பவுத்தத்தில் கலந்த பிறமதக் கூறுகள் (Syncretism) : ஒரு குறிப்பு

(பவுத்தம் பரப்ப விழைவோர் கவனத்தில் நிறுத்த வேண்டுய ஒரு முக்கிய குறிப்பு)

புத்தம் சரணம் 2.1

[எனது நூல்களில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் ஒன்று ‘புத்தம் சரணம்’. அதன் இரண்டாம் பாகத்தை எழுத நினைத்துப் பல ஆண்டுகளாகியும் முடியவில்லை. இதற்கிடையில் இதன் முதல் பாகம் சென்ற ஆண்டு ‘தமிழ்நாடு பௌத்த சங்க’த்தால் மறுவெளியீடு செய்யப்பட்டது.

“இதுகாறும் பௌத்தம் பற்றி அறிமுகம் இல்லாமல் அதைப்பற்றிப் புதிதாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், ஏற்கனவே பௌத்த அறிமுகம் பெற்று அதைப்பற்றி மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களுக்கும்- இருசாரருக்கும் இந்நூல் பயனுள்ளதாக இருக்கும்.இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த நாட்டில் பௌத்த தம்மத்தை மீட்டெடுத்துக் காட்டுவதில் முன்னணியில் இருந்தவரும், அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களாலேயே தனது முன்னோடி எனப் போற்றப்பட்டவருமானதிரு. இலட்சுமி நரசு அவர்களின் What is Buddhism மற்றும் The Essence of Buddhism ஆகிய நூல்களுக்கு இணையானதாக இந்த நூலை நாங்கள் கருதுகிறோம்.ஆகவே இந்த நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிடுவதை ஒரு சிறந்த தம்மப் பணியாகவே பாவித்துப் பெருமை கொள்கிறோம். பெருமகிழ்ச்சி அடைகிறோம்”

என்கிற முகப்புரையுடன் தமிழ்நாடு பௌத்த சங்கம் அந்நூலை வெளியிட்ட நிகழ்வு நான் நெகிழ்ந்த கணங்களில் ஒன்று.

திட்டமிட்ட இரண்டாம் பாகத்தை எழுதலாம் என முடிவு செய்து நேற்று அது குறித்த பணியைத் தொடங்கினேன். இடையீடு இல்லாமல் அது தொடருமா எனத் தெரியவில்லை. இந்தப் பணியின் ஊடாக அவ்வப்போது சில துணைச் செய்திகளை இந்தப் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.]

நான் முதல்முறை இலங்கை சென்றிருந்த போது நண்பர் சிராஜ் மசூரிடம் கொழும்பில் உள்ள முக்கிய பௌத்த கோவில்களுக்குச் செல்ல வேண்டும் எனச் சொல்லியிருந்தேன். அவரும் என்னை கொழும்பில் உள்ள பௌத்த ஆலயம் மட்டுமல்ல பொலனறுவைக்கும் அழைத்துச் சென்றிருந்தார். கொழும்பில் உள்ள அந்த மிக அழகான பௌத்த ஆலயத்தின் நுழைவாயிலிலேயே பிளையார், சரஸ்வதி சிலைகள் இருந்தன. இங்கு மட்டுமல்ல வேறு பல தலங்களிலும் நான் இதைக் காண நேரிட்டது. மலெசியாவில் உள்ள பௌத்த கோவில்களில் புத்தர் சிலைகளோடு சீனத் தொன்மங்கள் சார்ந்த உருவங்களும் அந்த ஆலயங்களை அலங்கரித்திருந்தன. இலங்கை சிங்கள பவுத்த அரசியல்வாதிகள் அவ்வப்போது இந்தியா வந்து திருப்பதி ஏழுமலையாம் முதலிய கடவுளரை வணங்கிச் செல்வதையும் நாம் கவனித்துள்ளோம்.

வைதீகக் கருத்துக்களுக்கு எதிராக எழுந்த ஒரு எதிர் பண்பாட்டுக் குரலாக பவுத்ததைக் காண்பவர்களுக்கு இது சற்று அதிர்ச்சியை அளிக்கக் கூடிய ஒன்றுதான்.

இன்று உலகில் கடைபிடிக்கப்படும் பௌத்தங்களை ஒரு அகன்ற பார்வையில் இரண்டாகப் பிரிக்கலாம். 1.தேரவாதம் : இலங்கை, மியான்மர், தாய்லந்த், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் கடைபிடிக்கப்படுவது. 2.மகாயனம் : நேபாளம், திபேத், சீனம், ஜப்பான், கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் பயிலப்படுவது.

