மதச்சார்பின்மை என்பது என்ன?

அரசிலிருந்து மதத்தைப் பிரிப்பது

அரசையும் மதத்தையும் பிரிப்பதே மதச்சார்பின்மையின் அடித்தளம் ஆகும்.எந்த ஒரு மதத்தினரும் அரசில் தலையிடாமையையும், அதேபோல அரசு எந்த ஒரு மதத்திலும் தலையிடாமையையும் உறுதி செய்கிறது.

1.பிரித்து நிறுத்தல் : மதநிறுவனங்களையும் அரசு நிறுவனங்களையும் தனித்தனியே நிறுத்துதல். பொதுப்புலத்தில் மதம் பங்கேற்கலாம். ஆனால் சமூகத்தில் எந்த மதமும் எந்த வகையிலும் கூடுதல் முக்கியத்துவம் அல்லது ஆதிக்கம் செலுத்த முடியாது.

2. தேர்வுச் சுதந்திரம் : பிறருக்கு எந்த இடையூறும் இன்றி யாரொருவரும் தம் நம்பிக்கையைக் கடைபிடிக்கும் உரிமை. அது மட்டுமல்ல அவர் விருப்பம்போல அதை மாற்றிக் கொள்வதற்கோ, அல்லது, எந்த நம்பிக்கையும் இல்லாமல் வாழ்வதற்கோ உள்ள உரிமை. இதையே மனச்சாட்சித் சுதந்திரம் என்கிறோம்.

3. சமத்துவம் : ஒருவரின் மத நம்பிக்கையோ இல்லை அல்லது எந்த மதத்தின்மீதும் நம்பிக்கை இன்மையோ அவருக்கு எந்த வகையிலும் கூடுதல் உரிமைகளை அனுபவிப்பதற்கோ அல்லது ஏதேனும் உரிமைகள் தடுக்கப்படுவதற்கோ காரணமாகக் கூடாது.

மதச்சார்பின்மை என்பது நம்பிக்கையாளர்களை மட்டுமல்ல நம்பிக்கை அற்றவர்களின் உரிமைகளையும்  பாதுகாப்பது

மதச்சார்பின்மை என்பது ஒருவரது மதம் மற்றும் இதர நம்பிக்கைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதற்கு உறுதி அளிப்பது. மற்றவர்களின் மதச் சுதந்திரத்தில் தலையிடாதவரை யாரொருவரும் தன் மதத்தைக் கடைபிடிக்கும் உரிமையைப் பாதுகாப்பது. எந்த ஒரு நம்பிக்கையையும் ஒரு தனிமனிதர் கடைபிடிப்பதற்கான உரிமை என்பது இன்னொரு பக்கம் எந்த ஒரு நம்பிக்கையையும் ஏற்காமலிருக்கும் சுதந்திரத்தை வழங்குவதும் ஆகும்,

மதச்சார்பின்மை என்பது ஜனநாயகம் மற்றும் சமத்துவம் குறித்த ஒரு கருத்தாக்கம்

மதச்சார்பற்ற ஜனநாயகம் என்பதன் பொருள் சட்டத்தின் முன் குடிமக்கள் அனைவரும் சமம் என்பதை நடைமுறையில் உறுதி செய்வது. எந்த ஒரு மதத்திலோ அரசியல் கட்சியிலோ ஒருவர் இருப்பது என்பது அவருக்கு எந்தவிதமான கூடுதல் உரிமைகளை அளிக்காது. அதேபோல அதனாலேயே யாரொருவரின் எந்த உரிமையும் பாதிக்கப்படவும் காரணமாகாது.

மதச்சார்பின்மை என்பது ஜனநாயகம் மற்றும் சமத்துவம் குறித்த ஒரு கருத்தாக்கம்

மதச்சார்பற்ற ஜனநாயகம் என்பதன் பொருள் சட்டத்தின் முன் குடிமக்கள் அனைவரும் சமம் என்பதை நடைமுறையில் உறுதி செய்வது. எந்த ஒரு மதத்திலோ அரசியல் கட்சியிலோ ஒருவர் இருப்பது என்பது அவருக்கு எந்தவிதமான கூடுதல் உரிமைகளையும் அளிக்காது. அதேபோல அவரது எந்த உரிமையும் பாதிக்கப்படவும் அது காரணமாகாது.

