எட்டு வழிச் சாலையும் எடப்பாடி அரசும் : அறிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

1

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றியே தீர்வது என்பதை ஒரு மூர்க்க வெறியுடன் செயல்படுத்திக் கொண்டுள்ளது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. ‘மூர்க்க வெறி’ என நான் இங்கு சொல்வது கோபம் அல்லது வெறுப்பின் விளைவல்ல. எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்குத் தம் விவசாய நிலங்களைப் பறிகொடுக்கத் தயங்கும் விவசாயிகளை இந்த அரசு எதிர்கொள்ளும் விதத்தைச் சொல்ல தமிழில் வேறு சொற்கள் இல்லை.

பத்ததாயிரம் கோடி ரூபாய் செலவாகும் ஒரு திட்டத்தை, ஐந்து மாவட்டங்களின் வழியே சென்று ஏராளமான விவசாய நிலங்களைப் பாழடிக்கும் ஒரு ‘மெகா’ நடவடிக்கையை அரசு உரிய விதி முறைகளைப் புறந்தள்ளிமேற்கொள்ளும்போது தம் நிலங்களைக் கொடுக்கத் தவறும் விவசாயிகள் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு உரிய பதில்களைச் சொல்லாமல், அவர்களின் குரலை மிகக் கொடூரமாக ஒடுக்க முனைவதை ‘மூர்க்க வெறி’ எனச் சொல்லாமல் வேறென்னசொல்வது..

உலகின் ‘மிகப் பெரிய ஜனநாயக நாடு இது’ எனப் பீற்றிக்கொள்ள்ளும் இவர்கள் இந்தத் திட்டம் குறித்து பாதிக்கப்படும் விவசாயிகள் எழுப்பும் எந்தக் கேள்விக்காவது ஒழுங்கான பதிலைச் சொன்னார்களா? மாறாக தங்கள் எதிர்ப்பை  ஜனநாயக முறையில் வெளிப்படுத்த முயலும் அவர்களை எத்தனை கொடூரமாக இவர்கள் ஒடுக்குகின்றனர். தங்களின் கோரிக்கைகளை ஊர்வலமாக வந்து பொறுப்புள்ள அதிகாரிகளிடம் அளிக்கவும் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.எழுப்பும் ஐயங்களுக்கு மெத்தப் படித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்கின்றனர். கைப்பற்றப்படும் நிலம், வெட்டப்படும் மரங்கள் ஆகியவற்றுக்கு அளிக்கப்போகிற இழப்பீட்டுத் தொகை குறித்து இந்த ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி அசடு வழிவதை இந்த நூலாசிரியர் குணா தர்மராஜா ஆதாரங்களுடன் இந்நூலில் அம்பலப்படுத்துகிறார்.

ஏன் இப்போதுள்ள சேலம் – சென்னை நால்வழிச் சாலையையேமேம்படுத்தக் கூடாது?எட்டு வருடமாகச் சொல்லிக் கொண்டுள்ள திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சல்லைத் திட்டம் என்னாச்சு?‘பாரத்மாலா’ திட்டத்தின் ஓரங்கம் என்கிறீர்களே.அந்தத் திட்டத்தில் இதுவும் ஒன்று என்றால், அதிலுள்ள பிற திட்டங்களை அறிவித்தபோதே அறிவிக்காமல் இப்போது திடீரெனத் திணிக்கிறீர்கள்? இந்தத் திட்டத்தால் விளையும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்த விரிவான விவாதங்கள் ஏன் நடத்தப்படவில்லை?, ‘விரிவான திட்ட அறிக்கை’ யை(Detailed Project Report – DPR) எப்போது வெளியிடப் போகிறீர்கள்? தம் நிலத்தைப் பறிகொடுக்க மறுக்கும் விவசாயிகளை அதிகாரிகள் விசாரிக்கும்போது ஏன் ஊடகங்களை அனுமதிக்க மறுக்கிறீர்கள்?தம் நிலத்தைத் தாரை வார்க்க 91 சதம் விவசாயிகள் சம்மதித்து விட்டார்கள் எனக் கூசாமல் பொய்யுரைக்கும் முதல்வர் பழனிச்சாமியால் அதை நிறுவ இயலுமா?