‘மூத்தோர்களின் கோட்பாடு’ எனப் பொருள்படும் தேரவாதம் காலத்தால் பழைமையானது எனவும், அதுவே ஆதி பவுத்தம் எனவும், மிகவும் கட்டுப்பெட்டித்தனமாக (conservative) இருந்துத் தன் புனிதத்தைக் காப்பாற்றிiக் கொண்ட மதம் எனவும் அது தன்னைச் சொல்லிக் கொள்வதுண்டு. மகாயனம் காலத்தால் மிகவும் பிந்தியது. அதற்கு முந்திய சர்வாஸ்திவாதம் முதலான பவுத்த சிந்தனைகளை மகாயனம் தனக்குள் அனுமத்தித்துப் பொதிந்து கொண்டது.

இந்தியாவிலிருந்து புவீயல் அடிப்படையில் சற்றே துண்டித்து நின்ற இலங்கைத் தீவில் செழித்திருந்த தேரவாத பௌத்தம் இந்தப் புவி இயல் துண்டிப்பின் விளைவாக இந்தியாவில் ஏற்பட்ட அழிவிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டது. பவுத்தம் இந்தியாவில்அழிவதற்குக் காரணமான சில முக்கிய அரசியல், பண்பாட்டு நிகழ்வுகள் இலங்கையை எட்டவில்லை. அதைப் பின்னர் பார்ப்போம்.

சரி. ஆசியாவில் இன்று பயிலப்படும் பவுத்தங்கள் அனைத்திலும் இத்தகைய பிற மதக் கூறுகள் கலந்து போய் இன்று பல மேலை நாட்டு ஆய்வாளர்களால் மிக எளிதில் syncretism – பிறமதக் கலப்பு ஏற்பட்டுள்ளாதாக எளிதில் வரையறுக்கத்தக்க நிலை எப்படி ஏற்பட்டது?

இதை ஒரு குற்றச்சாட்டாகவோ குறையாகவோ பார்க்க இயலாது என்கிறார் டேவிட் கெல்னர். மானுடவியல் நோகில் கீழைத்தேய மதங்களை ஆய்வு செய்பவர் அவர். மற்ற மதங்களைக் கறாராகப் புறந் தள்ளும் கிறிஸ்தவ மத அளவுகோலின்படிப் பார்த்தால்தான் இன்று ஆசிய பௌத்தத்தில் கலந்துபோயுள்ள இந்த பிற மதக் கூறுகளை syncretism என்பதாகக் குறை காண இயலும் என்பது கெல்னரின் வாதம். கிறிஸ்தவம் முதலான இத்தகைய ‘முழுமையான’ மதங்கள் ஆன்மீகத் தேவையை மட்டுமல்ல அவற்றைப் பின்பற்றுவோரின் அனைத்து சமூக மற்றும் இயற்கையதீத (supernatural) தேவைகளையும் பூர்த்தி செய்வதாயும், தன் மதம் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளுக்குள்ளேயே முழுச் சமூக வாழ்வையும் அர்த்தப்படுத்திவிட இயலும் என்பதாகவும் தம்மை முன்னிறுத்துகின்றன.

சாக்கியமுனி கௌதம புத்தன் உரைத்த பவுத்தம் அத்தகைய உரிமை கோரலை முன்னிறுத்தவில்லை.

இதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

சமூக வாழ்வில் மதத்தின் இடமென்ன? மானுடவியல் நோக்கில் கெல்னர் அவற்றில் சிலவற்றை இவ்வாறு பட்டியலிடுவார்:

1.குடும்பக் குழுமத்தின் நியாயப்பாடு (legitimisation) மற்றும் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் (expression) முகாமையாக மதத்தின் பங்கு

2.ஒரு கிராமம் அல்லது ஒரு பழங்குடிப் பிரிவு அல்லது ஒரு சாதியாக தன்னைச் சமூக ரீதியில் நியாயப்படுத்திக் கொள்வதும் வெளிப்படுத்திக் கொள்வதும்

3.ஒரு தேசமாக அல்லது இனமாகத் தம்மை நியாயப்படுத்திக் கொள்வதும் வெளிப்படுத்திக் கொள்வதும்

4.வாழ்க்கைச் சுழலின் பல்வேறு நிலைகளுக்குப் (பிறப்பு, வயதுக்கு வருதல், திருமணம், இறப்பு முதலியன) புனித அங்கீகாரம் அளித்தல்

5.இளையோர் சமூகமயப்படுதல் மற்றும் ஒழுக்க/ நடத்தை விதிகளை அளித்தல்

6.(நோய் முதலான) துன்பங்கள் நேர்கையில் உளவியல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் ஆறுதல் அளித்தல்

7.வாழ்வின் எல்லாத் துயரங்களில் இருந்தும் வாழ்வின் இறுதி விடுதலை அல்லது முக்தியை (salvation) அளித்தல்.

