இஸ்லாமோ ஃபோபியா: அறிஞர்களுடன் ஒரு உரையாடல்

[உலகின் பல்வேறு பகுதிகளிலும் எவ்வாறு இஸ்லாமோ ஃபோபியா (Islamophobia) என்பது ஒரு அரசியல் சக்தியாகச் செயல்படுகிறது, சமூக – கலாச்சார தளங்களில் செயல்படுகிறது, அதை எவ்வாறு எதிர் கொள்வது என உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் பலரிடமும் பேசித் தொகுக்கப்பட்டது. இஸ்லாமோ ஃபோபியா என்பது எவ்வாறு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு மற்றும் தவறான முன்கணிப்புகளுக்குக் காரணமாகிறது; குறிப்பாக இஸ்லாமும் முஸ்லிம்களும் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெறும்போது இப்படியான முஸ்லிம் வெறுப்பு எவ்வாறு அதிகமாகிறது என்பதை அவர்கள் ரத்தினச் சுருக்கமாக விவரிக்கின்றனர்.]

டாக்டர் சல்மான் சய்யித், லீட்ஸ் பல்கலைக் கழகம், பிரிட்டன்: எங்கேனும் சோதனைச் சாவடிக்களைப் பார்த்தாலே நம் கையிலுள்ள போத்தல்களைக் கவிழ்த்து அவற்றிலுள்ள குளிர்பானங்களைக் கீழே ஊற்றிக் காட்டுவதற்கும், விமான நிலையங்களுக்குப் போனாலே நமது ஷூக்களைக் கழற்றிக் காட்டவும் கற்றுக்கொண்டு விட்டோம். யார் வேண்டுமானாலும் நம்முடைய மின்னஞ்சல்களைப் படிக்கமுடியும் என்கிற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராகிவிட்டோம். இஸ்லாமோ ஃபோபியா என்பது சிவில் உரிமைகளைக் குறுக்கிக் கொண்டே போகிறது.

டாக்டர் நஸியா காஸி, ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம், அமெரிக்கா:.

இஸ்லாமோபோபியா என்பது ஒரு தவறான பெயர்சூட்டல். அது உண்மையில் முஸ்லிம்களைப்பற்றிப் பேசுவதல்ல. முஸ்லிம்களைப் பேசுவதன் ஊடாக அரசிடம் அதிகாரத்தைக் குவிப்பது, அடக்கி ஆள்வது, ஒடுக்கு முறைகளை அவிழ்த்து விடுவது ஆகியனவே அதன் உண்மையான நோக்கம்

டாக்டர் சஹர் அஸீஸ், ருட்கர்ஸ் பல்கலைக்கழகம், அமெரிக்கா: இஸ்லாமோ ஃபோபியா என்பது மதவெறி, இனவெறுப்பு ஆகியவற்றின் இன்றைய தன்மை, அமைப்புக் கூறு முதலானவை பற்றி விளக்குவதற்கும்  பேசுவதற்குமான ஒரு கருவி.

டாக்டர் ஹதீம் பாசியான், பர்க்லி பல்கலைக்கழகம், அமெரிக்கா: முஸ்லிம் என்பவர் பகுத்தறிவு குறைந்தவர், நவீன காலத்திற்கு முந்திய ஆசாமி, தேங்கிப் போனவர், வளர்ச்சியுடன் மேற்செல்லத் தெரியாதவர், நவீனத்துவத்திற்குத் தகுதியற்றவர் என்றெல்லாம் சொல்வதுதான் இஸ்லாமோ ஃபோபியா.

சல்மான்: முஸ்லிம்களை இன்னோரு கிரகத்தில் உள்ளவர்களாகச் சித்திரிக்கும் வேலை அது

சஹர்: இஸ்லாமை அச்சத்துக்குரியதாகவும், முஸ்லிம்களை அச்சுறுத்துபவர்களாகவும் முன்னிறுத்தி வந்த வரலாறு மற்றும் அரசியல் காரணிகளில் அது வேர்கொண்டுள்ளது.

சல்மான்: கொள்கை, சட்டம், பண்பாடு எனப் பல மட்டங்களில் சாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய சிவில் உரிமை முன்னேற்றங்களைப் பின்னோக்கித் தள்ளும் முக்கிய வழிமுறைகளில் ஒன்றாக அது இன்று உள்ளது.

டாக்டர் சமி அல் அரியான், இஸ்தான்புல் சபாஹடின் சைம் பல்கலைக்கழகம்: ஏராளமான இஸ்லாமோ ஃபோபியா வலைப்பின்னல்கள் செயல்படுகின்றன. அவை செய்வது எல்லாம் இஸ்லாம் பற்றிய ஒரு (கொடூரமான) பிம்பத்தைக் கட்டமைப்பதுதான்.

சஹர்: ‘கலாச்சாரங்களுக்கு இடையேயான மோதல்’ (clash of civilization) மற்றும் கீழைத்தேயவாதம் (orientalism) முதலான கதையாடல்களில் அது வேர் கொண்டுள்ளது.

சல்மான்: இஸ்லாமோ ஃபோபியா முன்னே சென்றால் அதன் பின்னே தொடர்வது உலகளவில் மீண்டும் வெள்ளை மேலாத்திக்கதை நிறுவும் பேராசை.

ஹதீம்: எல்லாவற்றிலும் நவீனமாகவும், பகுத்தறிவுடனும், முற்போக்காகவும், இருப்பதற்கான ஒரே வழி ஐரோப்பியச் சொல்லாடல் முறையை அப்படியே பின்பற்றிச் செயல்படுவதுதான் என்பதே இஸ்லாமோ ஃபோபியாவின் ஒரே புரிதல்.

சல்மான்: தீவிர வலதுசாரிக் கட்சிகள் மட்டுந்தான் இப்படி என்பதல்ல.

நஸீயா: மையநீரோட்டமாகக் கருதப்படுபவர்களின் வேலையும் இஸ்லாம் என்றால் என்ன, முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள், மேற்குலகிற்கு அவர்கள் எப்படித் தோற்றமளிக்கிறார்கள் என ‘விளக்குவது’ தான்.

டாக்டர் மொகமட் மொரான்டி, டெஹ்ரான் பல்கலைக் கழகம், ஈரான்: முஸ்லிம்கள் அவர்களைப்பற்றித் தாழ்வு மனப்பான்மையுடன் சிந்திப்பதற்கு அது தூண்டுகிறது. அவர்களிடம் தன்னம்பிக்கை இழப்பை ஏற்படுத்துகிறது.

ஹதீம்: எப்படி முஸ்லிமாக இருப்பது, அதாவது உங்களின் சொந்த உடலுக்குள்ளேயே நீங்கள் அந்நியனாக இருப்பது என அது அவர்களுக்குச் சொல்லித் தருகிறது.

மொஹமட்: பல முஸ்லிம்கள் இவ்வாறு “கீழைத் தேசத்தவர்களாக ஆக்கப்பாட்ட” கீழைத் தேசத்தவர்களாகி வாழ்கின்றனர்.

சல்மான்: இஸ்லாமோ ஃபோபியா என்பதை வெறுமனே முஸ்லிம்களையும் முஸ்லிம் சிறுபான்மையினரையும் மட்டுமே பாதிக்கும் ஒன்றாகக் கருதக் கூடாது.