கேள்விகள்.. கேள்விகள்..கேள்விகள்.அரசிடம் எந்தப் பதிலும் இல்லை.விளக்கம் சொல்வதற்குப் பதிலாக இப்படியான கேள்வியை எழுப்புகிறவர்கள் தாக்கப்படுகிறார்கள்.கண்காணிக்கப்படுகிறார்கள்.பின் தொடரப்படுகிறார்கள்.அறைக் கூட்டங்கள் தடுக்கப்படுகின்றன.மக்களுக்கு ஆதரவாகப் பேசியதற்காக வளர்மதி முதல் மன்சூர் அலிகான் வரை கைது செய்யப்படுகின்றனர்.போராட்டத்தை ஆதரிப்போரின் செல்போன் உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன.அவர்களின் ஒவ்வொரு அசைவும் வீடியோப் பதிவுகள் ஆக்கப்படுகின்றன.போராடும் மக்களைச் சந்திக்க வந்த நாடறிந்த தலைவரும், பேராசிரியருமான யோகேந்திர யாதவைத் தடுத்து இழுத்துச் சென்று அடைத்து வைத்து மாலையில் விடுவித்தார்களே அதை எப்படி மறக்க முடியும்?

எதற்கும் அவர்களால் பதில் சொல்ல இயலாது.ஏனெனில் அவர்களிடம் பதில்கள் இல்லை.இப்படியான மெகா திட்டங்களில் நிலம் கையகப்படுத்துதல் முதலான வேலைகளைத் தொடங்குவதற்கு வெறும்திட்டச் சாத்திய அறிக்கை (Project Feasibility Report) ஒன்றை வெளியிடுவது மட்டும் போதாது.நிலம் கையகப்படுத்தப்படும் திட்டம் வெளியிடப்பட்டு மக்கள் கருத்துக் கணிப்பு முதலியவற்றை எல்லாம் நடத்திய பின்னரே கையகப்படுத்தும் வேலைகளைத் தொடங்க வேண்டும். அதிகாரிகள் இப்போது பாதிக்கப்பட்டவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் விழிப்பது  இப்படியான அடிப்படை நிபந்தனைகள்எல்லாம் முறையாகக் கடைபிடிக்கப் படாதததன் விளைவுதான்,.

2

ஆறேநாட்களில்எல்லாவிதிகளையும்மீறிஇந்தசேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டம்மோடிஅரசின்’பாரத்மாலா’ திட்டத்தில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட வரலாறு ஒரு துப்பறியும் கதையைக் காட்டிலும் சுவாரசியமான ஒன்று.இது குறித்த விவரங்களை சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்து வரும்நித்தியானந்த் ஜெயராமன் அவர்கள் விரிவாக எழுதியும் பேசியும் வருகிறார். சிலவற்றை இங்கே தொகுத்துக் கொள்வோம்:

இந்தபாரத்மாலா திட்டம் 2016 முதல் மோடி அரசால் முன்வைக்கப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டாலும்அந்தஅறிவிப்பில்சேலம் – சென்னைஎட்டுவழிச் சாலைஇருக்கவில்லை.இந்தியா முழுவதையும் பிரும்மாண்டமான நவீன வடிவிலான சாலைகளை அமைத்துச் சுற்றி வளைக்கும்  பாரத்மாலா திட்டத்தில் உள்ள வேறு சில மெகா சாலைகளில் செய்ய வேண்டிய திருத்தங்கள் பற்றி மத்திய அரசுக்கு தமிழகமுதல்வர்எடப்பாடிபழனிச்சாமிஎழுதியஎந்தக் கடிதத்திலும் அவர்சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தைப்பற்றிப் பேசவில்லை. எடுத்துக்காட்டாக நவ 23, 2017ல்எழுதப்பட்டகடிதத்தைச் சொல்லலாம்.பெங்களூர் – மதுரை சாலை பற்றித்தான்அதில்இருந்தது, அக்டோபர் 2017ல்வெளியிடப்பட்டதிட்டப்பட்டியலிலும்அதுஇடம்பெறவில்லை. நவ 23, 2017ல்திட்டத்தில்சிலதிருத்தங்கள்வேண்டிமத்தியஅரசுக்குஎடப்பாடிஅரசுஎழுதியகடிதத்திலும்சேலம் – சென்னைஎட்டுவழிச்சாலைஇடம்பெறவில்லை.

5THCREEK2

ஆனால் எப்படிபிப் 08,2018 அன்று ஆறே நாட்களில் எல்லாவிதிகளையும் மீறி எவ்வாறு இந்த சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் மோடி அரசின்பாரத்மாலாதிட்டத்தில்ஒன்றாகஅறிவிக்கப்பட்டது என்பதைப் பார்க்கலாம். பிரமிக்கத் தக்க அந்த மின்னல்வேக நடவடிக்கைகள் வருமாறு:

பிப் 19, 2018 அன்றுதிடீரென Feed Back Infra Pvt Ltd (FBIL) எனும்அமைப்பு சேலம் – சென்னைஎட்டுவழிச்சாலைதொடர்பாகசாலைப்போக்குவரத்தைசர்வேசெய்யஅனுமதிகோரிதேசியநெடுஞ்சாலைத்துறைக்கு (National Highways Authority of India – NHAI) ஒருகடிதம்அளிக்கிறது. அதன் பிரதிநிதிகள் தமிழக அதிகாரிகளையும்சந்தித்துப்பேசுகின்றனர். உடன்அதற்கான அனுமதியை NHAIஅளிக்கிறது. தமிழகஅரசும்உடன்இசைவளிக்கிறது.

பிப் 22, 2018ல் FBIL உம் NHAI உம் ‘விரிவான திட்ட அறிக்கை'( Detailed Project Report- (DPR) எதையும் வெளியிடாமல்ஒப்பந்தம்செய்துகொள்கின்றன.அந்த அறிக்கை இதுவரை மக்கள் முன் வைக்கப்படவில்லை.

பிப் 25,2018அன்றுஇந்தசேலம் – சென்னை எட்டுவழிச்சாலை பற்றிய அறிவிப்பைமத்தியபோக்குவரத்துஅமைச்சர்நிதின்கட்காரியும்தமிழகமுதல்வர்எடப்பாடியும்கூட்டாக நடத்தியபிரஸ்மீட்ஒன்றில்அறிவிக்கின்றனர்.

ஒரு 10,000 கோடிரூபாய்த்திட்டம் இப்படி எல்லாவிதிகளையும் மீறி ஆறேநாட்களில்முடிவுசெய்யப்பட்டதுஎப்படி?திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு முன் செய்ய வேண்டிய அனைத்து ஆய்வுகளும் (Standard Procedures for Appraisal and Approvals of Projects) செய்யப்படாமல் இது எவ்வாறு உருவாக்கப்பட்டது?

இதில் இன்னொரு சுவாரசியமான செய்தியும் உண்டு. FBIL நிறுவனம் நிதிக்கையாளுகையில் தவறாக நடந்துகொண்டதை ஒட்டிமுன்னதாக உலகவங்கியால்ஓராண்டுகாலம் தடைசெய்து தண்டிக்கப்பட்ட (black listed)ஒன்றுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

இதையெல்லாம்கேட்டால்யாரிடமும்பதிலில்லை.கேட்க முயல்[பவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர்..

ஏன் இந்த அவசரம்?

Ennore creek

இதற்கும் மத்திய – மாநில அரசுகளுக்கு மிகவும் நெருக்கமான அதானி நிறுவனம் தொடங்கியுள்ள எண்ணூர் துறைமுகத் திட்டத்திற்கும் ஏதும் தொடர்புண்டா?

நிச்சயமாக உண்டு.சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம் முதலான பகுதிகளில் இன்று மிகப்பெரிய தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.ஹூண்டாய், டயோட்டா, நிசான், ஃபோர்டு, ரெனால்ட், மகிந்த்ரா என முக்கியமான பெரும் கார் தொழிற்சாலைகள் எல்லாம் இங்குதான் உள்ளன. ஆண்டொன்றுக்கு 1,50,000 கார்கள் இங்கிருந்து இந்தியாவெங்கும் விரைவாகக் கொண்டு செல்லப்பட வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது. அதிக வேகத் திறன் சாத்தியமுள்ள சாலைகளும், அவற்றோடு இணைக்கப்பட்ட  பெரும் சரக்குக் கப்பல்கள் நிற்கக் கூடிய துறைமுகமும் இன்று அதற்குத் தேவை.

ஏன் இந்தத் தொழிற்சாலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் குவிகின்றன?

BL2401GIMADANI

இங்கு குறைந்த கூலிக்குத் தொழிலாளிகள் தம் உழைப்பை விற்கத் தயாராக உள்ளனர்.முதலாளிகளுக்குச் சாதகமான தொழிற் சட்டங்கள் உள்ளன.பாதுகாப்பு தொடர்பான உற்பத்திகளில் 100 சத வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கு இன்று மோடி அரசு அனுமதி அளித்துள்ளது.பாதுகாப்பு தொடர்பான இராணுவ ஆயுத உற்பத்திசாலைகளும் (Defence Industrial Corridor) இங்கு வர உள்ளதாக சென்ற பிப்ரவரி 2018ல் அறிவிக்கப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது தவிர திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுதி மலை, வேடியப்பன் மலை மற்றும் சேலத்திலுள்ள கஞ்சமலை ஆகியவற்றில் மிகவும் தரமான இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்றன. இவ்ற்றைக் குறிவைத்துள்ள ஜின்டால் போன்ற எஃகு உற்பத்தி நிறுவனங்களுக்கு அவற்றைக் கொண்டு செல்ல வேகப் பாதைகளும், பெருந்துறைமுகங்களும் இன்று தேவைப்படுகின்றன.

தமிழ்நாட்டைத் தங்களின் சொர்க்க பூமி எனச் சமீபத்தில் (ஜன 2019)சென்னையில் நடைபெற்ற ‘உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ கரன் அதானி நாக்கில் நீர் வடியச் சொன்னதை இந்தப் பின்னணியில்தான் நாம் காணவேண்டும்..

3

சர்ச்சைக்குரிய இந்த எட்டுவழிச் சாலையை உள்ளடக்குகிற இவர்களின் ‘பாரத்மாலா’ திட்டம் 2017 ஆக 25 அன்று இறுதி செய்யப்பட்டது.50,000 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு (National Highways Development project-NHDP) அடுத்த நிலையில் உள்ள ஒரு மிகப்பெரிய திட்டம் இது.

nirmala

பாரத்மாலா திட்டத்தின் பிரதான நோக்கம் துணைக்கண்டம் முழுவதும் உள்ள பெரு நிறுவனங்களின் சிறப்புப் பொருளாதார மணடலங்கள் (economic corridors) எல்லாவற்றையும் தொலை தூர எல்லைப் புறங்களுடன் இணைப்பதுதான்.இது இரகசியமல்ல. வெளிப்படையாகவே இதை அவர்கள் சொல்கின்றனர். எடுத்துக்காட்டாக சேலம் – மதுரை நால்வழிச்சாலையை பாரத்மாலா திட்டத்தின் கீழ் விரிவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எடப்பாடி எழுதிய கடிதத்தில் அதன் மூலம் இவ்வழியில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட இத்தகைய பொருளாதார மண்டலங்கள் இணைக்கப்படும் என்பதைத்தான் தன் கோரிக்கைக்குச் சாதகமாக முன்வைக்கிறார். பொருளாதார மண்டலங்களில் கடை விரித்திருக்கும் கார்பொரேட்களுக்கு வேகச் சாலை வசதிகளைச் செய்து தருவது மட்டுமல்ல இந்தச் சாலிகளின் ஊடாக இந்தியத் துணைக் கண்டத்தின் எந்த மூலைக்கும் எளிதாக இராணுவ நகர்வுகளும் சாத்தியப்பயடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு 9000 கி.மீ தொலைவுகளில் ஆங்காங்கு அமைந்துள்ள பொருளாதார மண்டலங்களை இணைப்பதோடு முடிவடையும் விஷயம் அல்லது. இத்துடன் இச்சாலைகளிலிருந்து  வெளியே எடுத்துச் செல்ல 6000 கி.மீ நீளத்திற்குச் சாலைகள் (Inter corridors), இந்தச் சாலையை அடைவதற்காக இன்னொரு 5000 கி.மீநீளத்திற்குச் சாலைகள் (feeder corridors) ஆகியனவும் அமைக்கப்படும்.

இவை மட்டுமல்ல. நீண்ட கடற்கரையுள்ள இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள ஏராளமான துறைமுகங்களுடனும் இந்த பாரத்மாலா சாலைகள் இணைக்கப்படும்.தொடர்வண்டித் தொடர்புகளும் ஏற்படுத்தப்படும்.அந்த வகையில் பாரத்மாலாவும் சாகர்மாலாவும் ஒன்றோடொன்று இணைக்கப்படும்.வாஜ்பேயீ ஆட்சிக் காலம் தொட்டே இத்திட்டங்கள் தீட்டப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4

இப்படியான நெடுஞ்சாலைகளை அமைப்பதென்பதன் மூலம் சாலைகள் அமையும் விவசாய நிலங்கள் அழிவது மட்டுமல்ல வேறு பல ஆபத்துகளும் அதனால் உண்டு.மழைக் காலங்களில் பெய்யும் மழை நீர் காலங் காலமாக ஒரு திசையிலிருந்து இன்னொரு திசையை நோக்கி ஓடி, அதன் மூலம் உருவாகியுள்ள ஒரு நீரோட்டச் சமநிலையும்  அந்த நீர்ப்பா பாதைகளுக்குக் குறுக்கே போடப்படும் இச்சாலைகளால் அழியும், இது ஒரு பக்கம் வரட்சிக்கும், இன்னொரு பக்கம் வெள்ள ஆபத்துகளுக்கும் காரணமாகும்.

சென்ற மாதம் சென்னையில் ஏகப்பட்ட விளம்பரங்களுடன் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் அதானி நிறுவனம் சார்பாகக் கலந்து கொண்ட கரன் அதானி பேசும்போது தாங்கள்செய்யப்போகிற 12,000 கோடிரூமுதலீட்டில் 10.000 கோடிரூஎண்ணூர் – காட்டுப்பள்ளிதுறைமுகவிரிவாக்கம்மற்றும் தொழில்பூங்காக்கள்அமைத்தல், பாதுகாப்புத்துறைமுதலீடுகள்ஆகியவற்றுக்கும் செலவிடப்படும்எனவும்மீதி 2000 கோடிநகரத்தில்எரிவாயுவினியோகம்செய்வதற்குச்செலவிடப்படும்எனவும்எனவும் அறிவித்துள்ளதும் கவனத்துக்குரியது..

தமிழ்நாட்டில்அதானிகுழுமம்கால்பத்தித்துஏழாண்டுகள்ஆகிவிட்டன.2018ல்காட்டுப்பள்ளிதுறைமுகத்தைஅது L & T நிறுவனத்திடமிருந்துவெறும் 1950 கோடிக்குவாங்கியது.தற்போதுஅதன்திறன் 26.5 மில்லியன்டன் சரக்கைக் (cargo) கையாள்வதாகத்தான் உள்ளது.அதை 320 மில்லியன்டன்அளவு சரக்கைக் கையாளக்கூடியதாகஉயர்த்துவதுதான்அவர்களின்நோக்கமாம், மொத்தமாகஇதற்கெனச்செலவிடப்போகும்முதலீடு 52,400 கோடிஅளவுஇருக்குமாம். கப்பல் கட்டுவது, பழுதுபார்ப்பது முதலான வேலைகளும் அங்கு மேற்கொள்ளப்படுமாம்.

6f1cf011abee274315261eee46408747

Marine Infrastructure Developer Pvt Ltd (MIDPL) எனும் பெயரில் இயங்கும் அதானியின் இந்தத் துறைமுகத்திட்டம் மிகப் பெரிய அளவில் எண்ணூர் பகுதியில் உள்ள நீர்நிலைகள், நீரோட்டம் ஆகியவற்றைப் பாதிக்க உள்ளதை சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மேற்குறித்த இந்த காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்திற்கு 2120 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது..இதில் 440 ஹெக்டேர் நிலத்தைப் புதிதாக உருவாக்க உள்ளனர்.இதற்காக அந்த அளவு கடல் மணல் தோண்டி எடுக்கப்பட்டு எண்ணூர் கடற்கழியில் (Ennore Creek) கொட்டப்படும் என்கின்றனர்.இப்படிக் கொசத்தலையார் – எண்ணூர் கடற்கழி (Ennore Creek) பகுதிகளின் இயல்புச் சமநிலை குலையும் அளவிற்குப் புவியியல் மாற்றங்கள் அங்கு மேற்கொள்ளப்பட உள்ளன.பழவேற்காடு ஏரிக்கும் கொசத்தலையாறு – எண்ணூர் கடடற்கழிக்கும் இடைப்பட்ட அழகிய இயற்கை அமைவு பெரிய அளவு பாதிக்கப்படும் எனச் சுற்றுச் சூழல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.2020 வாக்கில் பெரிய அளவு சென்னை நkaரம் முழுவதும் குடிநீர்ப் பற்றாகுறைக்கு ஆளாகும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1996ம் ஆண்டு ‘கடற்கரைப் பகுதி நிர்வாகத் திட்டம்’ (Coastal Zone Management) இப்பகுதி முழுவதையும் எந்த வளர்ச்சித் திட்டமும் செயல்படுத்தப்படக் கூடாத பகுதியாக (No Development Zone) அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஆனால் இதுபற்றி எல்லாம் எந்தக் கவலையும் இன்றி இன்று அங்கே இரு துறைமுகங்கள் (அதானி மற்றும் காமராஜர் துறைமுகம்), ஒரு நிலக்கரி மின் ஆலை, ஒரு கடல் நீரைக் குடி நீராக மாற்றும் ஆலை எல்லாம் வரப் போகின்றன.

ஒரு நாளைக்கு 30 மில்லியன் லிட்டர் திறன் உள்ள குடிநீர்ச் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.அது நாளொன்றுக்கு 75 மில்லியன் லிட்டர் கடல் நீரை உறிஞ்சி, 45 மில்லியன் லிட்டர் கடும் உப்பு நீரைக் கடலுக்குள் மீண்டும் செலுத்தப் போகிறது.இதனூடாகப் பெரிய அளவில் இங்கு மீன்வளம் குறைந்து மீனவர்களின் வாழ்வு சீரழிய உள்ளது.

6000 பேருக்கு மேல் இந்தத் திட்டங்களின் ஊடாகவேலைவாய்ப்பு உருவாகும் என்கிறார்கள்.இந்த வேலை வாய்ப்புக் கதையாடல் மிகப் பெரிய ஏமாற்று. உற்பத்தித் துறையும், விவசாயமும், மீன்பிடித் தொழிலும் அழிந்து கொண்டிருப்பதன் ஊடாக ஏற்படும் வேலை இழப்புகளோடு ஒப்பிடும் போது இந்த ஆறாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்கிற கதையெல்லாம் அபத்தம். தங்கள்நிலத்தையும், நிலத்தின்வளத்தையும் இழந்த மக்களுக்கும், பாரம்பரியமாக மீன்பிடித்தொழில் செய்து சுயேச்சையாக வாழ்ந்து வந்த கடல் தொழிலாளிகளுக்கும் இவர்கள் என்ன வேலை தரப்போகிறார்கள்?

5

 

இவர்களின் ‘இந்த’ வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் எப்படி ஒன்றோடொன்று இணைந்துள்ளன என்பதைப் புரிந்துகொள்ளத்தான் நாம் இவ்வளவையும் சொல்ல வேண்டி உள்ளது.பாதிக்கப்படப் போவது விவசாயிகள் மட்டுமல்ல. எல்லோரும் பாதிக்கப்படப் போகிறோம்.உடனடியாகப் பாதிக்கப்படப் போகிறோம்.நகர்ப்புறங்களில் வாழும் மத்தியதர வர்க்கத்தினர் இதை உணர வேண்டும்.

 

பிப்ரவரி 16, 2019