இரண்டு விடயங்கள் இதில் கவனத்துக்குரியன. ஒன்று: இவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். மதம் என்பது வெறும் ஆன்மீகச் செயல்பாடு மட்டுமல்ல. சமூக வாழ்வில் அது பல்வேறு கடமைகளை ஆற்றுகிறது. இங்கே சொல்லப்படும் ‘நியாயப்பாடு’ என்பது சமூக/சட்ட ரீதியான அங்கீகாரமும் கூட. சமூக வாழ்வில் மட்டுமல்ல, தனிமனித வாழ்விலும் அதற்கு முக்கிய பங்குண்டு. மதத்தை எளிதில் முடிவுக்குக் கொண்டுவர இயலாமைக்கு இவை எல்லாம் காரணமாய் உள்ளன.

இரண்டு: எல்லா மதங்களும் இந்த எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவதில்லை. இந்துமதம் அது பல்வேறு இனக்குழுக் கூறுகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டே இருந்ததால் இப்படி எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வதாய் அமைந்தது. கிறிஸ்தவம், இஸ்லாம் முதலானவை நன்கு திட்டமிட்டு வரையறுக்கப்பட்டவையாக இருந்ததால் அவையும் சமூக / தனிமனித வாழ்வின் எல்லாவிதமான நியாயப்பாடுகளையும் நிறைவேற்றத் தக்கனவாக உருவாக்கப்பட்டன. ஷின்டோயிசம் முதலான மதங்களில் இறுதி விடுதலை (soteriology) என்கிற பேச்சிற்கு இடமில்லை. வேதாகமங்கள் இல்லாத மதங்களில் ஒழுக்க வரையறைகள் இருப்பதில்லை.

இப்போது தேரவாத பௌத்தத்திற்கு வருவோம். தொடக்க கால பவுத்தம் இந்த இறுதி விடுதலை என்பதற்கு மட்டுமே (soteriology) அழுத்தம் கொடுத்தது. உலகியல் சார்ந்த விடயங்கள் என்பன அதற்கு இரண்டாம் அல்லது மூன்றாம் பட்சம்தான். ஆனால் தேரவாதம் இந்த இறுதி விடுதலை என்பதற்கு முழுமையான அறவழியையே முன்மொழிந்தது. அதில் பக்திக்கு இடமிருக்கவில்லை. முழுமையான அறவாழ்வின் மூலமே ஒருவர் விடுதலை அடைய இயலும். இந்த வகையில் அது ஒரு சமூக மற்றும் தனிமனித வாழ்வுக்கான ஒழுக்க வரையறைகளையும் அளித்தது.

ஆனால் தேரவாதம் மேலே சொன்ன இதர ஐந்து நியாயப்பாடுகளுக்கும் வழிகாட்டவில்லை. எனவே தேரவாதம் இந்தக் காலி இடத்தைப் பூர்த்தி செய்யவேண்டி பிற மத/கலாச்சாரக் கூறுகளை எப்போதும் தன்னகத்தே இணைத்துக் கொள்வதாக (accretive) அமைந்தது என்பார் கோம்ப்ரிட்ச். எனவே பவுத்தம் எப்போதுமே பிறமதங்களுடன் எளிதில் இணைந்தே தன்னை இருத்திக் கொண்டது. இறுதிவிடுதலை குறித்த கருத்தாக்கத்தில் பவுத்தத்துடன் முரண்படாதவரைக்கும் அது பிற மதங்களுடன் இணைந்து நிற்பதற்குத் தயங்கியதில்லை என்பது மட்டுமல்ல, அது சிலவற்றை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருந்தது.

சில நேரங்களில் இவ்வகையில் பவுத்தம் மிருகபலியையும் கூட ஏற்றுக் கொண்டது. சாத்தியமான இடங்களில் அது மற்றவர்களிடமிருந்த இத்தகைய பௌத்தத்திற்கு ஒவ்வாத கூறுகளை ஒழித்தும் இருந்துள்ளது.

மனிமேகலைக் காப்பியத்தில் கப்பல் உடைந்து சாவகத் தீவில் (Java) கரை ஒதுங்கிய சாதுவனுக்கும் நாகர் தலைவனுக்கும் இடையில் நடந்த negotiation குறித்த என் முந்தைய கட்டுரையை வாசித்திருப்பவர்களுக்கு இதை விளக்கத் தேவை இல்லை. மது, மாது, மாமிசம் ஆகிய மூன்றையும் பரிசளித்த நாகர் தலைவனிடம் பௌத்தத்தை ஏற்றுக் கொண்ட சாதுவன் மூன்றையும் மறுப்பதோடு நாகர்களையும் அவற்றை விடச் சொல்வான். அவர்களின் வாழ்முறையில் அம்மூன்றையும் துறப்பது சாத்தியமில்லை என்றாகிற போது பவுத்தம் மது தவிர்த்து மற்றவற்றுடன் சமரசமாகிறது.

புத்தருக்குப் பலகாலத்திற்குப் பின் தோன்றிய மகாயனமும் அதன் தொடக்க காலத்தில் இபடிச் சமூக வாழ்வின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலாததாகத்தான் இருந்தது. ஆனால் பின் தோன்றிய தாந்த்ரீக பவுத்தம் விரிவான சடங்கு ஆசாரங்கள் கூடியதாக அமைந்தது. சமூக வாழ்வில் மதத்தின் கடமைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யத் தக்க அளவிற்கு பிக்குகளின் அமைப்பும் வளர்ந்தது.

இந்தப் புரிதல் இன்று நமக்கு எந்த வகையில் உதவும்?

பெரியளவில் தமிழகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டில் அம்பேத்கர் வழி நின்று பவுத்தத்திற்குப் பலர் மாறினர். ஆனால் அவர்களது வாழ்நாளிலேயோ, அல்லது அடுத்த தலைமுறையிலோ அவர்கள் மீண்டும் இந்துமதப் பண்பாட்டிற்குத் திரும்பி விடுகின்றனர்.

இது ஏன்?

ஏனெனில் இங்கு பவுத்தம் ஒரு வலிமையான அமைப்பாகவும், தொழுகை, சமூக நியாயப்பாட்டிற்கான சடங்கு மற்றும் மத ரீதியான தேவைகளை ஆற்றத் தக்கதாகவுமில்லை என்பதுதான் இதன் பின்னணி. ஒரு திருமணத்தையோ, குழந்தை பிறப்பையோ, இறப்பையோ புனிதப்படுத்தி (solemnise) நியாயப்படுத்தத் தக்க சமூக வலிமை உடையதாக அது இல்லை. சந்திப்பதற்கு, வணங்குவதற்கு, ஒரு சமூகமாக உணர்வதற்கு அவர்களுக்கு ஒரு பவுத்த ஆலயம் கூடத் தமிழகத்தில் இல்லாமற் போனது வேதனை.

பவுத்தம் பரப்ப விழைவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று இது. நான் சொல்ல வருவது இதுதான். பவுத்த ஆலயம், குருமார்கள் என்பதாக ஒரு பவுத்த சமூகம் ஒன்று அவசியம். நாம் பரப்பும் பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அது நம்மிடம் வந்தவர்களின் மேற் குறிப்பிட்ட அந்த ஏழு தேவைகளையும் அது பூர்த்தி செய்யத் தக்கதாக இருக்க வேண்டும்.

தமிழ்ப் பவுத்தம் ஒரு குறிப்பு

[எனது ‘புத்தம் சரணம்’ நூல் இரண்டாம் பதிப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை]

தமிழ்நாடு பவுத்த சங்கத்தின் சார்பாக இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் பவுத்தத்திற்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு, காலத்தால் அழியாது நிற்கும் மணிமேகலை, வீரசோழியம் தவிர நமக்குக் கிடைக்கும் ஏராளமான பிற வரலாற்று ஆதாரங்கள், அவ்வப்போது தமிழகமெங்கும் கிடைக்கும் புத்தச்சின்னங்கள் இதற்குச்சான்று.

கி.பி 5, 6ம் நூற்றாண்டுகளில் பாலி பவுத்தத்தின் மையமாக விளங்கியது காஞ்சீபுரம். இங்கு நடைபெற்ற விவாதங்கள், உருவான அற்புதமான அளவையியல் நூல்கள், கிளைத்த பவுத்த் இயக்கங்கள் ஆகியன தமிழகத்தை உலகளாவிய பவுத்தத்திலிருந்து பிரிக்க இயலாததாக ஆக்குகின்றன.

தமிழகத்தில் 19,20ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பவுத்தப் புத்துருவாக்கத்தில் அயோத்திதாசர், அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கே பவுத்தத்தில் ஆர்வம் ஏற்படுத்திய அறிஞர் லட்சுமிநரசு, அநகாரிகதர்ம பாலா, கர்னல் ஆல்காட், மேடம்ப்ளாவட்ஸ்கி, அறிஞர் சிங்காரவேலர், தந்தை பெரியார், ஜி.அப்பாதுரையார் ஆகியோர் ஆற்றிய பங்கு முக்கியமானது.

ஏராளமான தமிழ்ச் சொற்கள் பாலி பவுத்தத்திலிருந்து தமிழுக்குக் கொடையளிக்கப்பட்டுள்ளன. ‘தமிழ்நாட்டில்பவுத்தம்’ என்கிறதலைப்பில்ஆய்வுசெய்துள்ளஷூஹிகோசாகாசிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களில் மட்டும்இவ்வாறுபயிலப்பட்டுள்ளஏராளமானசொற்களைச்சுட்டிக்காட்டுகிறார். அத்தம் (அத்த), அமைச்சர், அமுத(ம்), கன்மம், கிரியை, கோமுகி, சக்கரவாள (கோட்டம்), சேதியம், ஞான, திட்டி (தித்தி / த்ருஷ்டி), தூபம், தீபம், தீவு, தன்மம் (தம்மா), பாக்கம், பவழம், பாழி, இலக்கணம், பீடிகை, மண்டபம், விகாரம்(விஹார) என இப்படி நிறையச் சொல்லலாம்.

மணிமேகலை மற்றும் வீரசோழியத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் பவுத்தம் குறித்து ஆய்வு செய்யும்நவீன தமிழ் ஆய்வாளர் ஆனி ஈமோனியஸ், மொழி, நாட்டெல்லை இவற்றை எல்லாம் தாண்டிய, தென்இந்தியாவிலிருந்து சாவகம் (ஜாவா) உள்ளிட்ட தென்கிழக்காசியா வரை பரவி இருந்த ஒரு பவுத்த சமூகத்தை (religious society) மணிமேகலைக் காப்பியம் கற்பிதம் செய்வதை விரித்துரைக்கிறார். அன்றைய பவுத்த மையமான காஞ்சீபுரத்திற்கும் சாவகத்திற்கும் உள்ள தொடர்பை ஜாவானியக்காவியமான ‘நாகராத்கிருதாகமா’ (14ம்நூ) குறிப்பிடுகிறது. ஶ்ரீபுத்தாதித்யா எனும் பவுத்தத்துறவிஆறுபவுத்தத்துறவிமடங்கள்உள்ள ‘காஞ்சிபுரி’யிலிருந்துவந்ததாகக்குறிப்பிடுகிறது. கடற்கடவுளான மணிமேகலா தெய்வ வணக்கம் கன்னியாகுமரி முனையிலிருந்து எல்லோரோடா வரை பரவி இருந்ததாக சில்வியன் லெவிபல ஆண்டுகட்கு முன்னே சுட்டிக்காட்டியதையும் மோனியஸ் குறிப்பிடுகிறார். அகத்தியர் குறித்த நம்பிக்கைகளிலும் இருநாடுகளுக்கிடையேயும் ஒருபொதுமை உண்டு, 11ம் நூஜாவானியபடைப்பொன்றின் பெயர் ‘அகஸ்த்யபர்வ’.

அகஸ்தியரின் உறைவிடமான பொதிகைமலை தான் மஹாயன நூற்களில் அவலோகி தீஸ்வரபோதிசத்துவரின் உறைவிடமாகக் குறிப்பிடப்படும் ‘பொடாலக்காமலை’ என்கிறார் ஷூஹிகோசாகா.”பொதியில்” எனும் பொதிகையின் முந்தைய இலக்கியவிளிப்பு “போதிஇல்” என்பதிலிருந்து உருவாகி இருக்கலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது தேரூர் (தேரன் ஊர் என ஆவணங்களில் குறிப்பிடப்படுவது) எனும் ஊரில் சைவக் கடவுள் என வணங்கப்படும் இளைய நயினார் கோவிலில் உள்ள விக்ரஹம் அவலோகிதீஸ்வரர் தான் என்கிறார் ஹிகோசாகா. மறைந்த புத்தருக்கும் இனி எதிர்காலத்தில் தோன்றப் போகும் மைத்ரேய புத்தருக்கும் இடையில் உள்ள போதிசத்துவராக மஹாயனப் பவுத்தம் பின்பற்றப்படும் நாடுகளில் பெரிய அளவில் வணங்கப்படுபவர்தான் அவலோகிதீஸ்வரர்.

இவ்வாறு உலகளாவிய பவுத்தத்திலிருந்து தமிழ்ப் பவுத்தம் எவ்வகையிலும் பிரிக்க இயலாதவாறு பின்னிப்பிணைந்துள்ளது கண்கூடு. இன்று இங்கு பவுத்தம் நசிந்துபோனாலும் அது செழித்திருந்தமையங்களில் ஒன்றாகத் தமிழகம் இருந்துள்ளது.

இப்படி உலக அளவிலான பவுத்தத்துடன் ஊடுபாவாய்ப் பிணைந்திருந்தபோதும் தமிழ்ப் பவுத்தத்திற்கு அதற்குரிய தனித்துவமான அடையாளங்களும் உண்டு. இஸ்லாம், கிறிஸ்தவம்,பவுத்தம் முதலான பரவுதற்குரிய, பரப்பப்படக்கூடிய (proselytizing) மதங்கள் எதுவும் அவ்வப்பகுதிகளின் தனித்துவமான காலாச்சாரங்களுக்குத் தம்மைத் தகவமைத்துக் கொண்டதாகத்தான்(nativization) இருக்க இயலும். இவ்வகையில் உபாசலா பல்கலைக் கழகப் பேராசிரியர் பீட்டர்ஷால்க் முதலானோர் சமீபமாகச் சுட்டிக்காட்டியுள்ள ஒன்று இங்கே கருதத்தக்கது.

தற்போது பாங்காக் (தாய்லாந்து) நகரில் வாட்பெஞ்சோ என்னுமிடத்திலுள்ள விகாரையில் அமைந்துள்ள அழகிய புத்தர் சிலை யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியிலுள்ள வல்லிபுரத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்டதுதான் என்பது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.

1906ம் ஆண்டில் வல்லிபுரம் விஷ்ணு கோவிலுக் கருகில் பூங்கா ஒன்றில் இருந்த இந்தப் புத்தத் திருஉருவை, அன்றைய யாழ் ஆளுனராக இருந்த சர்வில்லியம் பிளேக்சயாம் மன்னருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். அத்திருஉருவை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இன்னொரு பக்கம் பவுத்தவியல் மற்றும் சிற்பவியல் வல்லுனர்கள் அந்தச் சிற்பத்தின் தனித்துவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அது இலங்கை பவுத்தமையமான அநுராதபுரச்சிற்ப அமைவில் (style) இல்லை என்பதுதான் அது. மாறாக அது அமராவதி பாணியில், தென்னிந்திய திராவிடப்புத்தமரபில் (Amaravathy style) அமைந்துள்ளது. ஆக இலங்கைக்குள்ளேயே இருபோக்குகள் இருந்துள்ளன எனலாம். தமிழ்ப்பகுதிகளில் தனித்துவமான பவுத்தம் ஒன்று இருந்துள்ளது. அது சிங்கள பவுத்த மரபிலிருந்து வேறுபட்டதாகவும் திராவிட மரபுடன் இணைந்ததாகவும் இருந்துள்ளது.

காஞ்சியை மையமாக வைத்து நடைபெற்ற பவுத்த அளவையியல் உசாவல்கள் (5, 6ம்நூ.) சமஸ்கிருதத்தில் இருந்த நிலைமாறி, தமிழிலும் அது பேசப்பட வேண்டியநிலை பின்னாளில் உருவானது. பலமொழிகளைப் பேசும் ஒரு விரிந்த பரப்பில் பவுத்தம் குறித்து உரையாட வேண்டிய நிலையும் இருந்தது. இந்தப் பின்னணியில், மணிமேகலைக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின் உருவான வீர சோழியம் தமிழை அதன் உள்ளூர்த் (local) தன்மையிலிருந்து விரித்து சமஸ்கிருதம் போல ஒரு பன்னாட்டுத் (trans local) தன்மையுடைய தாக்கும் முயற்சியை மேற்கொண்டது. மணிப் பிரவாளம் குறித்து முதன் முதலாக ஒரு தமிழ் இலக்கண நூல் பேசநேர்ந்தது இப்படித்தான். சாதாரண மக்களின் பேச்சு வழக்குச் சொற்களையும் அது ஏற்றுக்கொள்கிறது. சமஸ்கிருதம், சிங்களம் முதலான மொழிகளுடன் மொழிக்கலப்பு குறித்து அது கவனம் கொள்கிறது. இவற்றை எல்லாம் கணக்கில்கொண்டு பாக்கும்போது, குறிப்பாக அது சிங்கள மொழியையும் ஒரு பொருட்டாகக் கொள்வதைக் காணும்போது, அநுராதபுரத்தை ஒட்டி சோழிய பவுத்தம் ஒன்று திராவிட பாணியில் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது.

தமிழகத்தில் பவுத்தம் துடைத்தெறியப்பட்டது ஒரு புறம்இருக்க, இலங்கையில் சிங்கள பவுத்தத்திலிருந்து வேறுபட்டு வளர்ந்திருந்த தமிழ்ப் பவுத்தம் அழிந்ததில் ஒரு பக்கம் சிங்கள பவுத்தம் காரணமாக இருந்தது எனில் இன்னொரு பக்கம் தமிழ்ச் சைவமும் அதில் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது எனலாம்.

“தமிழ்நாடு பவுத்தசங்கம்” என்பதைக் கண்டவுடன் மனதில் ஒரு கணம் இந்தச் சிந்தனைகள் ஒருமின்னலைப் போலத் தெறித்தோடுகின்றன. என்றும் தம்மப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பெரியவர் ஓ.ரா.ந.கிருஷ்ணன் அவர்கள் மூன்று மாதங்களுக்கு முன் இந்நூலைத் தாங்கள் வெளியிடுவதாகச் சொன்னவுடன் எவ்விதத் தயக்கமும் இன்றி ஏற்றுக்கொண்டேன். பின் அதை மறந்தே போனேன். இன்று தபாலில் வந்திருந்த மெய்ப்புவடிவைக் கண்டபோதுதான் நினைவுக்குவந்தது.

திருத்துவதற்காக ஒரு முறை மீண்டும் அதைப் படிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. நான் எழுதியவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த நூல்களில் இது முக்கியமானது. புத்தத்தை எழுதுவதற்கென என்னை அறியாமலேயே எனக்கொரு பொருத்தமான மொழி வாய்த்துள்ள தற்குநான் அந்த போதிமாதவனுக்குத் தான் நன்றி சொல்லவேண்டும்.

பெரியவர் கிருஷ்ணன் மிக்க தயக்கத்துடன் ஒன்றைக் குறிப்பிட்டார்.”பவுத்தம் புலாலை ஒறுத்த மதம். மயக்கும் கள்ளையும் மன்னுயிர்க் கோரலையும் மணிமேகலை எந்த அளவிற்குக் கண்டித்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். மூத்து விளிமாவொழித்து எவ்வுயிர்மாட்டும் தீத்திறம் ஒழிகென சாதுவன் கூறிய அறிவுரை உங்களுக்குத் தெரியாததல்ல.”

இந்நூலின் இரன்டாவது அத்தியாயத்தில் புலால் குறித்த பவுத்த அணுகல் முறை பற்றிய என் குறிப்பு பற்றித்தான் அவர்இவ்வாறு கூறினார். நான் அப்பகுதியை மீண்டும் வாசித்தபோது அதில் பெரிய மாற்றங்கள் ஏதும் தேவை இல்லை என்று உணர்ந்தேன். மீண்டும் அவருடன் விவாதித்தபோது, “பவுத்ததம்மம் எல்லாத் தரப்பு மக்களிடையேயும் சென்றடைந்து அனைவரும் வாழவழிகாட்ட வேண்டும் என்பதே புத்தரின் குறிக்கோளாக இருந்தது. எனவே, புத்தர் மக்களுடைய உயிர்வாழ்க்கையோடு இணைந்துள்ள உணவுப்பழக்கத்தில் தலையிட விரும்பவில்லையென்றே தெரிகிறது. உணவுப் பழக்கத்தைப் பொருத்தவரை எல்லோருக்கும் எல்லாச் சமயத்துக்கும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துவதாக ஒரு திட்டவட்டமான விதியைக் கூறமுடியாது. அதற்காகப் பவுத்தம் புலால் உணவை ஏற்பதாகக் கருத்தல்ல ” என்றார்.

எனதுகருத்தும்அதுதான்என்றேன். புத்தம்உயிர்க்கொலையைஏற்கும்மதமல்ல. அதுபோரைவெறுக்கும், அஹிம்சையைப்போதிக்கும்மதம். உயிர்ப்பலியைமட்டுமல்ல,அதுஉணவுக்காக உயிர்க்கொலைசெய்வதையும்ஏற்பதில்லை. அதேநேரம்புத்தரின்பாதைமஜ்ஜிமபதிபாதம். நடுநிலைப்பாதை. அதுமக்கள்மதம். மக்களைவேறுபாடுகளற்றுஉற்றுநோக்கியமதம். அதனால்தான்இதேபோலஅஹிம்சையையும் அமைதியையும்வலியுறுத்தியசமணம்முற்றாகஅழியநேர்ந்தபோதும், பவுத்தம்இன்றுஉலகளவில் மூன்றாவதுபெருமதமாகவாழ்கிறது. இந்த நூலின் நோக்கங்களில் ஒன்று எப்படி பவுத்தம் ஒவ்வொரு அம்சத்திலும் நடுநிலைப்பாதையை மேற்கொள்வது எனச் சொல்வது. நூல் முழுக்கஇது விரவிக்கிடப்பதை நீங்கள் காணலாம்.

அடுத்தநோக்கம், இந்துத்துவத்திற்கும்போதிசத்துவத்திற்கும் இடையிலானநுண்மையானவேறுபாடுகளையும், புத்தநெறி, பக்திநெறியிலிருந்துவேறுபடும்புள்ளிகளையும்சுட்டிக்காட்டுவது. இந்தமுயற்சியும்நூல்முழுக்க விரவிக்கிடப்பதை நீங்கள் பார்க்கலாம்.

அந்தவகையில்தான் ஒரு மக்கள்மதமாகத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும்முயற்சியில்ஏற்பட்டவிட்டுக்கொடுத்தல்களில்ஒன்றுதான், ‘மாமிசத்திற்காகக்கொல்லக்கூடாது. ஆனால்கொல்லப்பட்டமாமிசத்தைஉண்ணலாம்’ என்கிற நிலை எடுத்தது. இன்றுஉலகெங்கிலும்பெரும்பாலான பவுத்தர்கள்மாமிசம்உண்பவர்களாகவேஉள்ளனர்.

மணிமேகலையில் சாதுவனுக்கும்நாகர்தலைவனுக்கும்இடையில்நடக்கும்உரையாடல்குறித்துபவ்லாரிச்மான்எழுதியுள்ளகட்டுரை (Framed Narratives the Dramatised Audience in a Tamil Epic) மிகமுக்கியமானஒன்று. அறவழியைமுன்னிறுத்தும் பவுத்தத்தைப்பரப்புவதுஎன்பதுகிட்டத்தட்ட ஒருபுரட்சிகரஅரசியலைமக்களிடம் கொண்டுசேர்ப்பதற்குஒப்பானபணி. அது பல பேச்சு வார்த்தைகளுக்கும்விட்டுக் கொடுத்தல்களுக்கும் (negotiations) உட்பட்டஒன்று. இருவரும்பிடிவாதமாகஒரேநிலையில்நின்றிருந்தால்காரியம் ஆகாது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துத்தான் சேர்ந்துசெயல்படும்நிலையைஎட்டவேண்டும். ஆக ஒரு ‘பேரம்’ (bargain) இங்கு தவிர்க்க இயலாதாகிறது.

கப்பல் கவிழ்ந்துகரையில்ஒதுங்கியசாதுவனுக்குநாகர்தலைவன், மாது, மது, மாமிசம் மூன்றையும் அளித்துக்கவுரவிப்பான். நர மாமிசம் உண்னும் வழக்கமுடைய நாகர்களின் வாழ்விலிருந்து இம் மூன்று நுகர்வுகளும் பிரிக்க இயலாதவை.புத்தநெறியைஏற்றிருந்தசாதுவன்இது கண்டு அதிர்ச்சி அடைவான். மிகக்கடுமையாக எதிர்த்துரைப்பான். தலைவனைப்பொருத்தமட்டில்இவைமூன்றும்அவனால்விட்டுக்கொடுக்க இயலாதவை. இவற்றைத்துறந்தபின்என்னவாழ்வுவேண்டியுள்ளது? விவாதப்போக்கில்சாதுவன் சற்றேகீழிறங்கிவருவான். காமத்தைத் துறத்தல் என்பதை வற்புறுத்தாது கள்ளும் உயிர்க் கொலையும் எவ்வாறு நல்லறம் அன்று என அறிவுரைப்பான். கள்ளும் புலாலும் இல்லாது எப்படி வாழ இயலும்? எங்கள் வாழ்முறைக்கேற்ற ஒரு அறத்தை எங்களுக்கு நீ உரை என நாகர் தலைவன் கேட்பான். சரி, உங்களுக்கேற்ற அறமுரைப்பேன். மனிதர்களாயினும் பிற உயிர்களாயினும் எந்த உயிர்களையும் கொல்லக் கூடாது. உணவுக்காகக் கொல்லப்படும்மாமிசத்தைஉண்ணக்கூடாது. வயது முதிர்ந்து இறக்கும் பிராணிகளின் மாமிசத்தை மட்டுமே உண்ணலாம்எனக்கூறஅவ்வாறேஇருதரப்பிலும்ஒப்புதல்ஏற்படுகிறது. ஆக பல்வேறுபட்ட மக்கள் குழுவினருக்கும் அவரவர்களுக் ஏற்ற அற நடைமுறைகள் (codes) சாத்தியம் என்பதை பவுத்தம் ஏற்கிறது.

சுமார்பத்தாண்டுகளுக்குமுன்இந்நூல்எழுதுவதற்குக்காரணமாகஇருந்தஅருட்பணியாளர்ஏசுமரியான்அவர்களுக்கும், இநூலைவெளியிட்டுவிமர்சனஉரையாற்றியபேராசிரியர்அப்துல்லாஹ்அவர்களுக்கும்என்நன்றிகளைஇங்குகூறக்கடமைப்பட்டுள்ளேன். பேராஅப்துல்லாஹ்அப்போதுபேரா. பெரியார்தாசன். பவுத்தநெறியைஏற்றுக்கொண்டவர். அம்பேத்கர் அவர்களின் ‘புத்தமும்தம்மமும்’ நூலைஅத்தனைஅழகாகமொழியாக்கியவர். “அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நூலைத் தொடர்ந்து அடுத்து வாசிக்கவேண்டிய நூல்” என அன்று அவர் இந்த நூலை அறிமுகம் செய்தது இன்னும் நெஞ்சில் நிற்கிறது. அவர்இன்று நம்மோடு இல்லை.

இடையில் இந்நூலையாரோ ஒருவர் சிங்களத்தில் வெளியிடுவதாகச் சொல்லி அனுமதிக் கடிதம் ஒன்றுகேட்டார். அவ்வாறே அளித்தேன். பின் நான்கைந்தாண்டுகளுக்குப் பின் நான் இலங்கைசென்றிருந்தபோது அச்சிங்கள மொழிபெயர்ப்பை என்னிடம் அவர்தந்தார். எந்த அளவிற்கு அம்மொழியாக்கம் சரியாக இருந்தது என்பதுஎனக்குத்தெரியாது.

மீண்டும் பெரியவர் கிருஷ்ணன்அவர்களுக்கும் தமிழ்நாடு பவுத்தசங்கத்திற்கும், மேத்தா பதிப்பகத்திற்கும் என் நன்றிகள்.

சென்னை 23,

ஜூன் 23, 2014