சஹர்: ஆமாம் அவர்கள் இந்தியராகவும், இந்துவாகவும் இருந்தால் கூட, , அவர்களையும் இப்படியான முஸ்லிம்களாகவே பார்ப்பது, அல்லது பாகிஸ்தானியாகப் பார்ப்பதற்கு இது வித்திடுகிறது.. இஸ்லாமுடன் ஒருவருக்கு இருக்கும் தொடர்பு மட்டுமே, அல்லது தொடர்பு உள்ளதாக இவர்கள் நினைப்பது மட்டுமே போதும் அவரது விசுவாசத்தைச் சந்தேகிப்பதற்கு. அமெரிக்காவில் பிறந்தவர்களாகவும், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் கூட இவர்களின் அந்த நினைப்பு ஒன்றே போதும் அவர்களை வன்முறையாளர்களாகக் கருதுவதற்கு.

சல்மான்: இன ஒதுக்கல் கால ‘ஜிம் குரோ’ கொலைக் கணக்கைப் போல முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம்களாகக் கருத்தப்பவர்களின் கொலைக் கணக்குகளும் இங்கு உண்டு.

நஸியா: அமெரிக்கப் பேரரை ஆதரிப்பவர்களுக்கு ‘நல்ல முஸ்லிம்’ என்கிற பெருமை உண்டு. அப்படியான முஸ்லிம்களைப் பேரரசு மகிழ்ச்சியாகத் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளும்.

சல்மான்: பன்மைக் கலாசாரம் தோற்றுவிட்டது என அவர்கள் சொல்வதன் பொருள் என்ன? வெள்ளையர்களின் சிறப்புரிமைகளைக் கேள்விமுறை இல்லாமல் நிலைநிறுத்துவது அவர்களுக்குக் கடினமாகிவிட்டது என்பதுதான்.

நஸியா: கிஸிர் கானுடைய மகன் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போரில் இறந்து போனார். டொனால்ட் ட்ரம்பின் இஸ்லாமோ ஃபோபியாவை நோக்கி அவர் இப்படி ஒரு சவாலை விட்டார். தன் சட்டைப் பையிலிருந்து அமெரிக்க அரசியல் சட்டத்தை உருவி எடுத்த அவர் சொன்னார்: “டொனால்ட் ட்ரம்ப்! நீ எஎப்போதாவது இதை வாசித்ததுண்டா?”

மொஹம்மட்: நமது மனங்கள் பெரிய அளவில் காலனியமயப்படுத்தப் பட்டுள்ளன. நமக்கு அது தெரியாதபோதும் அதுவே உண்மை. இதன் பொருள் மேலைக் கல்வி மோசம் என்பதல்ல. ஆனால் நாம் ஒன்றைப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு பல கருத்துக்களும் மதிப்பீடுகளும் (values) வெளியில் உண்டு என்பதுதான்.

நஸியா: அமெரிக்க இஸ்லாமோ ஃபோபியா என்பது அதன் பேரரசு உருவாக்கத் திட்டங்களில் (project) ஒன்று. அதன் முதலாளிய முறையுடன் தொடர்புடையது அது. இந்த உண்மைகளை இலக்காக்காக்கிச் செயல்படாத வரையில் இஸ்லாத்தை எவ்வளவுதான் அவர்களிடம் விளக்கிப் பேசிக் கொண்டிருந்தும் பயனில்லை.

மொஹம்மட்: முஸ்லிம்களாகிய நம்மிடம் முஸ்லிம்கள் என்கிற வகையில் உயர் மதிப்பீடுகள் உண்டு. சமூகம் மேன்மையுறுவதற்கு அவற்றால் பங்களிக்க இயலும்.

ஹதீம்: எந்த மானுடரும் தங்களைத் தாங்களே மனிதாயப் படுத்திக் கொள்ளும் நடைமுறையில் இறங்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் மனிதர்களாக வாழ்வதாலேயே மனிதாயம் மிக்கவர்களாக ஆகி விடுகின்றனர்.

நன்றி: TRTWORLD – இந்த வெப் சைட்டில் இருந்து தமிழாக்கியுள்ளேன்.

இஸ்லாமோ ஃபோபியா : அறிஞர்களுடன் ஒரு உரையாடல்

[உலகின் பல்வேறு பகுதிகளிலும் எவ்வாறு இஸ்லாமோ ஃபோபியா (Islamophobia) என்பது ஒரு அரசியல் சக்தியாகச் செயல்படுகிறது, சமூக – கலாச்சார தளங்களில் செயல்படுகிறது, அதை எவ்வாறு எதிர் கொள்வது என உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் பலரிடமும் பேசித் தொகுக்கப்பட்டது. இஸ்லாமோ ஃபோபியா என்பது எவ்வாறு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு மற்றும் தவறான முன்கணிப்புகளுக்குக் காரணமாகிறது; குறிப்பாக இஸ்லாமும் முஸ்லிம்களும் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெறும்போது இப்படியான முஸ்லிம் வெறுப்பு எவ்வாறு அதிகமாகிறது என்பதை அவர்கள் ரத்தினச் சுருக்கமாக விவரிக்கின்றனர்.]

டாக்டர் சல்மான் சய்யித், லீட்ஸ் பல்கலைக் கழகம், பிரிட்டன்: எங்கேனும் சோதனைச் சாவடிக்களைப் பார்த்தாலே நம் கையிலுள்ள போத்தல்களைக் கவிழ்த்து அவற்றிலுள்ள குளிர்பானங்களைக் கீழே ஊற்றிக் காட்டுவதற்கும், விமான நிலையங்களுக்குப் போனாலே நமது ஷூக்களைக் கழற்றிக் காட்டவும் கற்றுக்கொண்டு விட்டோம். யார் வேண்டுமானாலும் நம்முடைய மின்னஞ்சல்களைப் படிக்கமுடியும் என்கிற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராகிவிட்டோம். இஸ்லாமோ ஃபோபியா என்பது சிவில் உரிமைகளைக் குறுக்கிக் கொண்டே போகிறது.

டாக்டர் நஸியா காஸி, ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம், அமெரிக்கா:.

இஸ்லாமோபோபியா என்பது ஒரு தவறான பெயர்சூட்டல். அது உண்மையில் முஸ்லிம்களைப்பற்றிப் பேசுவதல்ல. முஸ்லிம்களைப் பேசுவதன் ஊடாக அரசிடம் அதிகாரத்தைக் குவிப்பது, அடக்கி ஆள்வது, ஒடுக்கு முறைகளை அவிழ்த்து விடுவது ஆகியனவே அதன் உண்மையான நோக்கம்

டாக்டர் சஹர் அஸீஸ், ருட்கர்ஸ் பல்கலைக்கழகம், அமெரிக்கா: இஸ்லாமோ ஃபோபியா என்பது மதவெறி, இனவெறுப்பு ஆகியவற்றின் இன்றைய தன்மை, அமைப்புக் கூறு முதலானவை பற்றி விளக்குவதற்கும்  பேசுவதற்குமான ஒரு கருவி.

டாக்டர் ஹதீம் பாசியான், பர்க்லி பல்கலைக்கழகம், அமெரிக்கா: முஸ்லிம் என்பவர் பகுத்தறிவு குறைந்தவர், நவீன காலத்திற்கு முந்திய ஆசாமி, தேங்கிப் போனவர், வளர்ச்சியுடன் மேற்செல்லத் தெரியாதவர், நவீனத்துவத்திற்குத் தகுதியற்றவர் என்றெல்லாம் சொல்வதுதான் இஸ்லாமோ ஃபோபியா.

சல்மான்: முஸ்லிம்களை இன்னோரு கிரகத்தில் உள்ளவர்களாகச் சித்திரிக்கும் வேலை அது

சஹர்: இஸ்லாமை அச்சத்துக்குரியதாகவும், முஸ்லிம்களை அச்சுறுத்துபவர்களாகவும் முன்னிறுத்தி வந்த வரலாறு மற்றும் அரசியல் காரணிகளில் அது வேர்கொண்டுள்ளது.

சல்மான்: கொள்கை, சட்டம், பண்பாடு எனப் பல மட்டங்களில் சாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய சிவில் உரிமை முன்னேற்றங்களைப் பின்னோக்கித் தள்ளும் முக்கிய வழிமுறைகளில் ஒன்றாக அது இன்று உள்ளது.

டாக்டர் சமி அல் அரியான், இஸ்தான்புல் சபாஹடின் சைம் பல்கலைக்கழகம்: ஏராளமான இஸ்லாமோ ஃபோபியா வலைப்பின்னல்கள் செயல்படுகின்றன. அவை செய்வது எல்லாம் இஸ்லாம் பற்றிய ஒரு (கொடூரமான) பிம்பத்தைக் கட்டமைப்பதுதான்.

சஹர்: ‘கலாச்சாரங்களுக்கு இடையேயான மோதல்’ (clash of civilization) மற்றும் கீழைத்தேயவாதம் (orientalism) முதலான கதையாடல்களில் அது வேர் கொண்டுள்ளது.

சல்மான்: இஸ்லாமோ ஃபோபியா முன்னே சென்றால் அதன் பின்னே தொடர்வது உலகளவில் மீண்டும் வெள்ளை மேலாத்திக்கதை நிறுவும் பேராசை.

ஹதீம்: எல்லாவற்றிலும் நவீனமாகவும், பகுத்தறிவுடனும், முற்போக்காகவும், இருப்பதற்கான ஒரே வழி ஐரோப்பியச் சொல்லாடல் முறையை அப்படியே பின்பற்றிச் செயல்படுவதுதான் என்பதே இஸ்லாமோ ஃபோபியாவின் ஒரே புரிதல்.

சல்மான்: தீவிர வலதுசாரிக் கட்சிகள் மட்டுந்தான் இப்படி என்பதல்ல.

நஸீயா: மையநீரோட்டமாகக் கருதப்படுபவர்களின் வேலையும் இஸ்லாம் என்றால் என்ன, முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள், மேற்குலகிற்கு அவர்கள் எப்படித் தோற்றமளிக்கிறார்கள் என ‘விளக்குவது’ தான்.

டாக்டர் மொகமட் மொரான்டி, டெஹ்ரான் பல்கலைக் கழகம், ஈரான்: முஸ்லிம்கள் அவர்களைப்பற்றித் தாழ்வு மனப்பான்மையுடன் சிந்திப்பதற்கு அது தூண்டுகிறது. அவர்களிடம் தன்னம்பிக்கை இழப்பை ஏற்படுத்துகிறது.

ஹதீம்: எப்படி முஸ்லிமாக இருப்பது, அதாவது உங்களின் சொந்த உடலுக்குள்ளேயே நீங்கள் அந்நியனாக இருப்பது என அது அவர்களுக்குச் சொல்லித் தருகிறது.

மொஹமட்: பல முஸ்லிம்கள் இவ்வாறு “கீழைத் தேசத்தவர்களாக ஆக்கப்பாட்ட” கீழைத் தேசத்தவர்களாகி வாழ்கின்றனர்.

சல்மான்: இஸ்லாமோ ஃபோபியா என்பதை வெறுமனே முஸ்லிம்களையும் முஸ்லிம் சிறுபான்மையினரையும் மட்டுமே பாதிக்கு ஒன்றாகக் கருதக் கூடாது.

சஹர்: ஆமாம் அவர்கள் இந்தியராகவும், இந்துவாகவும் இருந்தால் கூட, , அவர்களையும் இப்படியான முஸ்லிம்களாகவே பார்ப்பது, அல்லது பாகிஸ்தானியாகப் பார்ப்பதற்கு இது வித்திடுகிறது.. இஸ்லாமுடன் ஒருவருக்கு இருக்கும் தொடர்பு மட்டுமே, அல்லது தொடர்பு உள்ளதாக இவர்கள் நினைப்பது மட்டுமே போதும் அவரது விசுவாசத்தைச் சந்தேகிப்பதற்கு. அமெரிக்காவில் பிறந்தவர்களாகவும், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் கூட இவர்களின் அந்த நினைப்பு ஒன்றே போதும் அவர்களை வன்முறையாளர்களாகக் கருதுவதற்கு.

சல்மான்: இன ஒதுக்கல் கால ‘ஜிம் குரோ’ கொலைக் கணக்கைப் போல முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம்களாகக் கருத்தப்பவர்களின் கொலைக் கணக்குகளும் இங்கு உண்டு.

நஸியா: அமெரிக்கப் பேரரசை ஆதரிப்பவர்களுக்கு ‘நல்ல முஸ்லிம்’ என்கிற பெருமை உண்டு. அப்படியான முஸ்லிம்களைப் பேரரசு மகிழ்ச்சியாகத் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளும்.

சல்மான்: பன்மைக் கலாசாரம் தோற்றுவிட்டது என அவர்கள் சொல்வதன் பொருள் என்ன? வெள்ளையர்களின் சிறப்புரிமைகளைக் கேள்விமுறை இல்லாமல் நிலைநிறுத்துவது அவர்களுக்குக் கடினமாகிவிட்டது என்பதுதான்.

நஸியா: கிஸிர் கானுடைய மகன் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போரில் இறந்து போனார். டொனால்ட் ட்ரம்பின் இஸ்லாமோ ஃபோபியாவை நோக்கி அவர் இப்படி ஒரு சவாலை விட்டார். தன் சட்டைப் பையிலிருந்து அமெரிக்க அரசியல் சட்டத்தை உருவி எடுத்த அவர் சொன்னார்: “டொனால்ட் ட்ரம்ப்! நீ எஎப்போதாவது இதை வாசித்ததுண்டா?”

மொஹம்மட்: நமது மனங்கள் பெரிய அளவில் காலனியமயப்படுத்தப் பட்டுள்ளன. நமக்கு அது தெரியாதபோதும் அதுவே உண்மை. இதன் பொருள் மேலைக் கல்வி மோசம் என்பதல்ல. ஆனால் நாம் ஒன்றைப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு பல கருத்துக்களும் மதிப்பீடுகளும் (values) வெளியில் உண்டு என்பதுதான்.

நஸியா: அமெரிக்க இஸ்லாமோ ஃபோபியா என்பது அதன் பேரரசு உருவாக்கத் திட்டங்களில் (project) ஒன்று. அதன் முதலாளிய முறையுடன் தொடர்புடையது அது. இந்த உண்மைகளை இலக்காக்காக்கிச் செயல்படாத வரையில் இஸ்லாத்தை எவ்வளவுதான் அவர்களிடம் விளக்கிப் பேசிக் கொண்டிருந்தும் பயனில்லை.

மொஹம்மட்: முஸ்லிம்களாகிய நம்மிடம் முஸ்லிம்கள் என்கிற வகையில் உயர் மதிப்பீடுகள் உண்டு. சமூகம் மேன்மையுறுவதற்கு அவற்றால் பங்களிக்க இயலும்.

ஹதீம்: எந்த மானுடரும் தங்களைத் தாங்களே மனிதாயப் படுத்திக் கொள்ளும் நடைமுறையில் இறங்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் மனிதர்களாக வாழ்வதாலேயே மனிதாயம் மிக்கவர்களாக ஆகி விடுகின்றனர்.

நன்றி: TRTWORLD

பவுத்தம் பரப்ப வாராதுபோல வந்த மாமணி பெரியவர் ஓ.ர.ந கிருஷ்ணன்

பார்ப்பனீயத்தாலும் சைவத்தாலும் அழிக்கப்பட்டுத் தமிழ் மண்ணிலிருந்து துடைக்கப்பட்ட பவுத்தத்தைப் புத்துயிர்க்கும் நோக்கில் சென்ற 150 ஆண்டு காலத்தில் சென்னையை மையமாகக் கொண்டுப் பலரும் பங்காற்றியுள்ளனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனில் கர்னல் ஆல்காட், மேடம் ப்ளாவட்ஸ்கி, அயோத்திதாசர், அநகாரிக தர்மபாலா, பேராசிரியர் லட்சுமி நரசு, தந்தை பெரியார், அறிஞர் சிங்காரவேலர் முதலானோரைக் குறிப்பிட்டுச் செல்லலாம். உ.வே.சா அவர்கள் விரிந்த முன்னுரையுடன் பதிப்பித்த மணிமேகலை, கோபாலய்யரின் உரையுடன் வெளிவந்த வீர சோழியம், மயிலை சீனி வேங்கடசாமி, பேரா.சோ.ந.கந்தசாமி முதலானோரின் பதிப்பு முயற்சிகள் மற்றும் நூலாக்கங்கள் ஆகியன இன்னொரு பக்கம் பவுத்த ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமைந்தன.

எனினும் பவுத்தப் புத்துயிர்ப்பு இயக்கம் கடந்த 50 ஆண்டுகளில் சற்றே தொய்வுற்று இருந்தது என்றே சொல்ல வேண்டும். எழும்பூர் கென்னத் லேனில் அமைந்துள்ள புத்த மையம் இலங்கை சிங்கள பவுத்தர்களின் கட்டுப்பாட்டில் இயங்குவது. மற்றபடி தமிழகத்தில் பெரிய அளவில் வவுத்த வழிகாட்டுத் தலங்கள், ஒரு மதத்தின் இருப்பிற்குத் தேவையான சமூக ஒன்று கூடல் மையங்கள் இங்கு போதிய அளவில் கிடையாது. இல்லை எனவே சொல்லலாம். இத்தனைக்கும் எத்தனையோ புத்த சிலைகள் ஆங்காங்கு மண்ணுக்கடியில் புதையுண்டு கிடந்து கண்டு பிடிக்கப்படுவது அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இடைக்காலத்தில் அயோத்திதாசரின் மகன், அன்பு பொன்னோவியம், தங்கவயல் வாணிதாசன், பெரியவர் சுந்தரராஜன் ஆகியோர் தம்மப் பணியைத் தொடர்ந்தாலும் வீச்சுடன் செயல்பாடுகள் இல்லை.

இந்நிலையில்தான் சில ஆண்டுகளுக்கு முன் ‘எங்கிருந்தோ வந்தான்….. இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..’ என்பதைப்போல இங்கு வந்துதித்தார் பெரியவர் ஓ.ரா.ந.கிருஷ்ணன் அவர்கள். அவர் பூர்வாசிரமம் அறியேன். எப்போதாவது அறிய முனைந்தபோது மிகச் சுருக்கமான பதிலே கிடைத்தது.

அடுத்த சில ஆண்டுகளில் சென்னையை மையமாகக் கொண்டு தம்மப் பணி மீண்டும் துளிர்த்தது. பவுத்தத்தில் ஆர்வமுடையவர்களைத் தேடித் தேடிச் சென்று அவர்களை ஒருங்கிணைத்தார் பெரியவர் கிருஷ்ணன். நந்தனம் அரசு கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஜெயபாலன், எங்களோடு சுயமரியாதை இயக்கத்தில் பணி செய்த என் அன்பிற்குரிய நடராஜன், தங்கவயல் வாணிதாசன் …. என இன்னும் பல பவுத்த ஆர்வலர்கள் அவரால் ஒன்றிணைக்கப்பட்டனர்.

‘போதிமுரசு’ என்றொரு காலாண்டு இதழும் உருவானது. ‘மெத்தா’ பதிப்பகம் தம்ம நூல்களை வெளியிட என உருவாக்கப்பட்டது. ‘தமிழ்நாடு பவுத்த சங்கம்’ அமைக்கப்பட்டு அதில் செயலாளராகப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்கினார் கிருஷ்ணன். சங்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய பிக்கு போதிபாலர்.

அப்படித்தான் ஒருநாள் என்னையும் தேடிவந்தார் பெரியவர் கிருஷ்ணன். நான் பேறு பெற்றேன். எனது ‘புத்தம் சரணம்’ நூலை மெத்தா பதிப்பகத்தில் வெளியிட வேண்டும் என்றார். பணிந்து ஏற்றுக் கொண்டேன். “ஒரு சிறந்த தம்மப் பணியாகக் கருதி இந்நூலை வெளீயிடுகிறோம்” என முன்னுரைத்து அந்நூல் அவர்களாலும் வெளியிடப்பட்டது.

கிருஷ்ணன் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகங்கத்துடன் ஒருங்கிணைந்து பவுத்தவியல் கருத்தரங்குகளையும் அவ்வப்போது  நடத்தி வருகிறார். அவற்றில் நானும் மறக்காமல் அழைக்கப்படுவதுண்டு.

மெத்தா பதிப்பகம் Life and Consciousness உட்பட 8 ஆங்கில நூல்கள் (இவற்றில் சில முக்கிய ஆங்கிலப் பதிப்பகங்களுடன் இணைந்து வெளியிடப் பட்டவை), நாகார்ஜுனரின் ‘சுரில்லேகா’ உட்பட 30 தமிழ் நூல்கள், லட்சுமி நரசுவின் ‘பௌத்தம் என்றால் என்ன?’ உட்பட 10 மொழியாக நூல்கள், ‘தீபவம்சம்’ உட்பட பிக்கு போதிபாலரின் 6 நூல்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.

ஏதாவது முக்கிய பவுத்த நூல் என அடையாளம் காட்டினால் அவற்றை உடன் ஆர்வத்துடன் வெளியிடுகின்றனர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு இப்போது அச்சில் இல்லாத நூலொன்று என் சேகரத்தில் இருந்தது. முன்னாள் பர்மிய பிரதமர் ஊநு வின் ‘புத்தர் பிரான்’ எனும் அந்நூல் ஊநு அவர்கள் வங்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் ஆற்றிய உரை. நான்கு மொழிகளில் அது மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதில் தமிழும் ஒன்று.  அந்நூலை நான் நகலெடுத்து அனுப்பி அவரது கவனத்திற்குக் கொண்டுவந்தபோது அடுத்த சில வாராங்களில் அதுவும் மெத்தா வெளியீடாகப் புதிய நூலாகியது.

# # #

இருளில் ஒளியும் செஞ்சுடர், ஜே.கே – ஒரு பௌத்தரின் நோக்கில், பௌத்த வாழ்வியல் சடங்குகள், நாகார்ஜுனரின் சுரில்லேகா, திபேத்திய மரணநூல், லட்சுமி நரசுவின் பவுத்தம் என்றால் என்ன?, தலாய்லாமாவின் சொற்பொழிவுகள், தாமரை மலர்ச் சூத்திரம், பௌத்தத்தின் பார்வையில் இந்திய ஞான மரபுகள் முதலான நூல்கள் மற்றும் மொழியாக்கங்கள் பெரியவர் கிருஷ்ணன் அவர்களால் ஆக்கப்பட்டவை. (இது முழுமையான பட்டியல் அல்ல).

கிருஷ்ணனின் சில நூல்கள் ‘காலச்சுவடு’ வெளியீடாகவும் வந்துள்ளன.

கிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் எழுதியுள்ள ‘இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா’ எனும் நூல் ஆர்.எஸ்.எஸ்சின் எடுபிடிகளில் ஒருவரான ம. வெங்கடேசன் எனும் நபர் எழுதியுள்ள ‘இந்துத்துவ அம்பேத்கர்’ எனும் ஒரு அபத்த நூலுக்கு எழுதப்பட்ட உடனடியான மறுப்புரை. “பிறக்கும்போது இந்து மதத்தில் பிறந்தேன், சாகும்போது அதில் சாக மாட்டேன்’ எனச் சொல்லி பவுத்தம் தழுவியவரும், ‘சாதிக்கோட்டையில் பிளவை ஏற்படுத்த வேண்டுமானால் பகுத்தறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் சிறிதும் இடம் கொடாத வேத சாத்திரங்களுக்கு வெடிவைத்தே ஆக வேண்டும்’ எனவும், ‘(இந்து மதப்) புனிதநூல்கள், புராண சாத்திரங்கள் புனிதமானவையோ. அதிகாரபூர்வமானவையோ அல்ல எனச் சட்டபூர்வமாகச் செய்ய வேண்டும்’ எனவும் ‘பார்ப்பனீயத்தையும் முதலாளியத்தையும்’ இரு பெரும் எதிரிகள் என அடையாளம் காட்டியவருமான அண்ணல் அம்பேத்கரை இந்துத்துவவாதியாகச் சித்திரித்து எழுதுவது அம்பேத்கர் அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அவமானம். இதற்கு எதிராக எந்த எதிர்ப்பும் வராத நிலையில் அந்தப் பணியைத் தன் மேற் போட்டுக் கொண்டு கிருஷ்ணன் அவர்கள் உடன் எழுதிய அற்புதமான நூல்தான் இது.
# # #

பவுத்தத்தின் மீதும் அம்பேத்கரின் மீதும் ஒரு சேர பற்றும் மதிப்பும் உள்ள ஒருவரின் மனம் இந்த அவதூறால் எத்தனை நொந்து போகும் என்பதற்கு ஒரு வாழும் சாட்சியாக உள்ள அறிஞர் கிருஷ்ணன் அவர்களின் இந்நூலை நேற்று வெளியிட்டுப் பேசும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. சற்றே உணர்ச்சிவயப்பட்டுத்தான் என்னால் அங்கு அந்த உரையை நிகழ்த்த முடிந்தது.

மறைந்த பௌத்த பிக்கு வண,போதிபாலா அவர்கள் மதுரையிலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள மலையடிவாரக் கிராமமான குட்லாம்பட்டி எனும் பகுதியில் உருவாக்கியுள்ள ஒரு பௌத்த வணக்கத் தலம்தான் ‘தம்ம விஜய மகா விகாரை’. அமைதி தவழும் அந்த  மலை அடிவாரத்தில்தான் நேற்று அந்த நிகழ்வு நடை பெற்றது.

நேற்றைய நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து பன்மொழி அறிஞரும் சிங்களத்தில் மட்டுமின்றித் தமிழிலும்30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவருமான விஜயரத்னே, இலங்கையிலிருந்து வந்து மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயின்று வரும் வண.பிக்கு மங்கல தேரர், காந்தியியல் அறிஞர் செயப்பிரகாசம், பாலி மொழியிலிருந்து பௌத்த நூல்களை மொழியாக்கம் செய்யும் பேரா. செயப்பிரகாசம், மணிமேகலை ஆய்வாளர் பேரா. அரங்கமல்லிகா, தங்கவயல் வாணிதாசன், பவுத்த ஆய்வாளர் பேரா. ஜெயபாலன் முதலான பலரும் வந்திருந்தனர்.

காலை 11 மணி அளவில் அங்கிருந்த பவுத்த ஆலயத்தில் முறைப்படி பவுத்த வழிபாட்டை வண. போதிபாலர் தொடங்கி வைத்தார். பவுத்தம் தழுவியோர் ஆலய வளாகத்தில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்திலும் எங்களைப் போன்றோர் வெளியே பந்தலில் போடப்பட்டிருந்த நாற்காலி்களிலும் அமர்ந்திருந்தோம்.

மதிய உணவுக்குப் பின் சுமார் 2.30 மணி அளவில் வண.போதிபாலர் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் நூல் வெளீயீடுகள். பின் உரையாற்றுவோருக்கு ஒளிபெற்றவரின் திரு உருக்கள் வழங்கப்பட்டன. பின் சர்வ சமய வழிபாடு நடைபெற்றது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ. பவுத்த மதங்களின் தோத்திரப் பாடல்களும் புனித வசனங்களும் தமிழில் வாசிக்கப்பட்டன.பின் அனைவரும் சுருக்கமாக உரையாற்றினர்.

இறுதியில் முத்தாய்ப்பாக அமைந்தது பெரியவர் ஓ.ரா.ந கிருஷ்ணன் அவர்களின் உரை.

“இந்து மதத்தின் மீது எனக்கு வெறுப்பு ஏதும் இல்லை. இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா எனும் மறுப்பு நூலில் நான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைத்தான் சொல்லியுள்ளேனே தவிர இந்து மதத்தின் மீது எங்கும் வசையாக எதையும் சொல்லிவிடவில்லை. பவுத்தத்தில் துவேஷம் / வெறுப்புக்கு இடமில்லை. அன்பு, கருணை என்பது தவிர பவுத்தத்தில் வேறெதற்கும் இடமில்லை. ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன். என் அன்பிற்குரிய நண்பர்கள், அம்பேத்கர் பற்றாளர்கள் காந்தி மீது காட்டும் பகை மற்றும் வெறுப்பு எனக்குக் கவலை அளிக்கிறது.

உண்ணாவிரதத்தின் மூலம் காந்தி அம்பேத்கரின் கோரிக்கையை செயல்படுத்த விடாமல் செய்தது (கிட்டத் தட்ட) நூறு ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம். அவர் இந்து மதத்தைத் திருத்திவிட முடியும் என நம்பினார். அது பொய்த்துவிட்டது. யாருடைய நம்பிக்கைதான் முற்றிலும் நிறைவேறி விட்டது? இந்தப் பகை தேவையற்றது. நமக்கு இன்று அண்ணல் அம்பேத்கரும் வேண்டும். கார்ல் மார்க்சும் வேண்டும். காந்தியும் வேண்டும். தயவு செய்து இதை எல்லோரும் சிந்திக்கப் பணிந்து வேண்டுகிறேன்..”

பேசும்போது பெரியவர் கிருஷ்ணன் அவர்கள் பெரியாரின் பெயரைச் சொல்லாவிடாலும் நாம் தந்தை பெரியாரையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படியான ஒரு பகைக்கு எதிரான குரல்கள் கடந்த சில ஆண்டுகளில் நாளுக்கு நாள் பெருகி வருவதை உணர்கிறேன். சமூக ஊடகங்களிலும் இந்தக் குரல்கள் அதிகம் ஒலிக்கத் தொடங்கி விட்டன.

பவுத்தத்தில் வெறுப்புக்கோ பகைக்கோ இடமில்லை.

கூட்டம் முடிந்த பின் பெரியவர் கிருஷ்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு ,”இன்று உங்கள் பேச்சு மனசைத் தொட்டது சார். நீங்கள் சொன்னது மிக முக்கியமான செய்தி..” எனச் சொன்னபோது என் கண்கள் நீரை உகுத்தன. கடைசிச் சொற்கள் தொண்டைக்குள்ளேயே அடங்கின. அருகில் நின்றிருந்த நண்பர் பல்னீசின் கண்களும் கலங்கிச் சிவந்திருந்தன.

அயோத்தியில் இருந்தது பௌத்த விகாரை ! இது என்ன புது கலாட்டா?

‘விண்ணளாவ இராமர் கோவில் எழுகிறது” என அமித்ஷா முழக்கம் இட்டபடி அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்காக பணிகள் தொடங்கிவிட்டன. கொரோனா கட்டுப்பாடுகள் அது இது எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு சென்ற மே 11 அன்று பழைய இடிமானங்களின் மீது இராமர் கோவில் கட்டுவதற்கான முதற்படியாக இடிபாடுகளைத் தோண்டி சமனப் படுத்துவதற்கான வேலைகள் தொடங்கின. பொறுப்பேற்று செயல்படுத்திக் கொண்டுள்ள வினோத் பன்சால் என்பவர், ”அகழ்வாய்வு முக்கியத்துவம் வாய்ந்த பல பொருள்கள் தோண்டத் தோண்ட வந்து கொண்டே உள்ளன” என தினம் ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஐந்தடி உயர சிவலிங்கம், கருப்புக் கற்களால் ஆன ஏழு தூண்கள், சிவப்புக் கற்களால் ஆன ஆறு தூண்கள், உடைந்துபோன பல கடவுளர் சிலைகள் …..” – இப்படி.

சங்கிகள் சும்மா இருப்பர்களா? அவர்கள் பங்கிற்கு விஷத்தைக் கக்கத் தொடங்கினார்கள்..

“நாங்கள் அப்போதே சொன்னோம் அங்கு இராமர் கோவில்தான் இருந்தது. அதை இடித்து விட்டுத்தான்  பாபரின் தளபதி மீர்பாகி அங்கே மசூதியைக் கட்டினான் என்றோம். ஆனால் இந்த பிபின் சந்திரா. சர்வபள்ளி கோபால், ரொமிலா தப்பார், இர்ஃபான் ஹபீப் முதலான கம்யூனிஸ்ட் வரலாற்றாசிரியர்கள் அதை மறுத்தார்கள். அதன் விளைவாக என்னென்ன நடந்து முடிந்து விட்டன. எத்தனை இரத்தம் இங்கே சிந்த வேண்டியதாயிற்று…” – என்றெல்லாம் அவர்களைத் திட்டித் தீர்த்தார்கள். இந்த அறிஞர்கள் மீது பெரு மதிப்பு கொண்ட நாம் எல்லோரும் வேதனையோடு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஒன்றை இங்கே நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த அறிஞர்கள் யாரும் அங்கே பாபர் மசூதிக்கு முன்னதாக எந்தக் கட்டுமானங்களும் இல்லை எனச் சொன்னதில்லை. அவர்கள் சொன்னதெல்லாம் அங்கு இதற்கு முன் ஏதாவது இருந்திருந்தால், அல்லது ஏதாவது இடிக்கப்பட்ட கட்டிடத் தூண்கள் மசூதி கட்டப் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது இந்து ஆலயங்களில் இருந்தவை அல்ல. அது பௌத்த விகாரை அல்லது சமணத் தலங்களில் இருந்தவையாக இருக்க வேண்டும் என்பதுதான்.

சங்கிகள் தங்களின் வெறுப்புக் கதையாடல்களை நிறுத்தவில்லை. ஆனால் சென்ற வாரத்தில் அவர்களால் வெளியிடப்பட்ட படங்களை எல்லாம பார்த்த பௌத்த மதத்தவர்கள் அவர்களின் கதையை மறுத்தபோது எல்லோரும் அதிர்ந்தார்கள். என்ன நடக்கிறது எனக் கூர்ந்து பார்த்தோம். தோண்டியபோது கிடைத்ததாக நீங்கள் சொல்லும் தூண்கள் முதலியன அஜந்தா, எல்லோரா பனாரசில் இருக்கும் பௌத்தக் கட்டுமானங்களில் உள்ள தூண்களின் பாணியிலேயே உள்ளன. அவற்றை பாதுகாப்பாக வைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனும் குரல்கள் பல திசைகளிலிருந்து இப்போது வரத் தொடங்கியுள்ளன. பௌத்த மதத்தினர் பலரும் பிரதமர் மோடி உட்படப் பலருக்கும் தொடர்பு கொண்டு இதனை வற்புறுத்தியுள்ளனர். உலகப் பாரம்பரியங்களைக் காப்பதற்கான “யுனெஸ்கோ” அமைப்பைத் தலையிடுமாறு வற்புறுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

முன்னாள் காங்கிரஸ் எம்.பி உதித் ராஜ், “இன்று வெளிவந்துள்ள இந்தத் தூண்கள் பற்றிய உண்மைகளின் அடிப்படையில் நான் ஒன்றும் “நம்பிக்கைகள்தான் முக்கியம்” எனச் சொன்ன உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றியெல்லாம் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால் வல்லுனர்களைக் கொண்டு இது மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும். தொல்லியல் ஆய்வுக் கழக (ASI) மேற்பார்வையில் முழுமையாக அகழ்ந்து பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

இப்படியான கருத்து வருவது இது முதல்முறை அல்ல. முன்னதாகச் சென்ற முறை (2014 -19) பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது அவர்கள் கட்சி எம்.பிக்களில் ஒருவரான சாவித்ரி பாய் புலே என்பவர், “அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோவிலும் வேண்டாம். மசூதியும் வேண்டாம். பேசாமல் புத்த நினைவிடமாக அதை ஆக்கிவிடலாம்” எனக் கூறியதும், அயோத்தியைச் சேர்ந்த வினித் குமார் மௌர்யா என்பவர் அப்பகுதியை “அயோத்தி புத்த விகாரை” என அறிவிக்குமாறு வழக்குத் தொடர்ந்ததும் குறிப்பிடத் தக்கன.

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பாபர் மசூதி இருந்த அயோத்தி என்பது ஒரு மிகப் பழைய நகரம். குறைந்த பட்சமாக அதன் காலத்தை நிர்ணயித்தாலும் கூட கி.மு 500 அளவிலிருந்து அந்நகரம் முக்கியமான ஒன்றாக வரலாற்றில் காணப்படுகிறது என வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர் (அதற்கும் முன்னதாகச் சொல்பவர்களும் உண்டு). அதாவது புத்தர், மகாவீரர் காலத்திலிருந்து உள்ள நகரம். இந்த இருவருமே அயோத்தி வந்து தங்கியதாக அவர்களின் நம்பிக்கைகள் உள்ளன. புத்தர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகாலம் அங்கிருந்ததாகக் கூறுகின்றனர். சமண தீர்த்தங்கரர்களில் ஐவர் அயோத்தியில் பிறந்ததாக அவர்கள் நம்புகின்றனர்.

பழம் சீன யாத்ரீகர்களான பாகியான், யுவான் சுவாங் இருவருமே அயோத்தியை ஒரு பௌத்த மையமாகவே குறிக்கின்றனர். அப்போது அதன் உண்மையான பழம் பெயரான “சாகேத்” (சமஸ்கிருதத்தில் ‘சாகேதா’) என அது அழைக்கப்பட்டது. “ஹே ராம்” திரைப்படத்தில் காந்தியைக் கொல்லப்போகும் கமலஹாசன் நடிக்கும் பாத்திரத்தின் பெயர் சாகேத் ராம் என்பது நினைவு. சாவஸ்தி – பிரதிஸ்தனம் மற்றும், ராஜகிருகம் – வாரணாசி எனும் இரு முக்கிய வணிகப் பாதைகள் சந்திக்கும் புள்ளியாக சாகேத் இருந்துள்ளது. சம்யுத்த நிகாயம், வினய பிடகம், சுத்த நிபாதம் முதலான பௌத்தத்தின் மூன்று புனித நூல்களில் சாகேத் பற்றிக் குறிப்புகள் உள்ளன. சிராவஸ்தி எனும் சரித்திரப் புகழ்பெற்ற நகரம் சாகேத்தில் இருந்து 6 யோசனைத் தூரத்தில் இருந்தது என்றும் பதிவு இருக்கிறது. புகழ்பெற்ற பௌத்த அறிஞர் அஸ்வ கோஷர் தன்னை “சாகேத்தின் மகன்” எனச் சொல்லிக் கொண்டார். மாமன்னர் அசோகர் காலத்திய 200 தூபங்கள் அங்கே நிறுவப்பட்டிருந்தன என அவர் குறிப்பிடுகிறார்.

1862 – 63 ஆம் ஆண்டுகளில் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் தொடங்கி ஃப்யூரர், பி.பி.லால் எனப் பல அகழ்வாய்வு நிபுணர்களால் கிட்டத்தட்ட 5 முறைகள் அயோத்தியில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எல்லாவற்றிலும் அந்நகரின் பௌத்த சமணப் பழைமைகள்தான் உறுதி செய்யப்படுகிறதே ஒழிய ராமர் கோவில் இருந்ததற்கு வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை. ரஜபுத்திரர்கள் ஆட்சி அங்கே சிலகாலம் நடந்துள்ளது அப்போதுதான் சாகேத்திற்கு அயோத்தி எனும் பெயர் பிரபலமாக்கப் பட்டிருக்கலாம் என ஒரு கருத்து உண்டு. அப்போதும் இராமர் கோவில் ஏதும் அங்கிருந்ததாகப் பதிவுகள் எதுவும் கண்ணில் படவில்லை. பாபர் காலத்தில் அவருக்குச் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்தான் புகழ்பெற்ற கவிஞர் கோஸ்வாமி துளசிதாசரால் (கி.பி 1532 -1623) இராமனின் வரலாறான ‘ராமச்சந்திர மானஸ்’ எனும் முக்கிய காவியம் இயற்றப்படுகிறது. அதில் எங்கும் அயோத்தியில் கோவில் இருந்து இடிக்கப்பட்டதாக எல்லாம் குறிப்பு இல்லை.  

ஆக பாரம்பரியமாக ‘சாகேத்’ எனும் பெயருடைய சமண பௌத்த நகரமாகத்தான் அது இருந்துள்ளது. அதன்பின் நானூறு ஆண்டுகளுக்கு முன் அங்கு முஸ்லிம் ஆட்சியின்போது பாபர் மசூதி கட்டப்பட்டதுதான் வரலாறாக உள்ளது. கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபைசாபாத் மாவட்டமாக இருந்ததுதான் இப்போது யோகி ஆதித்யநாத்தால் அயோத்தி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி எனும் பெயர் இடைக் காலத்தில் ரஜபுத்திரர்கள் ஆண்டபோது புழக்கத்திற்கு வந்திருக்கலாம். தற்போது இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் முன்னதாக இராமர் கோவில் இருந்ததற்கு எந்தப் புதிய ஆதாரமும் கண்டுபிடிக்கப் படவில்லை. இப்போது அகழ்வில் கிடைத்துள்ள தூண்கள் முதலியன மசூதியை இடித்த நடவடிக்கையை நியாயப்படுத்த எந்த வகையிலும் உதவாது. அங்கு ஏதோ ஒரு காலத்தில் இராமர் கோவில் இருந்தது என வாதிடுவதற்கும் அவை உதவாது. பாரம்பரியத்தில் சிரவண மதங்கள்ன் சாகேத் நகரமாக இன்றைய அயோத்தி இருந்து வந்ததற்கு ஆதாரமாக மட்டுமே அவை அமையலாம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஒரு குற்ற நடவடிக்கை, அங்கே மீண்டும் மசூதி நிறுவப்படாமல் ஆக்கப்பட்டது அநீதி என்கிற கருத்து எங்கிருந்து வருகிறது என்றால் இப்படி 400 ஆண்டுகள் இருந்து, தொழுகை நடத்தப்பட்ட ஒரு தொழுகைக் தலத்தை இடித்தது குற்றம் என்பதும், அந்த அடிப்படையில் மீண்டும் அங்கு மசூதியே கட்டப்பட வேண்டும் என்பதும்தான். நமது அடிப்படைச் சட்டங்களின்படி 400 ஆண்டுகளுக்குப் பின்னெல்லாம் யாரும் எந்த உரிமையும் கோர முடியாது என்பதையும் நாம் நினைவில் இருத்த வேண்டும். சமீபத்திய தீர்ப்பைப் பொருத்தமட்டில் நானூறு ஆண்டுகள் முஸ்லிம்களின் தொழுகைத் தலமாக இருந்த ஒரு கட்டுமானம் வன்முறையாக இடிக்கப்பட்டதை நியாயப் படுத்துவதெற்கெல்லாம் இன்று அவர்கள் ஏக ஆர்பாட்டமாகச் சுட்டிக் காட்டும் இப்போது தோண்டி எடுக்கப்பட்ட இந்தத் தூண்கள் உதவாது.

சரி. யாரும் பழைய கதையைப் பேச விரும்பவில்லை. இப்படியான சர்ச்சை ஒன்று கடந்த இரு வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அது குறித்த வரலாற்றை இங்கு சொல்ல முனைந்துள்ளேன். அவ்வளவே.

ஒரு பிற்குறிப்புடன் முடித்துக் கொள்கிறேன்.

இன்று வடநாட்டில் உள்ள தலித் அறிவுஜீவிகள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுக்கின்றனர். அவர்கள் இந்திய வரலாறு குறித்த டாக்டர் அம்பேத்கரின் கருத்திலிருந்து இதைத் தொடங்குகின்றனர். இந்திய வரலாறை இந்து – முஸ்லிம் போராட்டமாக சங்கப் பரிவாரங்கள் முன் வைப்பதை அம்பேத்கர் ஏற்பதில்லை. இங்கிருந்த அடிப்படை முரண்பாடு வைதீகத்திற்கும் பௌத்தத்திற்கும் உள்ள முரண்பாடுதான் என்பதை அவர்பல ஆதாரங்களுடன் வலியுறுத்தி உள்ளார். புஷ்ய மித்திர சுங்கன் போன்ற பார்ப்பன மன்னர்களால் பௌத்தம் அழிக்கப்பட்டது. ஒரு சாகேத் எனும் பௌத்த நகரம் இப்படி வன்முறையாக இடிபாடுகள் செய்து அயோத்தியாவாக மாற்றப்படுவதை ஏற்கமுடியாது என இன்று யோகி சிக்கந்த், சுனந்தா கே. தத்தா ராய் முதலான தலித் அறிஞர்கள் வாதிடுகின்றனர்.

மதச்சார்பின்மை என்பது என்ன?

அரசிலிருந்து மதத்தைப் பிரிப்பது

அரசையும் மதத்தையும் பிரிப்பதே மதச்சார்பின்மையின் அடித்தளம் ஆகும்.எந்த ஒரு மதத்தினரும் அரசில் தலையிடாமையையும், அதேபோல அரசு எந்த ஒரு மதத்திலும் தலையிடாமையையும் உறுதி செய்கிறது.

1.பிரித்து நிறுத்தல் : மதநிறுவனங்களையும் அரசு நிறுவனங்களையும் தனித்தனியே நிறுத்துதல். பொதுப்புலத்தில் மதம் பங்கேற்கலாம். ஆனால் சமூகத்தில் எந்த மதமும் எந்த வகையிலும் கூடுதல் முக்கியத்துவம் அல்லது ஆதிக்கம் செலுத்த முடியாது.

2. தேர்வுச் சுதந்திரம் : பிறருக்கு எந்த இடையூறும் இன்றி யாரொருவரும் தம் நம்பிக்கையைக் கடைபிடிக்கும் உரிமை. அது மட்டுமல்ல அவர் விருப்பம்போல அதை மாற்றிக் கொள்வதற்கோ, அல்லது, எந்த நம்பிக்கையும் இல்லாமல் வாழ்வதற்கோ உள்ள உரிமை. இதையே மனச்சாட்சித் சுதந்திரம் என்கிறோம்.

3. சமத்துவம் : ஒருவரின் மத நம்பிக்கையோ இல்லை அல்லது எந்த மதத்தின்மீதும் நம்பிக்கை இன்மையோ அவருக்கு எந்த வகையிலும் கூடுதல் உரிமைகளை அனுபவிப்பதற்கோ அல்லது ஏதேனும் உரிமைகள் தடுக்கப்படுவதற்கோ காரணமாகக் கூடாது.

மதச்சார்பின்மை என்பது நம்பிக்கையாளர்களை மட்டுமல்ல நம்பிக்கை அற்றவர்களின் உரிமைகளையும்  பாதுகாப்பது

மதச்சார்பின்மை என்பது ஒருவரது மதம் மற்றும் இதர நம்பிக்கைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதற்கு உறுதி அளிப்பது. மற்றவர்களின் மதச் சுதந்திரத்தில் தலையிடாதவரை யாரொருவரும் தன் மதத்தைக் கடைபிடிக்கும் உரிமையைப் பாதுகாப்பது. எந்த ஒரு நம்பிக்கையையும் ஒரு தனிமனிதர் கடைபிடிப்பதற்கான உரிமை என்பது இன்னொரு பக்கம் எந்த ஒரு நம்பிக்கையையும் ஏற்காமலிருக்கும் சுதந்திரத்தை வழங்குவதும் ஆகும்,

மதச்சார்பின்மை என்பது ஜனநாயகம் மற்றும் சமத்துவம் குறித்த ஒரு கருத்தாக்கம்

மதச்சார்பற்ற ஜனநாயகம் என்பதன் பொருள் சட்டத்தின் முன் குடிமக்கள் அனைவரும் சமம் என்பதை நடைமுறையில் உறுதி செய்வது. எந்த ஒரு மதத்திலோ அரசியல் கட்சியிலோ ஒருவர் இருப்பது என்பது அவருக்கு எந்தவிதமான கூடுதல் உரிமைகளை அளிக்காது. அதேபோல அதனாலேயே யாரொருவரின் எந்த உரிமையும் பாதிக்கப்படவும் காரணமாகாது.

மதச்சார்பின்மை என்பது ஜனநாயகம் மற்றும் சமத்துவம் குறித்த ஒரு கருத்தாக்கம்

மதச்சார்பற்ற ஜனநாயகம் என்பதன் பொருள் சட்டத்தின் முன் குடிமக்கள் அனைவரும் சமம் என்பதை நடைமுறையில் உறுதி செய்வது. எந்த ஒரு மதத்திலோ அரசியல் கட்சியிலோ ஒருவர் இருப்பது என்பது அவருக்கு எந்தவிதமான கூடுதல் உரிமைகளையும் அளிக்காது. அதேபோல அவரது எந்த உரிமையும் பாதிக்கப்படவும் அது காரணமாகாது.

மதச்சார்பின்மை என்பது மதம் சார்ந்த கோரிக்கைகளைக் காட்டிலும் உலகளாவிய மனித உரிமைகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. பெண்கள், ஓரினப் புணர்ச்சியை நடைமுறையில் கொண்டவர்கள் (LGBT), மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட பிற எல்லாவிதமான சிறுபான்மையினரும் சட்டத்தின் முன் சமத்துவம் என்பதை உயர்த்திப் பிடிக்கிறது. சட்டரீதியான இப்படியான சமத்துவம் என்பது ஏதேனும் ஒரு மத அல்லது தத்துவ நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் அப்படியான நம்பிக்கைகள் இல்லதவர்களும் சம உரிமைகளை அனுபவிப்பதை உறுதி செய்கிறது.

பொதுச் சேவைகளை அனுபவிக்கும் உரிமைகளை எல்லோருக்கும் உறுதி செய்வது

பள்ளிகள், மருத்துவச் சேவைகள், காவல்துறை மற்றும் இதர அரசுச் சேவைகள் ஆகியவற்றைப் மக்கள் எல்லோரும் பயன்படுத்துகின்றனர். நடைமுறைப் பயன்பாட்டில் இத்தகைய பொதுச் சேவைகள் அனைத்தும் மதச் சார்பற்றவையாக இருப்பது அவசியம். மத நம்பிக்கை அல்லது நம்பிக்கை இன்மைகளின் அடிப்படையில் இச்சேவைகளை யாருக்கும் மறுக்கக் கூடாது. அரசு நிதியில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் எந்த ஒரு மதத்தையும் சார்ந்துள்ளனதாகவோ, எந்த ஒரு நம்பிக்கையையும் உயர்த்திப் பிடிப்பதாகவோ இருக்கக் கூடாது. பள்ளிகளில் குழந்தைகளைப் பெற்றோர்களது மதங்களின் அடிப்படையில் பிரிக்காமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வியை ஒன்றாகத் தர வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள், ஏதிலியர் விடுதிகள் போன்ற ஏதேனும் ஒரு பொது நிறுவனம், ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அமைப்பை ஏதேனும் ஒரு சேவைக்கு அனுமதித்தால் அந்தச் சேவை எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அவ்வாறு அனுமதிக்கப்பட்ட அமைப்பு தன் நம்பிக்கைகள அங்குள்ளவர்களின் மீது திணிக்க அனுமதிக்கக் கூடாது.

மதச்சார்பின்மை என்பது நாத்திகம் அல்ல

விபூதி பூசுவது, ஹிஜாப் அணிவது, மத அடையாளத்தை வெளிப்படுத்தும் தலைப்பாகை முதலான மத நம்பிக்கை உடையவர்கள் பொது வெளியில் அவற்றைக் கடைபிடிக்கவும் வெளிப்படுத்தவும் உள்ள உரிமையைத் தடை செய்யக் கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பதில் எந்த ஒரு குறிப்பான நம்பிக்கை அல்லது அமைப்பிற்கும் கூடுதல் உரிமைகளை அளிக்க முடியாது. ஜனநாயகத்தில் எல்லாக் கருத்துக்களும் நம்பிக்கைகளும் விவாதிக்கப்படுவதற்கு இடமுண்டு.

எல்லாவிதமான மத நம்பிக்கை உடையவர்களும் , நம்பிக்கை இல்லாதவர்களும் அமைதியாகவும், சமத்துவமாகவும் வாழும் வாய்ப்புள்ள ஒரு ஆகச் சிறந்த ஆட்சி முறை என்பது மதச் சார்பற்ற ஆளுகையே.