NCHRO National Confederation of Human Rights Organizations
Head Office: #4, Upper Ground Floor, Masjid Lane, Hospital Road, Jungpura, Bhogal,New Delhi – 110014. Tel: 011-40391642 Mob: 94898 71185, 96 00 222 930,Email: nchromail@gmail.com, www.nchro.org.
ஜூன் 5,2018; சென்னை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மிகப் பெரிய அளவில் சுற்றுச் சூழல் பாதிப்புக்ளை ஏற்படுத்தி சுற்று வட்டார மக்களின் உயிருக்கும், அன்றாட வாழ்க்கைக்கும் ஆபத்து ஏற்படுத்தி வருவதற்கு எதிராக அப்பகுதி மக்கள், அந்த ஆலையை மூடக் கோரி நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். அந்த ஆலை இப்போது விரிவாக்கம் செய்யும் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில் ஆலையை மூடுவதற்கான மக்கள் போராட்டம் தீவிரமானது. தற்போது தொடங்கிய போராட்டத்தின் நூறாவது நாளை ஒட்டி மே 22 அன்று மக்கள் ஊர்வலமாகச் சென்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவதாக அறிவித்ததை ஒட்டி அரசு 144 தடை உத்தரவை இட்டது. தடையை மீறிச் சென்று முற்றுகையிட்டுக் கைதாவது என மக்கள் சென்ற போது அன்று முற்பகல் 11.30 மணி அளவில் காவல்துறை மக்களை நோக்கிச் சுட்டது. அன்று இரண்டு முறையும், அடுத்த நாள் ஒரு முறையும் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடிப் பிரயோகத்தில் இப்போது 14 பேர்கள் இறந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படு காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய துப்பாக்கிச்சுடு இது. இது குறித்த உண்மைகளை அறிய ‘தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு’ (NCHRO) சார்பாக ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு, இக்குழு சென்ற ஜூன் 27,28 தேதிகளில்தூத்துக்குடிக்கும் அருகில் உள்ள கிராமங்கள் சிலவற்றிற்கும் நேரில் சென்று பலரையும் சந்தித்தோம்..
குழுவில் பங்குபெற்றோர்:
அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,
ரெனி அய்லின், தேசியச் செயலாளர், NCHRO, திருவனந்தபுரம்,
வழக்குரைஞர் ப.பா.மோகன், மாநிலத் தலைவர், NCHRO, கோவை,
வழக்குரைஞர். என்.எம்.ஷாஜஹான், மாநிலப் பொதுச் செயலாளர், NCHRO,
வழக்குரைஞர். சென்னியப்பன், மனிதம் சட்ட உரிமை,
இரா.பாபு, அம்பேத்கர் சட்ட ஆதாரமையம், கடலூர்,
வழக்குரைஞர். உதயணன். மதுரை,
அஹமது நவவி, NCHRO, திருநெல்வேலி,
வழ. அப்துல் காதர், NCHRO, மதுரை,
அப்துல் காதர், மனித உரிமை ஆர்வலர், தூத்துக்குடி,
வழக்குரைஞர். எம்.கே.நஜ்முதீன், NCHRO, மதுரை,
வழக்குரைஞர். பி.பொன்ராஜ், NCHRO, மதுரை.
இக்குழு சென்ற மே 27, 28 தேதிகளில் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர், துப்பாக்கிக் குண்டுக் காயம் மற்றும் காவல்துறையின் தடியடிப் பிரயோகத்தில் எலும்புகள் முறிந்து இன்னும் சிகிச்சையில் உள்ளோர், அன்று கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களில் சிலர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து கொண்டுள்ள வழக்குரைஞர்களில் சிலர், காயம் பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், துப்பாக்கிச் சூடு நடந்த அன்று களத்தில் இருந்த மக்களில் பலர், தொடர்ந்து அ.குமாரெட்டிபுரத்தில் ஆலையை மூடும்வரை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மக்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்து கொண்டுள்ளவர்கள், தூத்துக்குடி வரலாற்றறிஞர் பேரா. ஆ.சிவசுப்பிரமணியம், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி முதலானோரைச் சந்தித்து உரையாடியது. மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் சங்கத் தலைவர் செந்தூர்ராஜன் முதலானோரை தொலை பேசியிலும் தொடர்பு கொண்டது காவல்துறை கண்காணிபாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள முரளி ரம்பாவை நாங்கள் சந்திக்கச் சென்றபோது சந்திப்பதாகச் சொல்லி எங்களைக் காத்திருக்கச் சொன்ன அவர் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் சந்திக்க மறுத்து விட்டார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைப் போராட்டம்: இந்த அறிக்கை தூத்துக்குடியில் சென்ற மே 22, 23 தேதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்த உண்மைகளையே பிரதானமாகத் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. எனினும் சுருக்கமாக இந்த ஆலை மற்றும் இன்றைய போராட்டத்தின் பின்னணியைப் பார்ப்போம். 1994 முதல் இங்கு இயங்கும் இந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை பன்னாட்டு கார்பொரேட் நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸ் லிமிடெட்டின் கிளை அமைப்புகளில் ஒன்று. பொதுவில் தாமிர உருக்காலைகள் கடும் சுற்றுச் சூழல் தீங்குகளை விளைவிப்பவை என்பதால் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தாமிரத் தாது ஏராளமாக இருந்தபோதும் அங்கு உருக்காலைகளை அவை அனுமதிப்பதில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அங்கிருந்துதான் கப்பல்களில் மூலத் தாதுக்கள் கொண்டுவரப்படுகின்றன. 1993 ல் இந்நிறுவனம் இந்த உருக்காலையை மகாராஷ்டிரத்தில் தொடங்க இருந்தபோது அங்குள்ள மக்கள் இந்தக் காரணங்களுக்காக அதை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அது தமிழகத்தை அப்[போது ஆண்ட ஜெயலலிதா அரசை அணுகி அனுமதி பெற்று தூத்துக்குடியில் இந்த ஆலையைத் தொடங்கியது. அதன் கழிவுகளின் ஊடாக வெளிப்படும் நச்சுக்கள் விளைவிக்கும் ஆபத்துகளை அனுபவரீதியாக உணர்ந்த மக்கள் ஆலை தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதை எதிர்க்கத் தொடங்கினர். ஆண்டொன்றுக்கு நாலு இலட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் இந்த ஆலை விதிமுறைகளையும் ஒத்துக் கொண்ட கடப்பாடுகளையும் மீறியுள்ளதைப் பலமுறை பாசுமைத் தீர்ப்பாயம் முதலான அரசு நிறுவனங்களும், சுற்றுச் சூழல் அமைப்பினரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது குறித்து ஏராளமான தகவல்கள் போராடும் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்போது அந்த ஆலையின் உற்பத்தியை இரண்டுமடங்காக்கி விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள சூழலில் மூன்று மாதங்களுக்கு முன் தற்போதைய போராட்டம் தொடங்கியது
அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் ஏழு இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள எட்டு கிராமங்களிலும் நிலத்தடி நீரை எடுத்து சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விடப் பல மடங்கு ஈயத் தாது கலந்து நிலத்தடி நீர் மாசுபட்டு இருந்தது தெரிய வந்தது. ஆலையைச் சுற்றியுள்ள மடத்தூர், காயலூரணி, தெற்கு வீரபாண்டியபுரம், அ. குமரெட்டியபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான் ஆகிய கிராமங்களில் இவ்வாறு நிலத்தடி நீர் கெட்டுள்ள உண்மையை தமிழக அரசோ, மாவட்ட நிர்வாகமோ உடனடியாக வெளியிட்டு மக்களை எச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமே தாங்கள் இதைத் தெரிந்து கொண்டதாக சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் எங்களிடம் தெரிவித்தார்.
இப்படியான சுற்றுச் சூழல் கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளைச், சுற்றி 500 முதல் 1000 மீட்டர் அகலம் வரை பசுமைப் பட்டி வளர்க்க வேண்டும் என இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறுகிறது. ஆனால் வெறும் 25 மீட்டர் பசுமைப் பட்டி அமைத்தால் போதும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு சலுகை அளித்துள்ளது எனவும், அதையும் கூட அது சரியாகச் செயல்படுத்தவில்லை என்றும் நித்யானந்த் கூறினார். இந்த நிலையில்தான் ஸ்டெர்லைட் ஆலை இப்போது தன் உற்பத்தியை ஆண்டுக்கு எட்டு இலட்சம் டன் தாமிரத் தகடுகள் என இரட்டிப்பாக்கும் முயற்சியில் இறங்கியது. இதை ஒட்டி சென்ற பிப்ரவரி யில் இந்த இறுதிக் கட்டமக்கள் போராட்டம் தொடங்கியது.
மாசுபட்ட காற்று மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றின் விளைவாகப் புற்று நோய் உட்படப் பல்வகை நோய்களால் தாங்கள் பாதிக்கப்படுவதாக அம்மக்கள் கூறுகின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னும் நாங்கள் சென்றபோதும் ஆலையை மூடும்வரை போராடுவோம் எனத் தொடர்ந்து அ.குமரெட்டிபுரத்தில் மக்கள் அமர்வுப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதை அறிந்த எங்கள் குழு மே 28 அன்று காலை அங்கு சென்றபோது அங்கு அமர்ந்திருந்த பெண்களின் சார்பாகப் பேசிய வள்ளிமயில், தங்களில் பாதிப்பேருக்கு கர்ப்பப்பை நீக்கப்பட்டு விட்டது எனவும், கருச்சிதைவு, குழந்தையின்மை ஆகியன அதிக அளவில் அப்பகுதியில் உள்ளதாகவும் கூறினார்.
“விவசாயிகள், வியாபாரிகள், மீனவர்கள் எல்லாருமே பாதிக்கப்படுறோம். இந்த நிலையில் இன்னும் பெருசா ஆலையை விரிவாக்கம் பண்ணுனா நாங்க என்ன ஆகுறது.? ஆலைப் பக்கம் போய் (விரிவாக்க) வேலை தொடங்கி இருக்குறதை எல்லாம் பாத்துட்டு ஆலையை விரிவாக்கக் கூடாதுன்னு முதல் கட்டமா எங்க ஊரில்தான் பிப்ரவரி 12 அன்னிக்குப் போராட்டத்தைத் தொடங்கினோம். அதுக்கு நல்ல ஆதரவு எல்லா ஊர்களிலும் இருக்கிறதப் பார்த்துட்டு தொடர் போராட்டத்தைத் தொடங்கினோம். மூணு மாசம் முன்னாடி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டமாத்தான் இது தொடங்குச்சு. இருட்டுன பிறகும் நாங்க எழுந்து போகாம அங்கேயே இருந்தோம். போலீஸ் கலையச் சொன்னபோதும் போகல. அடுத்த நாளMGR பூங்காவுல நுழைந்து உட்காரப் போனோம். நுழைய விடலை. அப்புறந்தான் இது நூறுநாள் போராட்டமா மாறுச்சு இங்கேயே உட்கார ஆரம்பிச்சோம்.. ஏபரல் 9 சாலை மறியல்; ஏப் 23 மாசு கட்டுப்பாட்டு வாரிய முற்றுகை, மே 22 மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை என அறிவிச்சோம். இதுக்கு நடுவுல பத்து தடவை கலெக்டரைப் பார்க்கப் போனோம். அவர் பார்க்க மறுத்துட்டாரு.”
தேதிவாரியாக அந்தப் போராட்ட வரலாற்றை அம்மக்கள் நெஞ்சில் ஏந்தியுள்ளனர். தங்கள் கண்முன் ஸ்டெர்லைட் நிர்வாகம் பெரிய ‘போர்’ கிணறுகளைப் போடுவதைப் பார்த்த அம்மக்கள் மிகவும் அச்சத்திற்கு உள்ளாயினர். ஏற்கனவே நிலத்தடி நீர் வற்றியுள்ள சூழலில் இந்தப் புத்திய விரிவாக்க முயற்சி முற்றிலுமாக நிலத்தடி நீர் வற்றுவதற்குக் காரணமாகும் என அஞ்சினர். பெரிது பெரிதாக வந்திறங்கும் கருவிகள் அவர்களின் அச்சத்தை அதிகமாக்கிய பின்னணியில் தான் பிப்ரவரி 12 அன்று மிகவும் தன்னிச்சையாக அந்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.. குமரெட்டியபுர மக்களின் இந்தப் போராட்டத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு பெருகியது. நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி உட்படப் பல இடங்களிலும் அவ்வப்போது ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.
அரசியல் கட்சிகளின் ஆதரவு உங்களுக்கு இருந்ததா என நாங்கள் கேட்டபோது, “இது மக்கள் போராட்டம் சார். எந்த இயக்கத்தையும் நாங்க வழிகாட்ட அழைக்கல. பாதிக்கப்பட்டிருக்குற எல்லா ஊர் மக்களும் தானா ஒண்ணு திரண்டாங்க. அரசியல்வாதிகள்.உள்ளே நுழைஞ்சுடக் கூடாதுங்குறதுல நாங்க உறுதியா இருந்தோம்” என்றார் அங்கிருந்த ஒரு இளைஞர். முற்றுகைப் போராட்டத்துக்கு மே 22 காலையில் அவ்வூர் மக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றபோது வழி மறித்து அடித்து வேன்களில் ஏற்றப்பட்டனர். அப்போது கடுமையாக அடிபட்டவர் அவர். தன் செல்போனில் எல்லா விவரங்களையும், அவர்கள் கொடுத்த மனுக்களையும் பதிவு செய்து வைத்துள்ளார் அவர்.
22 ஆண்டுகளாகப் பல்வேறு மட்டங்களில் இந்தப் போராட்டம் நடந்தபோதும் வை.கோ போன்ற அரசியல்வாதிகள் ஆதவளித்தபோதும் இப்போதைய இந்த நூறுநாள் போராட்டம் மற்றும் ஆட்சியர் அலுவலக முற்றுகை என்பது கிராம மக்களே இணைந்து “ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு” என்கிற பெயரில் எந்தக் கட்சி அல்லது இயக்கத்தையும் சாராமல் நடத்திய போராட்டம் இது.
இப்படித் தொடங்கிய போராட்டத்தின் ஊடாக, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமான ஸ்டெர்லைட் நிறுவனத் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும், தூத்துக்குடி மக்களின் உடல் நிலையை கண்டறிய சிறப்பு மருத்துவகுழு அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருந்து வந்த மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகள் உருவாயின.
போராட்டம் இப்படித் தீவிரமானதை ஒட்டி சென்ற ஏப்ரல் 9 அன்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட ஆணையிட்டது. எனினும் வழக்கமான சீரமைப்புகளுக்காகவே ஆலை உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது எனவும் மீண்டும் அனுமதி பெற்றுத் தாங்கள் செயல்படுவோம் எனவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சொல்லி வந்தது. இவ்வாறு இந்த ஆலை மூடப்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் 1998 நவம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படியும், 2013 மார்ச் 23ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையின் பேரிலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது குறிப்பிடத் தக்கது. தற்போதைய துப்பாக்கிச் சூட்டை ஒட்டிக். கடந்த 23-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் தடை செய்யப்பட்டது. கடந்த 28 அன்று தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்து ஆலை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இவ்வாறு ஆலை பூட்டப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆலை மீண்டும் இயங்கும் என்கிற பொருளிலும் வேதாந்தா நிறுவனம் இப்போது பேசி வருகிறது.
சென்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஸ்டெர்லைட் நிறுவனம் ICICI வங்கிக் காசோலையின் மூலம் பாஜக விற்கு 15 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதைப் பத்திரிகைகள் வெளிப்படுத்தியுள்ளதும் (ஜூ.வி 36: 43) நினைவுக்குரியது. பா.ஜ.க. காங்கிரஸ் முதலான அரசியல் கட்சிகளுக்கு அது தாராளமாக நிதி அளிப்பதற்கும் அது தயங்குவதில்லை.
மே 22,23 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறைகள்: துப்பாக்கிச் சூட்டிற்கு முதல்நாள் மே 21 அன்று மாவட்ட நிர்வாகம் அமைதிக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. அதில் மக்கள் அறிவித்துள்ளபடி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தக் கூடாது எனவும், பதிலாக எஸ்,ஏ.வி பள்ளி வளாகத்தில் கூடலாம் எனவும் மாவட்ட நிரவாகம் தரப்பில் வற்புறுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தைக் காட்டிலும் மிகவும் சிறிய அந்த வளாகத்தில் ஏராளமான மக்கள் எப்படிக் கூட முடியும் என்பது குறித்து நிர்வாகம் சிந்திக்கவில்லை. அதன் நோக்கமெல்லாம் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து ஒரு அமர்வுப் போராட்டத்தைத் தொடங்கிவிடக் கூடாது என்பதாகவே இருந்துள்ளது. இப்படியான ஒரு முடிவு திணிக்கப்பட்ட போதும் அது முறையாக மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. இரவு எட்டு மணிவாக்கில் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவும் உரிய முறையில் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.
அன்று (மே 21) நடந்த போராட்டக் குழு கூட்டத்தில் 144 தடையை மீறி ஊர்வலம் செல்வது எனவும், காவல்துறை மறித்தால் கைதாவது எனவும் போராட்டக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஜி.பி சார்பில் ஐ..ஜி. மகேஸ்வரன் இப்போது தாக்கல் செய்துள்ள அறிக்கையில் மே 22 போராட்டம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடன் அரசுத் தரப்பில் பேசியபோது அமைதியான முறையில் போராட அவர்கள் சம்மதித்ததாகக் கூறுவது (தினத்தந்தி, சென்னை, ஜூன் 3) குறிப்பிடத் தக்கது. அப்படி மக்களக்சொல்லியும் 144 உத்தரவு தளர்த்தப்படவில்லை. பெரிய அளவில் காவல்துறையினர் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மே 22 அன்று காலை மக்கள் குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளுடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்லத் தொடங்கினர். நகரத்தில் கூடிய மக்கள் பனிமயமாதா கோவில் அருகில் உள்ள வெளியில் திரண்டு அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மடத்தூர் கிராமத்தில் திரண்டு அங்கிருந்து ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுள்ளனர்.
நகரத்துக்குள்ளிருந்து வந்தவர்கள் ஆங்காங்கு போடப்பட்டிருந்த தடுப்பரண்களைத் தாண்டி வந்து கொண்டிருந்தனர். ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்னாக சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள ‘VVD சிக்னல்’ அருகே மக்கள் வந்தபோது அங்கே ஒரு மாட்டின் வாலை முறுக்கி வெறியேற்றி விரட்டிக் கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்யப்பட்டதைப் பலரும் எங்களிடம் கூறினர். அப்படியும் கூட்டம் கலையாமலும், தடுத்த காவல்துறையினரைப் பொருட்படுத்தாமலும் முன்னேறியபோது காவல்துறை பின்வாங்கி அவர்களை முன்னேற அனுமதித்தது.
மக்கள் மூணாம் மைல் பாலத்தில் இருந்த தடுப்பு அரண்களளைத் தாண்டி முன் செல்ல செல்ல முற்பட்டபோது காவல் படையினர் பெண்கள், குழந்தைகள் என்றெல்லாம் பார்க்காமல் மார்பில் கை வைத்துத் தள்ளினர். மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது.காவல்துறை தாக்கத் தொடங்கியது. இளையோர், முதியோர் என்றெல்லாம் பார்க்காமல் மண்டை ஓடு, கை கால்கள் உடையும் வகையில் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. தடியடியோடு இப்போது கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. மக்கள் சிதறி ஓடிய போதும் எப்படியும் ஆட்சியர் அலுவலகத்தை அடைந்து உட்கார்ந்து விடுவது என ஒரு பகுதியினர் முன்னேறியபோது போலீசார் மீண்டும் பின்வாங்கினர், மக்கள் முன்னேறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை எட்டியபோது எந்த எச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிச் சூடு தொடங்கியது. அப்போது காலை மணி 11.30 இருக்கும்.
இதை மக்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை அவர்கள் பல திசைகளிலும் ஓடத் தொடங்கினர். போலீசார் துரத்தி வந்து சுட்டனர். வழக்கமான சீருடையில் இல்லாத, மஞ்சள் நிற டீசர்ட் அணிந்த படையினர் சுட்டவர்களில் இருந்தனர். இவர்கள் எதிரிகளைக் குறி பார்த்துச் சுடுவதற்குச் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். மிக நவீனமான கொலை ஆயுதமான ஸ்னிப்பர் துப்பாக்கிகள் அவர்கள் கைகளில் இருந்தன கலைந்து சிதறி ஓடிய மக்களைக் கீழே தள்ளி ஏறி மிதித்து லத்திகளாலும் அடித்துக் கைகால்களை உடைத்தனர். .
மக்கள் பயந்தோடி வந்து தங்கள் வீடுக்ளை அடைந்தபின்னும் காவல்துறையினர் ஆயுதங்களுடன் மில்லர்புரம், திரேஸ்புரம் முதலான பகுதிகளில் தொடர்ந்து வந்து சுட்டனர், ஆங்காங்கு நின்று கொண்டு நடந்த கொடுமைகளைப் பற்றிப் பேசிக் கொடிருந்த இளைஞர்களை எல்லாம் அடித்து வேன்களில் ஏற்றி மிதித்துத் துவைத்தனர்., சிறுவர்களாக இருந்தபோதும் கடுமையாக அடிக்கப்பட்டனர், மில்லர்புரத்தில் இருவர் சுடப்பட்டுக் கிழே விழுந்தனர். திரேஸ்புரத்தில் பெரிய பிரச்சினை ஏதும் இல்லாதபோதும் . அங்கு இளைஞர்களைக் குறிவைத்துத் தேடி வந்து கண்ணில் பட்ட இளைஞர்களை எல்லாம் அடித்துக் கைது செய்ததோடு எந்தத் தேவையும் இல்லாமல் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். அருகிலிருந்த மகள் வீட்டிற்கு மீன் கொண்டு சென்ற ஜான்சி (34) எனும் மீனவப் பெண் தலையில் குண்டடிபட்டுச் செத்து வீழ்ந்தார். அவர் போராட்டத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர் என்பது குறிப்பிடத் தக்கது
தொடர்ந்து கடுமையான தேடுதல் வேட்டையும் கைதுகளும் தொடங்கின. பிடிபடாமல் தவிர்க்க ஆண்கள் படகுகளில் ஏறிச் சென்று இரவில் கடலில் தங்கும் நிலை அடுத்த மூன்று நாட்கள் வரை இருந்தது. நள்ளிரவில் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்கள், கைதுகள் நடந்தன. பூட்டியிருந்த கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பயந்து ஒளிந்து கொண்டிருந்த இளஞர்கள் அடித்துக் கொண்டு செல்லப்பட்டனர்.
சுடப்பட்டு இறந்தவர்களின் உடல்களை மனித நேய மக்கள் கட்சியினர் தங்கள் வேன்களில் ஏற்றிக் கொண்டு வந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இரண்டாவது நாள் அண்ணா நகரில் திரண்டிருந்த மக்கள் திரளைக் கலையச் சொல்லிச் சுட்ட போது 22 வயது காளியப்பன் அந்த இடத்திலேயே மரணமடைந்தார், ஆவரது இறந்த உடலை லத்தியால் அடித்தும் மிதித்தும் “நடிக்கிறியா?” எனக் கேட்டுக் காவலர்கள் பகடி செய்தது பெரிய அளவில் ஊடகங்களில் செய்தியானது.
சுற்றியுள்ள கிராமப்புறங்களிலிருந்து வந்து மட்டூரில் திரண்டு ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற மக்களை வழியிலேயே ஆயுதப் படையினர் வந்து அவர்களை அடித்து வேன்களில் ஏற்றிக் கொண்டு சென்றனர். ஆண்களையும் பெண்களையும் தனித்தனியே பிரித்து ஏற்ற முயற்சித்தபோது தாங்கள் மறுத்து ஒரே வேனில்தான் ஏறுவோம் என ஏறிச் சென்றதாக அ.குமரெட்டியபுர இளைஞர் ஒருவர் கூறினார். ரயில்வே கேட்டைத் தாண்டும்போது வாகனத்தின் வேகம் குறைந்தபோது குதித்து மண்டை அடிபட்ட கருப்பசாமி என்பவரையும் பார்த்தோம்.
மே 25 வரை இப்படியான கொடூரமான தேடுதல் வேட்டை தொடர்ந்தது. நாங்கள் வந்த பின்னும் ஆங்காங்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்படுவதாகவும் செய்திகள் வந்தன.
குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள்: நூறுநாள் போராட்டத்தில் முன்னணியில் இருந்த சிலர் தாக்கப்பட்டுள்ளனர். அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்புத் தலைவர் கே. சந்தோஷ்ராஜ் பேரணியில் சக மாணவர்களுடன் வந்து கொண்டிருந்தபோது தலை உடைக்கப்பட்டு இன்னும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ளார். புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தமிழரசன் குறிவைத்துச் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். இவர் தொடர்ந்து போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஜெயராமன். தமிழரசனின் கொலை உறுதியாகக் குறிவைத்துச் செய்யப்பட்டதாகவே கருதப் படுகிறது.
தேடி வந்து தாக்குதல்: திரேஸ்புரம் மீனவர்கள் குறிவைத்துத் தக்கப்பட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்ற முதல் கட்டத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் அன்று மாலை 3 மணி வாக்கில் திரேஸ்புரம் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு அப்படியானதுதான்.. முதல் கட்டத் துப்பாக்கிச் சூடு நடந்தபின் தப்பித்தோடித் தங்கள் பகுதியான திரேஸ்புரத்தில் வந்து துப்பாக்கிச் சூட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது முற்றிலும் பழிவாங்கும் நோக்கிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றுள்ளன. போராட்டத்தில் தீவிரமாக இருந்த இப்பகுதியில் சிலரையாவது கொல்ல வேண்டும் என்றே வந்து கொன்றிருக்கிறார்கள்.. கல்லெறிந்தார்கள், தீ வைத்தார்கள் எனவே சுட்டோம் என்றெல்லாமும் கூடக் காரணம் கற்பிக்க இயலாத தாக்குதல்கள் இவை. மே 22 காலை முற்றுகைக்குக் கூட சென்றிராத ஜான்சி (46) அருகிலிருந்த மகள் வீட்டிற்கு மீன் கொண்டு செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். காலையில் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் கலந்துவிட்டுத் திரும்பி வந்து அங்கு நடந்தவற்றை அங்குள்ளவர்களுடன் பேசிக் கொண்டிருந்த மீனவர் செல்வம் இடுப்பின் வலதுபுறம் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் உள்ளார்.
வேலைக்குச் சென்றிருந்தவர்கள் சுட்டுக் கொலை : மே 22 செவ்வாய்க்கிழமை என்பது ஒரு வேலை நாள். துப்பாக்கிச் சூடு நடந்தது பலரும் வேலைக்குச் சென்று கொண்டிருந்த நேரத்தில். அதையும் சுட்டவர்களும் அதற்கு ஆணையிட்டவர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் போராட்டத்தில் தொடர்பில்லாதவர்களும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இலக்காகினர். பாலிடெக்னிப் படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த பிரின்ஸ்டன் (22) த/பெ கிளாட்வின் இப்போது இப்படித்தான் துப்பாக்கிச் சூட்டில் தன் வலது காலை இழந்துள்ளார். தினம் மில்லர்புரத்திலிருந்த தன் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது போராட்டம் நடந்து கொண்டிருந்ததால் தன் மோட்டார் சக்கிளை சி.ஐ குடோன் அருகே நிறுத்தி வைத்துவிட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தபோது துப்பாக்கிக் குண்டு பட்டுக் கீழே விழுந்தவர் அவர். காலை இழந்ததால் தற்போது சென்னையில் கிடைத்துள்ள ஒரு நல்ல வேலைக்கும் இனி அவர் செல்ல இயலாது. தடியடிக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த சாயர்புரம் செல்வசேகர் (40) தூத்துக்குடியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தவர். அன்று போராட்டத்தை ஒட்டி அந்த நிறுவனம் விடுமுறை அறிவித்ததைத் தொடர்ந்து வீட்டுக்குச் செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த அவரைச் சரமாரியாக லத்தியால் அடித்து வீழ்த்தி ஏறி மிதித்துள்ளனர். அவர் அடுத்த நாள் இறந்தார். அவருடைய தாயும் திருமணமாகாத சகோதரியும் அவரது உழைப்பில்தான் வாழ்ந்து வந்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட அந்தோணி செல்வராஜ் என்பவர் அஜய் ஜோன்ஸ் மற்றும் அம்ரிதா எனும் இரு குழந்தைகளின் தந்தை. ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவர் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் மோட்டார் சைகிளில் வந்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர்கள் விவரம்: 1. ரஞ்சித்குமார் (22), தூத்துக்குடி 2. கிளாஸ்டன் (40) லூர்தம்மாள்புரம், தூத்துக்குடி 3.கந்தையா (55) சிலோன் காலனி, தூத்துக்குடி 4. தமிழரசன் (45), குறுக்குச்சாலை, ஒட்டப்பிடாரம் 5. சண்முகம் (25), மாசிலாமணிபுரம், தூத்துக்குடி 6.மாணவி ஸ்னோலின் (17), தூத்துக்குடி 7. அந்தோணி செல்வராஜ் (35), தூத்துக்குடி, 8. மணிராஜ் (25), தாமோதர நகர், தூத்துக்குடி 9. கார்த்திக் (20) தூத்துக்குடி 10. ஜான்சி (46), திரேஸ்புரம், தூத்துக்குடி, 11. செல்வசேகர் (40), தூத்துக்குடி 12. காளியப்பன் (22), தாளமுத்து நகர், தூத்துக்குடி 13. ஜெயராமன் (45), உசிலம்பட்டி
இது தவிர ஒரு திருமணத்திற்காகப் பரோலில் வந்திருந்த ஆயுள் கைதி பாரத் என்பவர் சென்ற மே 23 அன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது காவல்துறையினரால் அடித்து தூக்கிச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் உருட்டுக்கட்டையாலும் தாக்கப்பட்டுள்ளார். பின் அவர் நீதிமன்ற ஆணையின் பேரில் பாளை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சரியான சிகிச்சை இன்றி ஜூன் 29 இரவு இறந்துள்ளார். அவர் தூக்கிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
மே 25 அன்று கருங்குளம் எனும் பகுதியில் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஒரு அரசுப் பேருந்துக்குத் தீவைக்கப்பட்டது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த திருவைகுண்டம் வள்ளியம்மாள் என்பவர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மே 31 அன்று இறந்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் சித்திரவதை : 22, 23 தேதிகளில் கண் மண் தெரியாமல் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். எவ்வளவுபேர் இவ்வாறு கைது செய்யப்பட்டனர், அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளனர் என்கிற விவரங்கள் சொல்லப்படவில்லை. இதன் விளைவாக அவர்களின் வீட்டார்கள் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லை அவர்களும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனரா எனத் தெரியாமல் கலங்கிக் கிடந்தனர். கொல்லப்பட்ட உடல்கள் பல திருநெல்வேலி மருத்துவமனையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின.
இவ்வாறு பலர் காணவில்லை என்பது குறித்து தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சந்திரசேகர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நடுவர் பகவதி அம்மாள் புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடியில் உள்ள காவல் நிலையங்களில் விசாரணை நடத்துமாறு விலாத்திகுளம் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் காளிமுத்துவேலுக்கு உத்தரவிட்டார்.
அவர் ஆய்வு செய்தபோது வல்லநாடு துப்பாக்கிப் பயிற்சித் தளத்தில் 95 பேர்கள் கடும் சித்திரவதைத் தாக்குதல்களின் மூலம் காயங்களுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எந்த வழக்கு தொடர்பாக அவர்கள் கொண்டுவரப்பட்டு இங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் கேட்டபோது அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் திருதிருவென விழித்துள்ளனர். “அவர்கள் எந்தப் பதிலும் சொல்லவில்லை” என பத்திரிகைகள் இது குறித்து எழுதின (தினத்தந்தி நெல்லைப் பதிப்பு, மே 26), விசாரணை செய்த நடுவர் கண்டித்த பின் அவர்களில் 30 பேர்கள் விடுவிக்கப்பட்டு மீதி 65 பேர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
முதன்மை நீதிபதி சாருஹாசினி வழக்குரைஞர்களின் வேண்டுகோளை ஏற்று, உடனடியாக உயர்நீதிமன்றப் பதிவாளருடன் தொடர்புகொண்டு, அவரது அனுமதியுடன் அப்போதே வழக்கை விசாரித்து உடனடியாக அனைவரையும் பிணையில் விடுவித்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் மேலும் 62 பேர்களைக் கொண்டு வந்து ஆஜர் படுத்தியுள்ளனர். அவர்களை சொந்த ஜாமீனில் விடுவிப்பதற்காக நீதிபதி சாருஹாசினி அவர்கள் இரவு 12 மணிவரை நீதிமன்றத்திலேயே காத்திருந்தும் அரசு வழக்குரைஞர் ஒத்துழைக்க மறுத்துள்ளார். அவர் ஆஜர் ஆகாததை ஒட்டி வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. நீதிபதிகள் அண்ணாமலை, சாருஹாசினி, கமலம்மாள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கலில் மிக்க கரிசனத்துடன் நடந்து கொண்டதைப் பலரும் குறிப்பிட்டனர்.
இப்போதும் சுமார் 30 பேர்கள் வரை விடுதலை செய்யப்படாமல் சிறையில் உள்ளதாக நேற்று (ஜூலை 4) தூத்துக்குடியில் விசாரித்தபோது ஒரு மனித உரிமை ஆர்வலர் குறிப்பிட்டார்.
இணையம், ஏ.டி.எம் சேவைகள் முடக்கம்: எங்கள் குழு சென்ற போது அங்கு இணைய சேவை செயல்படவில்லை. அன்று (மே 27) நள்ளிரவில்தான் நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இணைய சேவையை உணர முடிந்தது. மே 22 தொடங்கி தூத்துக்குடி மட்டுமின்றி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் இணைய சேவை நிறுத்தப்பட்டது. நீதிமன்றக் கண்டனத்துக்குப் பின் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மட்டும் இணைய சேவைகள் அளிக்கப்பட்டன. தூத்துக்குடி நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 72 ஏ.டி.எம் களும் வேலை செய்யவில்லை. ‘க்ரெடிட் கார்ட்’ பயன்பாடும் சாத்தியமில்லாமல் ஆனது. மேற்படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய மாணவர்கள் சொல்லொணாத் சிரமங்களுக்கு ஆளானதைப் பத்திரிகைகள் கண்டித்தன.
மே 27 காலைதான் 144 தடை நீக்கப்பட்டது. எனினும் ஆங்காங்கு செக் போஸ்டுகள், போலீஸ் கெடுபிடிகள் குறையவில்லை. எங்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டுப் பைகள் முதலியன சோதனை செய்யப்பட்டன. மே 26 வரை வெளியார்கள் சென்று வருவதில் கடும் கெடுபிடிகள் இருந்துள்ளன. வழக்குரைஞர்கள் ஊருக்குள் சென்று வருவதற்கான ஆணையை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளதன் விளைவாக அவர்களின் நுழைவை மட்டும் தடுக்க இயலவில்லை.
தலைவர்கள் கைது: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மே 25 அன்று தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது அவரும் ஆதரவாளர்களும் என மொத்தம் ஏழு பேர்கள் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடந்த அன்றே இயக்குநர் கௌதமனைக் காவல்துறையினர் இழுத்துச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிய காட்சியத் தொலைக்காசிகள் காட்டின. மே 31 அன்று நடிகர் ரஜினி வீட்டை முற்றுகை இடுவது எனக் கூறிச் சென்ற ‘மக்கள் ஜனநாயக் கட்சி’ தலைவர் கே.எம் ஷெரீஃபும், அவரது ஆதரவாளர்கள் 30 பேர்களும் கைது செய்யப்பட்டு இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜூன் 1 அன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஆய்வு செய்ய அங்கு சென்ற TNCRO என்கிற ஒரு மனித உரிமைக் குழு கைது செய்யப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் வீடு புகுந்து தேடல், மக்களை உளவு பார்ப்பதெற்கென வானில் பறக்கும் குட்டி விமானங்கள், 6000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் என அந்தக் கடலோரச் சிறு நகரே எதோ எதிரி நாட்டு இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நகரம்போல இருந்துள்ளது.
மருத்துவமனையில் உள்ளோர்: தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நாங்கள் சென்றபோது (மே 27) ஓரளவு குணமடைந்தோர் அனுப்பப்பட்டு அங்கு அப்போது சுமார் 56 பேர்கள்தான் இருந்தனர். மருத்துவமனைக்கு வந்து அனுமதிக்கப்பட்டவர்கள் 104 பேர்கள். அவர்களில் 17 பேர்கள் ‘ஆபத்தான’ நிலையில் இருந்தவர்கள். வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த பாதிரியார் ஜெயசீலன் (70) தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். நாங்கள் சென்றபோது அரசு மருத்துவமனை ICU வில் துப்பாக்கிச் சூட்டில் காலை இழந்த இளைஞர் பிரின்ஸ்டன் வைக்கப்படிருந்தார். IMW வில் ராமசந்திரன் (24) த/பெ மாரிமுத்து, ஜஸ்டின் (29) த/பெ மரிய ஃப்ரான்சிஸ் என இருவர் இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு ‘டயாலிசிஸ்’ நடந்துகொண்டிருந்தது. இருவரும் ஓட்டுநர்கள். இருவரும் ஆட்சியர் அலுவலகம் முன் மே 22 காலை 11.30 மணி வாக்கில் நடைபெற்ற தாக்குதலில் உயிருக்கு ஆபத்தாகக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள். பணியில் இருந்த மருத்துவர்கள் அவர்கள் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டதாகக் கூறினர். சற்று ஆபத்தான நிலையில் இருந்த மூவர் மதுரையில் சிகிச்சைக்காக அனுப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் அரசு மருத்துவமனையிலும் மற்ர இருவரும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
மருத்துவமனை உயரதிகாரிகளைச் சந்தித்தபோது அவர்கள் மூவரும் தங்களின் பெயர்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். புகழ்பெற்ற தனியார் மருத்துவ மனைகளில் உள்ளதைக் காட்டிலும் சிறந்த மருத்துவத்தைத் தாங்கள் அளித்துள்ளதாகவும், பார்க்க வருகிறவர்கள் இப்படிக் கூட்டம் கூட்டமாக வருவதுதான் பிரச்சினை எனவும் கூறினர்.
பாதிக்கப்பட்டுச் சிகிச்சைக்கு வந்திருந்தவர்களும் மருத்துவர்கள் நல்ல முறையில் பணியாற்றுவதாகக் கூறினர். குண்டு மற்றும் தடியடிக் காயங்களுடன் வருபவர்களைப் பதிவு செய்யும் AR எனப்படும் விபத்துப் பதிவேட்டில் போலீஸ் தாக்குதலில்தான் இப்படி ஆனது எனப் பதிவு செய்கிறீர்களா எனக் கேட்டபோது, அப்படிப் பதிவது வழக்கமில்லை எனவும் தாக்கியவர்கள் தெரிந்தவர்களா, தெரியாதவர்களா (Known or Unknown) என்று மட்டுமே பதிவு செய்வதுதான் வழக்கம் எனவும் கூறினர்.
:பாராட்டுக்குரிய நீதித்துறை: உள்ளூர் மருத்துவர்களைப் போலவே, தூத்துக்குடி வழக்குரைஞர்களும், மாவட்ட நீதித்துறையும் மிகவும் இரக்கத்துடனும் கடமை உணர்வுடனும் செயல்பட்டதாக மிக்க நன்றியுடன் எல்லோரும் கூறினர். குறிப்பாகக் கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப் படாமல் துப்பாக்கிப் பயிற்சியகத்தில் அடைத்து வைக்கப்பட்ட மக்களை தேடிக் கண்டுபிடித்து வெளிக் கொணர்ந்ததில் நீதித்துறை மிகுந்த பாராட்டுக்குரிய பணியைச் செய்துள்ளது. குறிப்பாக நீதியரசர்கள் அண்ணாமலை, சாருஹாசினி, கமலம்மாள் ஆகியோரை மக்கள் குறிப்பிட்டுச் சொல்லினர்.
இழப்பீடு : வழங்கப்பட்டுள்ள இழப்பீடுகள் மற்றும் குவிக்கப்பட்ட படைகள் குறித்து அரசுத் தரப்பில் சொல்லப்படுவது:
பாதுகாப்பு: டி.ஜி.பி விஜயகுமார் தலைமையில் 4 DIG, 8 IG க்கள்,5,000 போலீஸிருந்தனர் மேலும் கமாண்டோ படைகள் உட்பட இன்னும் 1000 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர் எனக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் அட்வகேட் ஜெனெரல் செல்லபாண்டியன் மே 25 அன்று நீதிமன்றத்தில் சொன்னது: காயம் பட்டவர்கள் மொத்தம் 72 பேர். இதில் 52 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும். ஒருவர் மதுரையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.. 52ல் 26 பேர்களுக்குத் தலா 3 லட்சமும், மீதி 26 பேர்களுக்கு தலா 2 லட்சமும் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள 10 இலட்சம் ரூ என்பது அதிகப்படுத்தப்படும்.
கணக்கில் வராத காயம்பட்டவர்கள்: காயம்பட்டவர்கள் என அரசுத் தரப்பில் சொல்லப்படும் எண்ணிக்கை மிகக் குறைவு. அது மட்டுமல்ல. காவல்துறை தாக்குதலில் படுகாயமுற்ற பலர் அதை வெளிப்படுத்தினால் தங்கள் மீதும் வழக்குப் போடுவார்கள் என அஞ்சி அவற்றை வெளிப்படுத்தாமல் சொந்த முறையில் சிகிச்சை செய்துகொண்டு உள்ளனர் என்பதை நாங்கள் அறிந்தோம். காயம் பட்டவர்கள் வெறும் 72 பேர்கள்தான் எனச் சொல்வது முழுப் பொய். இதற்கிடையில் சில சமூக ஆர்வலர்கள் அப்படி அஞ்சி வெளியே சொல்லாமல் உள்ளவர்களை அணுகி அதை வெளிப்படுத்துமாறு வேண்டிக் கொள்வதாகவும் அறிகிறோம்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரைச் சந்திக்க முயன்றபோது: துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரியைச் சந்தித்தபோது அவசரமாக அவர் புறப்பட்டுக் கொண்டிருந்தபோதும் நாங்கள் கூறியவற்றைக் கவனத்துடன் கேட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணையால் எந்தப் பயனும் இல்லை என்பதை நாங்கள் சொன்ன போது, அது தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது எனக் கூறிய அவர் “எனினும் நீங்கள் அவற்றை ஒரு மனுவாக எழுதித் தந்தால் எனது பரிந்துரையுடன் அரசுக்கு அனுப்பி வைக்கிறேன்” எனக் கூறினார். FIR ல் துப்பாக்கிச் சூடு நடத்த ஆணையிட்டது துணைத்தாசில்தார்கள் என்பதை நாங்கள் சுட்டிக் காட்டியபோது நிர்வாக நடுவர்களாக (Executive Magistrates) துணைத் தாசில்தார்களை நியமிக்க இடமுண்டு என்றார். துப்பாக்கிச் சூடு தேவையற்றது என நாங்கள் சொன்னபோது கேட்டுக் கொண்ட அவர் “போராட்டக்காரர்கள் மத்தியிலும் அன்று வன்முறைகள் இருந்ததை மறுக்க முடியாது” என்றார்.
அடுத்து காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) திரு. முரளி ரம்பாவை நாங்கள் சந்திக்கச் சென்ற போது சாதிப்பதாகச் சொல்லிக் காத்திருக்கச் சொன்னார்.. எனினும் அதற்குள் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆணையிட்டது உதவித் தாசில்தார்கள்தான் என்பது குறித்த எங்களின் நேர்காணல்கள் பல சேனல்களில் ஒளிபரப்பாகத் தொடங்கின. சந்திப்பதாகச் சொன்ன கண்காணிப்பாளர் சந்திக்க முடியாது எனச் சொல்லிவிட்டார். சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து திரும்பினோம். காவல்துறை அத்துமீறல்கள் குறித்துக் கடும் அதிருப்தி மக்கள் மத்தியில் நிலவும் சூழலில் மக்கள் முன் உரிய விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு உயர் அதிகாரி அப்படி நடந்து கொண்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பேரா. ஆ.சிவசுப்பிரமணியன் சுட்டிக்காட்டும் ஒரு முக்கிய உண்மை:: தூத்துக்குடி வரலாற்றை ஆழமாக ஆய்வு செய்து எழுதியுள்ள பேராசிரியர் சிவசு அவர்கள் ஸ்டெர்லைட் ஆலை இன்று தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள எல்லாத் தரப்பு மக்களையும் பாதிப்பதை விரிவாக விளக்கினார். தொடக்கத்தில் ஆலைக் கழிவுகளால் மீன் வளம் குறைந்ததை ஒட்டி மீனவர்களே இது குறித்துக் கவலைப்பட்டனர். ஸ்டெர்லைட் நிர்வாகமும் கிராமத்தில் உள்ள விவசாயிகள் முதலானோருக்கு சிறிய ஒப்பந்தங்கள், தற்காலிக வேலைகள் முதலியவற்றை அளித்து மக்களைப் பிளவுறுத்தும் முயற்சியையும் மேற்கொண்டது. அடுத்த சில ஆண்டுகளில் நிலத்தடி நீர் மாசுபட்டது, பல்வேறு வழிகளில் சுற்றுச் சூழல் அழிந்தது ஆகியன எல்லா மக்களையும் பாதித்ததனால் இப்போது கடலோர மக்கள், விவசாயிகள், வணிகர்கள், அடித்தள மக்கள் என அனைத்துத் தரப்பினரும் இன்று ஆலைக்கு எதிராக ஒருங்கிணைந்துள்ளனர் என்றார். எனவேதான் சில சமூக விரோத சக்திகள் சாதி, மதம் கடந்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் எற்பட்டுள்ள இந்த ஒற்றுமையை அழிக்கப் பார்க்கின்றனர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பனிமயமாதா ஆலயம் அருகில் மக்கள் கூடிப் போராட்டத்திற்குப் புறப்பட்டது குறித்துப் பரப்பப்படும் பிளவுப் பிரச்சாரங்கள்: மே 22 காலை பனிமய மாதா ஆலயத்தில் மக்கள் திரண்டு அங்கிருந்துதான மக்கள் சென்றதாகவும் அந்த வகையில் கலவரத்திற்கு கிறிஸ்தவ மதத் தூண்டுதல் காரணம் என நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதே என இங்கு எல்லோராலும் மதிக்கப்படும்பாதிரியார்கள் எக்ஸ்.டி.செல்வராசு ,சுந்தரி மைந்தன் ஆகியோரைக் கேட்டபோது அவர்கள் அதை மறுத்தனர். இந்தப் போராட்டம் மூன்று மாதங்களுக்கு மேலாக நடக்கிறது. மாதா கோவில் அருகே பெரிய வெளி இருப்பதால் கூடங்குளம் போல மாதா கோவிலுக்கு அருகில் பந்தலிட்டு போராட்டக்காரர்கள் தினந்தோறும் கூடினர். கிறிஸ்தவர்கள் என்றில்லாமல் எல்லா மதத்தினரும் அதில் இருந்தனர். அங்குள்ள பங்கு குருவின் சம்மதம் இன்றி அது நடந்தது. அவர் தொடர்ந்து அவர்களை அங்கு கூடக் கூடாது என வற்புறுத்திக் கொண்டே இருந்தார். கூடங்குளத்தில் அரசு கிறிஸ்தவ சர்ச் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர்கள் மறந்துவிடவில்லை. எனவே அங்கு கூடவேண்டாம் என மக்களை பங்கு குரு தொடர்ந்து கேட்டுக் கொண்டார் என்பதைக் குறிப்பிட்டார்கள்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் மாவட்ட ஆட்சியர் கூட்டிய கூட்டத்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி எல்லாத் தரப்புப் பிரதிநிதிகளும் இப்படியான பிரச்சாரத்தை வெளிப்படையாகக் கண்டித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
எமது பார்வைகள்
1.துப்பாக்கிச் சூடு எந்த முறையான அனுமதியும், எச்சரிக்கையும் இன்றி நடத்தப்பட்டுள்ளது. அருகில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை என்பதைக் காரணம் காட்டி இன்று இரண்டு துணைத்தாசில்தார்களும் கோட்டக் கலால்துறை அதிகாரி ஒருவரும் சுடுவதற்கு ஆணையிட்டதாக ‘முதல் தகவல் அறிக்கைகள்’ (FIR) தயாரிக்கப்பட்டுள்ளன. 22-05-2018 ல் தூத்துக்குடி (சிப்காட்) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள FIRல் (எண் 191/2018) தனி துணைவட்டாட்சியர் (தேர்தல்) சேகர் என்பவர் சுடுவதற்குத் தான் ஆணையிட்டதாகக் கூறியுள்ளார். அதே நாளில் தூத்துக்குடி (வடக்கு) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள FIRல் (எண் 219/ 2018) துணை வட்டாட்சியர் கண்ணன் என்பவர் சுட ஆணையிட்டதாக ஒப்புதல் அளித்துள்ளார். மே23 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட FIR ல் (எண் 312/2018) சுடுவதற்கு ஆணையிட்டடது தூத்துக்குடி கோட்டக் கலால் அலுவலர் சௌ. சந்திரன் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஶ்ரீவைகுண்டம் வட்டவழங்கல் அலுவலராகப் பணியாற்றிக் கொண்டுள்ள கோபால் எனும் துணைத் தாசில்தார் தன் பெயரில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஒரு FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்தி பரவுகிறது எனப் புகார் செய்துள்ளார். அதை ஒட்டித் தூத்துக்குடி மாவட்ட வருவாய்துறை அலுவலர் சங்கத் தலைவர் செந்துர் ராஜன் இப்படித் துணைத் தாசில்தார்களின் பெயரில் பொய்யான FIR கள் தயாரிக்கப்படுகின்றன என ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மற்ற FIR களும் பொய்தானா என நாங்கள் செந்துர்ராஜனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படித்தான் செய்திகள் பரவுகின்றன, அந்தத் துணைத் தாசில்தார்களும் தொடர்பில் இல்லை என்றார். அவர்கள் பயந்து கிட்டத்ட்ட தலைமறைவான நிலையில் உள்ளனர். நூறு நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் திட்டமிட்ட ஒரு பேரணியில், மக்கள் தடையை மீறிப் பேரணி நடத்திக் கைதாவது என முடிவு செய்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லாமல் போனது என்பதும் இன்று பொய்யான FIR கள் தயாரிக்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு எழுவதும் தமிழகக் காவல்துறை மீது உள்ள கடைசித் துளி நம்பிக்கையையும் அறச் செய்கிறது. 22ம் தேதி துப்பாக்கிச் சூட்டிற்கு 27ந்தேதி வரை யார் சுடுவதற்கு அனுமதி அளித்தனர் என்பது மக்கள் முன் விளக்கப்படவில்லை. கேள்விக்குத் தமிழக முதல்வர் மழுப்புகிறார் எனப் பத்திரிகைகள் எழுதின. துணைத் தாசில்தார்களை நிர்வாக நடுவர்களாக நியமிக்கலாம் என 1973ல் ஒரு அரசாணை உள்ளது என்றாலும் இப்படித் தேர்தல் துறை, கலால்துறை முதலியவற்றில் உள்ளவர்களை எல்லாம் நடுவர்களாக நியமிப்பது சரியா? மக்களைக் கொல்வதற்கான ஆணை இடலில் இத்தனை பொய்கள் உ:ள்ளதற்கு அரசு முறையான விளக்கம் தர வேண்டும்.
- Tamilnadu Police Standing Order and Police Manual ல் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன் கடைபிடிக்கப்பட வேண்டிய 6 விதிகளில் ஒன்று கூட தூத்துக்குடியில் கடைபிடிக்கப்படவில்லை. மக்களுக்கு அச்சமூட்டிக் கலைப்பது மட்டுமே துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் எனபது அந்த நெறிமுறைகளின் அடிநாதமாக உள்ளது. சட்டவீரோதமாகக் கூடியுள்ளீர்கள் என எச்சரிக்கை செய்வது, கண்ணீர்ப்புகை, தண்ணீரைப் பீச்சி அடித்து விரட்டுதல், சுடப்போவதாகவும், மரணங்கள் நேரலாம் எனவும் எச்சரித்தல், வானை நோக்கிச் சுடுதல் என்கிற எதுவும் கடைபிடிக்கப்படாமலேயே அன்று மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வழக்கமான போலீஸ் சீருடையில் இல்லாமல் வேறு சீருடையுடன் கூடிய, மக்களைக் கொலை செய்வதற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்ட, படையினர் அங்கு ஸ்னிப்பர் துப்பாக்கிகளுடன் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் மக்களைக் குறி பார்த்துச் சுட்டுள்ளனர், முழங்காலுக்குக் கீழ் என்பதாக அல்லாமல் பெரும்பாலும் மார்புக்கு மேல் மக்கள் சுடப்பட்டுள்ளனர். மக்களைக் கண்காணிப்பதற்கெனக் குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இணையம் முதலான மக்கள் தொடர்புச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த 5 நாட்கள் வெளியார்கள் யாரும் தூத்துக்குடிக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. மக்களை ஏதோ எதிரி நாட்டு ஆயுதம் தாங்கிய படையினர் என்பதைப் போல அரசும் காவல்துறையும் கையாண்டுள்ளன.
- இப்படிப் 13 பேர்கள் இன்று தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.. சிலர் நிரந்தர முடமாக்கப்பட்டுள்ளனர். பரோலில் வந்த சிறைக் கைதி ஒருவரும் போலீஸ் தாக்குதலின் பாதிப்பால் செத்துள்ளார். அப்பாவிகள் வீடுகளில் சென்று கைது செய்யப்பட்டு யாருக்கும் சொல்லாமல் வல்லநாடு காவல்துறை பயிற்சியகத்தில் அடைத்து வைத்துத் துன்புறுத்தப்ப பட்டுள்ளனர். நீதிமன்றம் தலையிட்டு விளக்கம் கோரியபோது பதிலளிக்க இயலாமல் திணறியுள்ளனர். நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின்னரே அவர்கள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
- இது திடீரென நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூடு அல்ல. முன்கூட்டி மேல்மட்டத்தில் திட்டமிட்ட ஒரு நடவடிக்கை. கார்பொரேட்கள் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு எதிராக பாதிக்கப்படுகிற மக்கள் போராடி அவற்றை நிறுத்துகிற முயற்சிகள் இனி எங்கும் நடக்கக் கூடாது எனப் பாடம் ஒன்றைக் கற்பிக்கும் நோக்குடன் இந்தத் துப்பாக்கிச் சூடு மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழக மக்கள் அனைவருக்கும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்கிற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இது. பதவியிலிருந்த ஆட்சியர் அன்று தலைமையகத்தில் இல்லாமல் போனது என்பதெல்லாம் இப்படியான துப்பாக்கிச் சூட்டை ஒட்டி முன் கூட்டித் திட்டமிட்ட நடவடிக்கைகள்தான். மத்திய அரசின் ஒப்புதலும் இதற்கு இருந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்கத் தேவையானால் மத்திய படைகளை அனுப்பத் தாங்கள் தயார் என மத்திய உள்துறைச் செயலர் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.
- இந்த நோக்கில்தான் மே 22 அன்று போராடும் மக்கள் சீண்டப்பட்டுள்ளனர். அவர்கள் அமைதியாக வந்து ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து விடக்கூடாது என்பதில் அரசும் காவல்துறையும் குறியாக இருந்துள்ளது. நூறு நாள் போராட்டத்தின் தொடக்கத்தில் மக்கள் ஒரு பூங்காவுக்குள் நுழைய முயற்சித்தபோதும் இப்படித்தான் விரட்டப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஜல்லிகட்டுப்[ போராட்டத்திலும் அவ்வாறே இறுதியில் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு மக்கள் விரட்டப்பட்டனர். இம்முறை வெறுமனே அப்படி விரட்டினால் போதாது என அரசு முன்கூட்டித் தீர்மானித்துத்தான் ஸ்னிப்பர் துப்பாக்கிகளுடன் குறி பார்த்துச் சுடுபவர்களை நிறுத்தி வைத்திருந்தது.
- இப்படியான போராட்டங்களில் மக்கள் ஆத்திரம் கொண்டு காவல்துறை வாகனங்களை எரிப்பது ஏற்கத் தகாததுதான் என்றபோதிலும் அது எங்கும் நடக்கக் கூடிய ஒன்றுதான். அது, இப்படியான துப்பாக்கிச் சூடுகள் இல்லாமலேயே காவல்துறையால் சமாளிக்கப்படக் கூடிய ஒன்றுதான். வானை நோக்கிச் சுடுதல், அப்படியே சுட்டாலும் ஓரிருவரை மட்டும் முழங்காலுக்குக் கீழே சுடுதல் முதலான நடவடிக்கைகளை மேற்கொண்டு கூட்டத்தைக் கலைப்பதே வழமை.. இந்தப் பின்னணியிலிருந்து பார்க்கும்போதுதான் மக்கள் வைக்கும் குற்றச்சாட்டையும் நாம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டி உள்ளது. . சீருடை இல்லாத காவலர்கள் ஏராளமானோர் நிறுத்தி வைக்கப்பட்டு, கல்லெறிதல், வாகனங்களுக்குத் தீ மூட்டல் முதலானவற்றை அவர்கள் மேற்கொண்டனர் என மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆட்சியர் அலுவலகம் உள்ளே மக்கள் நுழைவதற்கு முன்பாகவே தீப்புகை எழும்பியுள்ளது என்று மக்கள் கூறுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- மக்கள் முன்கூட்டித் திட்டமிட்டுக் கலவரம் செய்யும் நோக்கில் சென்றனர் என்கிற குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படிக் கலவரம் செய்யச் செல்கிறவர்கள் பிள்ளை குட்டிகளுடன் ஒரு திருவிழாவிற்குச் செல்வது போலச் சென்றிருக்க மாட்டார்கள்.. கொடூரமாக மண்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது பள்ளி மாணவி ஸ்னோலின் தன்குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார். ஸ்னோலினுடைய தாய் மட்டுமின்றி அவரது அண்ணன், அண்ணன் மனைவி, அவர்களின் 2 வயது மற்றும் 6 மாதக் குழந்தைகள் எனக் குடும்பமே அங்கு வந்துள்ளது. இப்படி நிறையச் சொல்லலாம்.
- தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் மக்களுடன் கலந்து உள்ளே சென்றனர் என்பதையும் நாங்கள் ஏற்கவில்லை. “மக்கள் அதிகாரம்”, “புரட்சிகர இளைஞர் முன்னணி” முதலான அமைப்புகளின் உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்தனர் என்ற போதிலும் அவர்கள் தீவிரவாதிகளோ ஆயுதம் தாங்கிப் போராடுபவர்களோ அல்லர். அவர்கள் மிகவும் வெளிப்படையாக இயங்கி சமூக அநீதிகளைத் தட்டிக் கேட்கும் அமைப்பினர். அவர்களில் ஒருவரான தமிழரசனைக் குறி பார்த்துப் போலீசார் சுட்டுள்ளனர். கூட்டத்தில் தீவிரவாதிகள் இருந்தனர் எனச் சொல்வதற்காகவே அப்படி அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
9 திரேஸ்புரத்தில் மாலை மூன்று மணி அளவில் அருகிலுள்ள தன் மகள் வீட்டிற்கு மீன் கொண்டு சென்றுகொண்டிருந்த ஜான்சி (46) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது பெயர் வினிதா என்று காவல்துறை முதலில் பதிவிட்டுள்ளது. அவரது வீட்டார்கள் சென்று அடையாளம் காட்டியபின் அவசரமாக ஜான்சி எனப் பெயரை மாற்றி ‘மெமோ’ பதிவு செய்துள்ளனர். சென்ற 28 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவர்களின் குடும்பத்தார்களுக்கு சம்மன் அனுப்பப் பட்ட போது அவர் பெயர் வினிதா என்று குறிப்பிடப் பட்டுள்ளது (தினத்தந்தி, நெல்லைப் பதிப்பு, 28-05-2018, பக்.2). காவல்துறையின் ஏராளமான முறை மீறல்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இது வெறும் அலட்சியமா இல்லை வினிதா என வேறு யாரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்களா என்றெல்லாம் ஐயம் உருவாகிற அளவிற்கு இன்று காவல்துறை நடந்து கொள்கிறது.
- மக்கள் கல்லெறிந்தது, அரசுச் சொத்துக்களை எரித்தது முதலான குற்றச்சாட்டுகள் ஆக்கியவற்றிற்கான FIR ம், காவல்துறையினர் சுட்டுக் கொன்றதற்கான IPC 176 பிரிவிலான FIR ம் தனித் தனியே போடப் பட்டிருக்க வேண்டும். என்கவுன்டர் துப்பாக்கிச் சூடுகளில் மக்கள் கொல்லப்படும்போது அந்த அதிகாரிகள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற ஆணை இங்கும் கடைபிடிக்கப்பட வேண்டும்
- துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் தூத்துக்குடியில் கன்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகள் ககன்தீப் சிங்,டேவிதார் மற்றும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் சென்ற மே 26 அன்று கடலோர மக்களுக்கு எனத் தனியாகவும், வணிகர்களுக்கெனத் தனியாகவும் அமைதிக் கூட்டங்களை நடத்தியுள்ளார். இது இன்று போராடும் மக்களை கிறிஸ்தவர்கள் எனவும் இந்துக்கள் எனவும் பிரிக்கும் மதவாத சக்திகளுக்குத் துணை போகும் ஒரு செயல். எல்லா தரப்பு மக்களும் தம்மைப் பாதிக்கும் ஒன்றில் சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்று சேர்ந்துள்ள நிலையில் அந்த ஒற்றுமையைச் சிதைப்பதற்காக மேற்கொள்ளப்படும் இம்முயற்சியை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சில மதவாத சக்திகள் இத்தகைய பிரச்சாரத்தைச் செய்து கொண்டுள்ளபோது இந்த உயர் அதிகாரிகள் இவ்வாறு மக்களைப் பிரிப்பதன் பொருள் என்ன? இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினை எல்லோருக்கும் போதுவானது. இரண்டு தரப்பு மக்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல இது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் கூட மீனவர்கள் மூவர்; நாடார் சமுதாயத்தவர் நால்வர், பிள்ளைமார் இருவர்; நாயக்கர் ஒருவர், ஆதி திராவிடர் இருவர் (நக்கீரன் 31:15, பக்.6) என அனைத்துச் சமூகத்தினரும் உள்ளனர். அனைத்து மக்களுக்கும் ஒரு கார்பொரேட்டுக்கும் இடையிலான பிரச்சினையை ஏதோ மத மோதல் பிரச்சினை போலக் கையாண்டதற்கு கண்காணிப்புக் குழுவில் இருந்த உயரதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.
- போராட்டத்தில் வெளியார்கள் (outsiders) புகுந்து விட்டதாக)வும், அதுவே வன்முறைகளுக்குக் காரணம் எனவும் ஒரு மதிக்கத்தக்க ஊடகம் எழுதியது வருந்தத் தக்கது. தமிழக மக்கள் இன்று காவிரி நீர்ப் பிரச்சினை தொடங்கி, ஹைட்ரோகார்பன், அணு உலை வரை பலவகைகளிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்த கவலை மக்களுக்கு இருப்பது இயல்பு. கல்பாக்கம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அது சென்னை மக்களையும் பாதிக்கும். இந்நிலையில் இத்தகைய போராட்டங்களில் மக்களை வெளியார்கள் X உள்ளூர் மக்கள் (Outsiders X Insiders) என்றெல்லாம் பிரித்து இருமை எதிர்வுகளை (binary oppoositions) உருவாக்கி நிறுத்தும் மொழி விளையாட்டு வருந்தத் தக்கது. அரசும் காவல்துறையும் மக்கள் மத்தியில் சமூக விரோத சக்திகள் புகுந்து விட்டன எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தனர். யார் அந்தச் சமூக விரோதிகள் என அவர்கள் இதுவரை அடையாளம் காட்டவில்லை. ‘மக்கள் அதிகாரம்’, ‘புரட்சிகர இளைஞர் முன்னணி’ முதலான அமைப்புகள் மிகவும் வெளிப்படையாகவும், சட்டபூர்வமாகவும் இயங்குபவை. அவர்கள் ஆயுதப் போராட்டங்களை மேற்கொள்வதோ, தலைமறைவாக இயங்குவதோ கிடையாது. அப்படியான நிலையில் அவ்வமைப்புகளை இவ்வாறு முத்திரை குத்துவதும், கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி ஒடுக்க முயற்சிப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேபோல ‘தமிழக வாழ்வுரிமைக் கட்சி’, ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ ‘மக்கள் அதிகாரம்’, ‘புரட்சிகர இளைஞர் முன்னணி” முதலான மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து ஆதரித்துவரும் அமைப்பினரும் இன்று அதிக அளவில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
- தூத்துக்குடி அரசுமருத்துவ மனை மருத்துவர்கள் வழக்குரைஞர்கள் மாவட்ட நீதிபதிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்
கோரிக்கைகள்
1.இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூ இழப்பீடு தர வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவரின் தகுதிக்கு ஏற்ற நிரந்தர அரசுப் பணி அளிக்கப்பட வேண்டும்.
2.காயம்பட்டவர்களுக்கு ரூ 20 இலட்சம் இழப்பீடு அளிப்பதோடு முழு மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும்.
- இது தொடர்பாக மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும்.
- சம்பவம் அன்று பதவியில் இருந்த ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தூத்துத்துக்குடி ‘சிப்காட்’ காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) செல்வநாகரத்தினம் ஆகிய இருவரும் மிகவும் கொடுரமாக மக்களைத் தாக்கினர் என்பதை மக்களில் பலரும் எங்களிடம் கூறினர். இவர்கள் இருவரும் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் எனவும் கூறினர். அவர்கள் உடனடியாக தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்களின் சொத்து விவரங்கள் முதலியன விசாரிக்கப்பட வேண்டும். நியமிக்கப்படும் விசாரணை ஆணையமும் இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்.
- ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணையம் கலைக்கப்பட்டு பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஸ்னிப்பர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது, சீருடை இல்லாதோர் சுடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது, குறிப்பான இயக்கத்தினர் குறி வத்துச் சுடப்பட்டுள்ளனர் எனும் குற்றச்சாட்டு ஆகியன விசாரணையில் உள்ளடக்கப்பட வேண்டும். தாங்கள் சுட உத்தரவிட்டதாகப் பொய்கூறச் சொல்லி வருவாய்த் துறை அதிகாரிகள் வற்புறுத்தப்பட்டதாகவும், அவர்களுக்குத் தெரியாமலேயே இப்படியான பொய் FIR கள் போடப்பட்டது பற்றிய குற்றச்சாட்டும் விசாரணையில் உள்ளடக்கப்பட வேண்டும்.
- ‘தமிழக வாழ்வுரிமைக் கட்சி’ தலைவர் வேல்முருகன், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர், ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ தலைவர் கே.எம்.ஷெரிஃப் முதலானோர் போராட்டத்தை ஆதரித்ததற்காக இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இயக்குநர் கௌதமன் முதலானோர் உள்ளிட்ட இப் போராட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அனைவர் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும்..
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதை ஒட்டி அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு உரிய இழப்பீடுகளை வேதாந்தா நிறுவனத்திடமிருந்து அரசு பெற்றுத் தர வேண்டும். வேலை இழந்தவர்களின் மறுவாழ்வுக்கும் மாற்று வேலைவாய்ப்புகளுக்கும் அரசு உதவ வேண்டும்.
- இத்தனைக்கும் பின்னாவது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது வரவேற்கத் தக்கதுதான் எனினும் இதற்காகத் தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வலுவாக இல்லை என்கிற கருத்தைச் சட்ட வல்லுனர்கள் முன்வைத்துள்ளனர். ஓரு ஆலையை மூடும்போது எத்தகைய விதி மீறல்களுக்காக அது மூடப்படுகிறது, அந்த விதிமீறல்கள் எந்த வகையில் மக்களுக்கும் இயற்கைக்கும் கேடாக உள்ளன என்பது விரிவாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய விளக்கங்கள் இந்த ஆணையில் இல்லை. முன்னதாக இந்த ஆலையை மூடுவது தொடர்பாக வழக்கு நடந்தபோது நீதிபதிகள் தர்மாராவ், பால் வசந்தகுமார் ஆகியோர் விரிவாக ஆய்வு செய்து எத்தகைய விதிமீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை அவர்கள் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர். அவை இந்த ஆணையில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்., இந்த வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒன்று என்பதால் இப்படியான பிரச்சினைகளில் வல்லுனர்களாக உள்ள வழக்குரைஞர்களின் ஆலோசனையையும் பெற்று அதையும், முன் கூறிய தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விதி மீறல்களையும் உள்ளடக்கிக் கூடுதல் அரசாணை ஒன்றை அரசு உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும். வேதாந்தா முந்திக்கொள்ளுமுன் தமிழக அரசு இதைச் செய்ய வேண்டும்.
தொடர்புக்கு : அ.மார்க்ஸ், 3/5, சாஸ்திரி நகர், முதல் குறுக்குத் தெரு, சென்னை-20, செல்: +91 9444120582
prednisone 30 mg daily: http://prednisone1st.store/# prednisone 20mg cheap
non prescription erection pills best ed pills non prescription ed treatment review
buy mobic without dr prescription: buying generic mobic without a prescription – where can i buy generic mobic tablets
cost of propecia pill order cheap propecia prices
how can i get generic mobic pill how can i get mobic without rx where to get cheap mobic without rx
new ed pills: best ed drug – men’s ed pills
amoxicillin 500mg capsules uk buying amoxicillin in mexico – amoxicillin 500mg capsule
amoxicillin 250 mg price in india amoxicillin price without insurance – amoxicillin 500 mg tablet price
https://cheapestedpills.com/# buy ed pills
pharmacy canadian legitimate canadian online pharmacies
mens erection pills: buying ed pills online – buy erection pills
buy cheap amoxicillin: amoxicillin pills 500 mg amoxicillin 500
azithromycin amoxicillin order amoxicillin online – amoxicillin 500 mg for sale
canadian family pharmacy canadian drug pharmacy
https://cheapestedpills.com/# cheap ed pills
propecia sale order generic propecia pills
amoxicillin cost australia over the counter amoxicillin canada – buy amoxicillin online uk
http://indiamedicine.world/# buy medicines online in india
canadian medications: canadianpharmacy com – canada drugs online reviews
http://mexpharmacy.sbs/# mexico drug stores pharmacies
best online pharmacies in mexico: reputable mexican pharmacies online – mexican pharmaceuticals online
pharmacy wholesalers canada: canadian online drugs – the canadian pharmacy
https://indiamedicine.world/# india online pharmacy
mexican mail order pharmacies: purple pharmacy mexico price list – mexican mail order pharmacies
https://indiamedicine.world/# best india pharmacy
http://indiamedicine.world/# п»їlegitimate online pharmacies india
mexico drug stores pharmacies: mexican drugstore online – reputable mexican pharmacies online
http://certifiedcanadapharm.store/# best canadian pharmacy
best online pharmacies in mexico: mexican pharmaceuticals online – mexican pharmaceuticals online
ivermectin lotion cost: generic ivermectin – ivermectin human
http://stromectolonline.pro/# ivermectin 5 mg
ivermectin tablets uk: ivermectin 6 – ivermectin drug
https://stromectolonline.pro/# ivermectin stromectol
ivermectin for sale: ivermectin oral solution – generic ivermectin cream
https://stromectolonline.pro/# ivermectin price
http://paxlovid.top/# paxlovid cost without insurance
paxlovid pharmacy: paxlovid for sale – paxlovid pill
https://paxlovid.top/# paxlovid generic
https://lipitor.pro/# generic lipitor 10 mg
https://misoprostol.guru/# Misoprostol 200 mg buy online
https://ciprofloxacin.ink/# buy cipro online without prescription
https://lisinopril.pro/# zestril canada
https://misoprostol.guru/# Misoprostol 200 mg buy online
http://avodart.pro/# how to buy generic avodart
http://mexicanpharmacy.guru/# mexican rx online
canadianpharmacyworld com: best canadian online pharmacy – reliable canadian pharmacy
Their global health insights are enlightening. https://gabapentin.world/# neurontin 200 mg price
mexico drug stores pharmacies – mexico pharmacy online – buying prescription drugs in mexico online
http://canadapharmacy24.pro/# canadian pharmacy online ship to usa
https://canadapharmacy24.pro/# onlinecanadianpharmacy
http://indiapharmacy24.pro/# cheapest online pharmacy india
https://stromectol24.pro/# stromectol tablets for humans for sale
http://paxlovid.bid/# buy paxlovid online
can you buy cheap mobic pills: buy mobic – get cheap mobic without a prescription
valtrex tablets online: valtrex antiviral drug – valtrex rx where to buy
buying valtrex: buy valtrex online – prescription medicine valtrex
Kamagra Oral Jelly п»їkamagra sildenafil oral jelly 100mg kamagra
Buy Cialis online: Buy Cialis online – Generic Tadalafil 20mg price
https://levitra.eus/# Levitra 20 mg for sale
Levitra tablet price Levitra 20 mg for sale Generic Levitra 20mg
https://kamagra.icu/# Kamagra tablets
https://levitra.eus/# Buy generic Levitra online
Buy Vardenafil 20mg Buy Vardenafil 20mg Vardenafil buy online
Cheap Cialis Cialis over the counter Cheap Cialis
http://kamagra.icu/# super kamagra
Viagra generic over the counter Viagra online price Generic Viagra online
https://kamagra.icu/# Kamagra tablets
Cheap generic Viagra online Sildenafil 100mg price sildenafil 50 mg price
https://kamagra.icu/# Kamagra 100mg price
https://kamagra.icu/# super kamagra
Sildenafil 100mg price viagra without prescription best price for viagra 100mg
https://canadapharmacy.guru/# canadianpharmacymeds canadapharmacy.guru
mexico pharmacies prescription drugs: reputable mexican pharmacies online – best online pharmacies in mexico mexicanpharmacy.company
mexican online pharmacies prescription drugs: mexico pharmacies prescription drugs – mexico drug stores pharmacies mexicanpharmacy.company
https://mexicanpharmacy.company/# mexican online pharmacies prescription drugs mexicanpharmacy.company
indian pharmacies safe: online pharmacy india – Online medicine home delivery indiapharmacy.pro
https://indiapharmacy.pro/# best india pharmacy indiapharmacy.pro
http://mexicanpharmacy.company/# mexico pharmacies prescription drugs mexicanpharmacy.company
buy prescription drugs from india: india pharmacy – best online pharmacy india indiapharmacy.pro
indian pharmacy online: buy prescription drugs from india – mail order pharmacy india indiapharmacy.pro
Online medicine order: online shopping pharmacy india – india pharmacy mail order indiapharmacy.pro
https://canadapharmacy.guru/# legit canadian online pharmacy canadapharmacy.guru
https://canadapharmacy.guru/# legitimate canadian pharmacy canadapharmacy.guru
pharmacies in mexico that ship to usa: reputable mexican pharmacies online – buying prescription drugs in mexico online mexicanpharmacy.company
https://mexicanpharmacy.company/# pharmacies in mexico that ship to usa mexicanpharmacy.company
purple pharmacy mexico price list: п»їbest mexican online pharmacies – buying from online mexican pharmacy mexicanpharmacy.company
http://indiapharmacy.pro/# п»їlegitimate online pharmacies india indiapharmacy.pro
canadapharmacyonline legit: canadianpharmacy com – canadian pharmacy price checker canadapharmacy.guru
https://mexicanpharmacy.company/# medicine in mexico pharmacies mexicanpharmacy.company
best india pharmacy: india pharmacy mail order – reputable indian online pharmacy indiapharmacy.pro
http://canadapharmacy.guru/# pharmacy wholesalers canada canadapharmacy.guru
canadian pharmacy victoza: best mail order pharmacy canada – best rated canadian pharmacy canadapharmacy.guru
https://mexicanpharmacy.company/# п»їbest mexican online pharmacies mexicanpharmacy.company
cat casino регистрация
купить Steam Deck
indian pharmacy: india pharmacy – cheapest online pharmacy india indiapharmacy.pro
http://doxycycline.sbs/# doxy
http://amoxil.world/# amoxicillin cephalexin
http://prednisone.digital/# prednisone acetate
http://amoxil.world/# amoxicillin 500mg capsules price
http://clomid.sbs/# where can i buy cheap clomid price
http://doxycycline.sbs/# doxycycline prices
Edwardcycle
https://www.google.com.ar/url?q=https://hottelecom.net/ua/
Любители манга хентай японской культуры и комиксов, обратите внимание: манга онлайн – отличный способ провести свободное время в одиночку. Большинство ресурсов предоставляют возможность читать хентай мангу бесплатно, что делает этот формат доступным для всех. Кроме того, многие из них имеют удобные приложения для мобильных устройств, что позволяет читать хентай мангу даже в дороге. Наслаждайтесь мангой хентай и погружайтесь в удивительный мир японских порно комиксов прямо сейчас!
где вводить промокод в 1xbet 2024
промокод 1xbet на сегодня бесплатно при регистрации
https://amoxil.world/# amoxicillin 500mg cost
100 mg prednisone daily: 20 mg of prednisone – order prednisone 100g online without prescription
https://doxycycline.sbs/# price of doxycycline
buy prednisone 20mg: where can i buy prednisone without a prescription – no prescription prednisone canadian pharmacy
https://canadapharm.top/# canadian pharmacy service
reputable indian pharmacies: best india pharmacy – india online pharmacy
https://withoutprescription.guru/# viagra without a doctor prescription
gnc ed pills: best ed pills non prescription – ed meds online
https://withoutprescription.guru/# п»їprescription drugs
legal canadian pharmacy online: canadian drug pharmacy – online canadian pharmacy reviews
https://mexicopharm.shop/# mexico pharmacies prescription drugs
best ed pills non prescription: 100mg viagra without a doctor prescription – prescription drugs without prior prescription
https://withoutprescription.guru/# cialis without a doctor’s prescription
reputable indian online pharmacy: cheapest online pharmacy india – reputable indian online pharmacy
https://mexicopharm.shop/# medication from mexico pharmacy
mexican mail order pharmacies: mexico drug stores pharmacies – mexico drug stores pharmacies
http://canadapharm.top/# canada rx pharmacy
best india pharmacy: india pharmacy mail order – indian pharmacy
https://edpills.icu/# best ed drug
https://levitra.icu/# Buy Levitra 20mg online
Kamagra tablets: cheap kamagra – Kamagra 100mg
https://sildenafil.win/# sildenafil prices in canada
ed pill: best medication for ed – cure ed
http://levitra.icu/# Vardenafil buy online
Cheap Levitra online: п»їLevitra price – Buy Vardenafil online
https://levitra.icu/# Levitra tablet price
Kamagra 100mg: Kamagra tablets – Kamagra Oral Jelly
zithromax canadian pharmacy zithromax antibiotic zithromax over the counter canada
http://ciprofloxacin.men/# where can i buy cipro online
buy doxycycline india Doxycycline 100mg buy online online doxycycline prescription
https://azithromycin.bar/# zithromax antibiotic without prescription
кэт казино
кэт казино
how to get amoxicillin: buy amoxicillin from canada – can i buy amoxicillin online
doxycycline doxycycline buy online doxycycline 100mg capsules
http://ciprofloxacin.men/# ciprofloxacin
doxycycline tablets canada: Buy Doxycycline for acne – doxycycline india buy
average cost of generic zithromax zithromax antibiotic buy azithromycin zithromax
http://ciprofloxacin.men/# ciprofloxacin 500 mg tablet price
amoxicillin 500mg over the counter buy amoxil where can i buy amoxicillin online
https://lisinopril.auction/# lisinopril 10 mg order online
lisinopril pill 40 mg prescription for lisinopril buy lisinopril 10 mg tablet
http://ciprofloxacin.men/# cipro 500mg best prices
24 hour pharmacy: cheapest online pharmacy – prescription without a doctors prescription
http://canadiandrugs.store/# canadian pharmacy near me
legitimate online pharmacies: buy prescription drugs online without doctor – online pharmacy no prescriptions
http://indiapharmacy.site/# cheapest online pharmacy india
Online medicine home delivery: indian pharmacies safe – п»їlegitimate online pharmacies india
paxlovid price http://paxlovid.club/# Paxlovid buy online
paxlovid india: cheap paxlovid online – Paxlovid over the counter