மதச்சார்பின்மை என்பது மதம் சார்ந்த கோரிக்கைகளைக் காட்டிலும் உலகளாவிய மனித உரிமைகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. பெண்கள், ஓரினப் புணர்ச்சியை நடைமுறையில் கொண்டவர்கள் (LGBT), மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட பிற எல்லாவிதமான சிறுபான்மையினரும் சட்டத்தின் முன் சமத்துவம் என்பதை உயர்த்திப் பிடிக்கிறது. சட்டரீதியான இப்படியான சமத்துவம் என்பது ஏதேனும் ஒரு மத அல்லது தத்துவ நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் அப்படியான நம்பிக்கைகள் இல்லதவர்களும் சம உரிமைகளை அனுபவிப்பதை உறுதி செய்கிறது.

பொதுச் சேவைகளை அனுபவிக்கும் உரிமைகளை எல்லோருக்கும் உறுதி செய்வது

பள்ளிகள், மருத்துவச் சேவைகள், காவல்துறை மற்றும் இதர அரசுச் சேவைகள் ஆகியவற்றைப் மக்கள் எல்லோரும் பயன்படுத்துகின்றனர். நடைமுறைப் பயன்பாட்டில் இத்தகைய பொதுச் சேவைகள் அனைத்தும் மதச் சார்பற்றவையாக இருப்பது அவசியம். மத நம்பிக்கை அல்லது நம்பிக்கை இன்மைகளின் அடிப்படையில் இச்சேவைகளை யாருக்கும் மறுக்கக் கூடாது. அரசு நிதியில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் எந்த ஒரு மதத்தையும் சார்ந்துள்ளனதாகவோ, எந்த ஒரு நம்பிக்கையையும் உயர்த்திப் பிடிப்பதாகவோ இருக்கக் கூடாது. பள்ளிகளில் குழந்தைகளைப் பெற்றோர்களது மதங்களின் அடிப்படையில் பிரிக்காமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வியை ஒன்றாகத் தர வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள், ஏதிலியர் விடுதிகள் போன்ற ஏதேனும் ஒரு பொது நிறுவனம், ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அமைப்பை ஏதேனும் ஒரு சேவைக்கு அனுமதித்தால் அந்தச் சேவை எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அவ்வாறு அனுமதிக்கப்பட்ட அமைப்பு தன் நம்பிக்கைகள அங்குள்ளவர்களின் மீது திணிக்க அனுமதிக்கக் கூடாது.

மதச்சார்பின்மை என்பது நாத்திகம் அல்ல

விபூதி பூசுவது, ஹிஜாப் அணிவது, மத அடையாளத்தை வெளிப்படுத்தும் தலைப்பாகை முதலான மத நம்பிக்கை உடையவர்கள் பொது வெளியில் அவற்றைக் கடைபிடிக்கவும் வெளிப்படுத்தவும் உள்ள உரிமையைத் தடை செய்யக் கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பதில் எந்த ஒரு குறிப்பான நம்பிக்கை அல்லது அமைப்பிற்கும் கூடுதல் உரிமைகளை அளிக்க முடியாது. ஜனநாயகத்தில் எல்லாக் கருத்துக்களும் நம்பிக்கைகளும் விவாதிக்கப்படுவதற்கு இடமுண்டு.

எல்லாவிதமான மத நம்பிக்கை உடையவர்களும் , நம்பிக்கை இல்லாதவர்களும் அமைதியாகவும், சமத்துவமாகவும் வாழும் வாய்ப்புள்ள ஒரு ஆகச் சிறந்த ஆட்சி முறை என்பது மதச் சார்பற்ற ஆளுகையே.

178 thoughts on “மதச்சார்பின்மை என்பது என்ன?

  1. You can definitely see your enthusiasm within the paintings you write. The arena hopes for more passionate writers such as you who aren’t afraid to mention how they believe. All the time go after your heart. “The most profound joy has more of gravity than of gaiety in it.” by Michel de Montaigne.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *