலித்க்ள், விவசாயிகள், எளிய தொழிலாளிகள்” இவர்களின் அரசியலைப் பேசியவன் எனவும், எந்த தேர்தல் நோக்கமும் இல்லாமல் அவர்களை இணைத்தவன் எனவும், அவனிடம் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்வும் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு முஸ்லிம் மேடையிலிருந்து கன்னையா குமாரைக் கேலி செய்து ஒலிக்கிறது ஒரு குரல். அத்தனை கொடிய நிபந்தனைகளுடன் இன்று அவன் விடுதலை செய்யப்பட்டுள்ளான். ஆயுள் வரை சிறையில் அடைக்கத்தக்க பிரிவுகளில் வழக்கைச் சந்தித்துக் கொண்டிருப்பவன் அவன். நகத்தில் அழுக்குப் படாமல் அரசியல் செய்பவர்கள் இன்று அவனை உங்கள் மேடையில் நின்று கேலி செய்கிறார்கள். இதையும் சொன்னேன் அங்கு.

இலங்கைக்குச் சென்று வந்து ஒன்றரை மணி நேரம் அங்கு தமிழர்களின் வேதனைகளையும் இராணுவக் கொடுமைகளையும் பேசிவிட்டு கடைசி ஐந்து நிமிடம் தலிதகள், முஸ்லிம்கள் எனப் பேசத் தொடங்கியவுடன், “இனி ஒரு வார்த்தை பேசினால் உன் கையை வெட்டுவோம்” என என் கூட்டத்தில் வன்முறை செய்தார்களே அவர்கள் எந்தெந்த அமைப்பினர் என அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் ஹாஜாகனி. அதில் ஒரு சாரார் சீமான் ஆட்கள். இன்னொரு சாரர் யார் எனக் கேட்டுப் பாருங்கள். எனக்கும் அவர்களுக்கும் என்ன கொடுக்கல் வாங்கலா? முஸ்லிம் கள் பற்றிப் பேசக் கூடாது, தலித்கள் பற்றிப் பேசக் கூடாது என்றுதானே அந்த வன்முறை. அதை நீங்கள் எல்லாம் அன்று கேட்டிருக்க வேண்டும் ஹாஜாகனி. உங்கள் இதழ்களில் கண்டித்து எழுதியிருக்க வேண்டும். ஆளூர் ஷா நவாஸ் சீமானிடம், “என்ன இப்படி மார்க்ஸ் கூட்டத்தில் உங்கள் ஆட்கள் இப்படிச் செய்துள்ளார்களே” எனக் கேட்டதற்கு அந்த ஆள் என்ன சொன்னார் என்பதை நவாசிடம் கேட்டுப்பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *